Dinamalar - No 1 Tamil News Paper

தமிழில் கையெழுத்து கட்டாயம் : சென்னை பல்கலை., அதிரடி
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail    Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2010,23:42 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 03,2010,02:39 IST

சென்னை : சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் தமிழ் மொழியில் கையெழுத்து போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கவும், காப் பாற்றவும் பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை பல்கலைக் கழகம் முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.இன்று முதல் சென்னை பல்கலை வளாகங்களின் பெயர் தமிழில் மாற்றப்படும். சேப்பாக் கம் வளாகம் தொல்காப்பியர் வளாகம் எனவும், மெரீனா வளாகம் பரிதிமாற் கலைஞர் எனவும், தரமணி வளாகம் மறைமலையடிகள் எனவும், சேத்துப் பட்டு வளாகம் சேக்கிழார் எனவும், மதுரவாயல் வளாகம் கம்பர் எனவும், கிண்டி வளாகம் பாரதியார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும். பிஎச்.டி., ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்துடன், தமிழிலும் மொழி பெயர்த்து சமர்ப் பித்தால், மொழி பெயர்ப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் குழு, தமிழ் மொழிபெயர்ப்பை பரிசீலித்து இந்த உதவித் தொகையை வழங்கும்.


செம்மொழித் தமிழ் வழி ஆராய்ச்சி உதவித் தொகை புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் பிஎச்.டி., ஆராய்ச்சியை தமிழில் மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் அறிவியல் பாடத் தில் 15 பேருக்கும், கலைப் பாடத் தில் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பை இந்த ஆண்டு துவங்க விரும்பினாலும், அக்கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்வு நடத்தி அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் வழங்கப்படும் படிப் பிற்கு பல்கலைக் கழக இணைப்பு பெற, இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ் வழி படிப்புகளுக்கு இணைப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை பல்கலைக் கழக ஆட்சி மொழியான தமிழை, நிர் வாகத்திலும் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இம்மாதம் 5ம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழில் கையெழுத்திட வேண் டும். தமிழ் மொழியில் கையெழுத்திடாத கோப்புகளை, துணைவேந்தர் பரிசீலிக்க மாட்டார். தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், தமிழில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுவர். செப்., 15ம் தேதிக்குள், அனைத்து துறைகளுக்கும் தமிழ் மொழி மென்பொருள் வழங்கப்படும். அதற்கு முன், தேவையான பயிற்சி கொடுக்கப்படும். ஆவணங்களும், கோப்புகளும் முழுமையாக தமிழ் மொழியில் உருவாக்கப்படும். "தமிழ் லெக்சிகன்' முதல் தொகுதி வரும் டிசம்பருக்கும் வெளியிடப்படும். தமிழ் டிக்ஷனரியில் இடம் பெறாத புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் ஆர்வலர்கள் புதிய தமிழ் வார்த்தைகளை, "tamilwordcorpus.unom@gmail.com' என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சென்னை பல்கலை இணையதளத்தை தமிழ் மொழியிலும் உருவாக்க முயற்சி மேற்கொள் ளப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணனை, துணைவேந்தர் திருவாசகம் பாராட்டினார்.


 

மேலும் பொது செய்திகள்:




வாசகர் கருத்து (49)
புனிதவதி - chennai,இந்தியா
2010-07-06 12:24:00 IST
தயவு செய்து சில ஆங்கில வழியில் மட்டும் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளுக்கு தமிழ் வழியிலும் மாற்றிட வழி செய்ய கேட்டு கொள்கிறேன்....
மும்பை நக்கீரன் - Mumbai,இந்தியா
2010-07-06 08:20:21 IST
தமிழில் கையெழுத்து என்பது நம்மை தமிழர் என்று உணர, தமிழர் என்று அடையாளப்படுத்த. இது ஒரு தொடக்கம். ஆங்கில அடிமைகள்தாம் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரிகள். அவர்கள் கேலி செய்வதை பொருட்படுத்த வேண்டாம். தேவை எனில் அவர்கள் பெற்ற தாயையும் கேலி செய்வார்கள்....
ராஜன் சுந்தர் - chennai,இந்தியா
2010-07-03 09:20:36 IST
firstly pass government order to ministers, MLA, and government employees to admit their children in tamil medium shools...
ராஜேஷ் - chennai,இந்தியா
2010-07-03 09:16:07 IST
முதலில் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு உழியர்களின் குழந்தைகளை தமிழ் மீடியத்தில் படிக்க சட்டம் போடவும்...
அக்ஸ் - USA,இந்தியா
2010-07-02 23:54:48 IST
லூசு தனமான ஐடியா...
சந்தானம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-07-02 23:39:35 IST
what about your children Mr.Thiruvasagam, they have studied english medium or tamil medium?...
Murugan - nellai,இந்தியா
2010-07-02 22:47:51 IST
தமிழில் கையழுத்துப் போட்டால் தமிழ் வளருமா? வேற எதாவது முயற்சி பண்ணுங்கள்....
raj - London,யுனைடெட் கிங்டம்
2010-07-02 22:22:11 IST
I disagree with this idea. Whilst Tamil is the language I speak at home it is clear that English is the international language of the world today. People who speak English well have a considerable advantage in both terms of education and business opportunity....
Mukundan - Guruvayur,இந்தியா
2010-07-02 22:19:47 IST
முதலிலில் துணை வேந்தர் நம்முடைய கலாச்சராதிர்க்கு ஏற்ற முறையில் தன்னுடைய கோட்டு, சூட்டு அலங்கார உடையை மாற்றி ஒரு பச்சை தமிழனாக பல்கலைகழகத்திற்கு வர முயற்சிக்கவும்....
டிப்டாப் - Pondicherry,இந்தியா
2010-07-02 21:39:25 IST
வாழ்த்துக்கள். தமிழர்கள் அனைவரும் எங்கும் எதிலும் முடிந்தவரை தமிழை உபயோகிக்க வேண்டும்....
2010-07-02 21:25:32 IST
தமிழ் தெரியாதவங்க எல்லாம் தமிழ்ல கையெழுத்து போடணுமா? துணை வேந்தரை ஊர விட்டு ஒதுக்கி வைக்கறேன்....
முருகனடிமை - கோவை,இந்தியா
2010-07-02 20:52:22 IST
இந்த மனிதர் ஒரு ஜால்ரா துணைவேந்தர் ஆவதற்கு அடிப்படை தகுதி இல்லாதவர். கலைஞர் குடும்பத்துக்கு எடுபுடியாக இருப்பதால் இரண்டு முறை துணைவேந்தர் ஆனவர். இவரிடம் பிறகு என்ன எதிர்பார்க்க முடியம் .. அப்துல் கலாம் இன்றும் பேராசிரியராக வகுப்பு எடுக்கின்றார். இவர் என்றாவது எதாவது செய்தது உண்டா! சிந்தியுங்கள் முருகனடிமை கவுண்டன்பாளையம் கோவை...
பாண்டியன் - Chennai,இந்தியா
2010-07-02 19:38:34 IST
முதல்லே உங்க பல்கலை கழக பெயரை "சென்னை" என்று மாற்றுங்க!...
பாண்டியன் - Chennai,இந்தியா
2010-07-02 19:37:44 IST
முதல்லே உங்க பல்கலை கழக பெயரை "சென்னை" என்று மாற்றுங்க!...
RAMJEE - Bangalore,இந்தியா
2010-07-02 19:07:13 IST
The Vice-Cheancellor of the Madras University has NOT applied his mind while issuing such a diktat to the employees of the University. He cannot and should NOT compel anyone to sign in TAMIL .. this is nothing but an infringement of the fundamental rights guaranteed under the Indian Constitution .. This order will not hold water in a Court of Law .. The Universities are an Independent wing and there is NO NECESSITY that they have to fall in line with a Govt of the day .. Let the Hon'ble VC dig into the old files & other documents when Dr A L Mudaliar was at the helm of affairs. As he wore an impeccable Turban, the Dignity of the Instittion was like-wise maintained to the envy of other VC-s in the country & abroad. Thiruvaachagam would do well to retrace his HASTY STEPS to maintain the fair name & prestige of this ancient, world-renowned 'Varsity .....
மோகன் - sansebastian,ஸ்பெயின்
2010-07-02 18:53:52 IST
அட முட்டாள்களா, தமிழ் வளர என்னமாய் பாடு படுகிறார்கள். தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் தொழில்சாலைகளை பெருக்கி மக்களுக்கு வேலை கொடுங்கள். பிறகு தமிழ் தானாக வளரும். யாரும் அதை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் வாதிகள் அனைவரும் முன்னுதாரணமாக தனது வாரிசுகளை நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்க வைத்து தங்களது பெருந்தன்மையை காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு இங்கு வந்து கூப்பாடு போட்டு அடுத்தவன் பொழப்பில் மண் அள்ளி போடா கூடாது. துணைவேந்தர் திருவாசகம் அவர்களின் வாரிசுகள் தமிழில் மட்டும் தான் படிக்கின்றனவா!!!!!!...
RAMJEE - Bangalore,இந்தியா
2010-07-02 18:53:21 IST
தமிழக பல்கலை துணை-வேந்தர்களது செயல்பாடுகள் விநோதமாகவும், வேதனை தருவதாகவும் உள்ளது .. ஒருவரது கை-எழுத்து என்பது அவரது தலை-எழுத்துக்கு நிகராகும் .. அவரது பதவி, வயதை பொறுத்து சிறுசிறு-மாற்றங்கள் ஏற்கப்படலாம் .. ஆனால் இம்மாதிரி தமிழில் தான் அனைவரும் கையெழத்து இடுதல் வேண்டும் என கட்டாயப்படுத்துதல் ஒரு குடிமகனின் அடித்தள உரிமையை பறிக்கும் செயலாகும் .. நீதி மன்றத்தில் இத்தகைய கெடுபிடி உத்தரவுகள் நிலைக்காது .. பல்கலை கழகங்கள் தனித்தன்மை வாய்ந்தவை .. அரசுக்கு சாமரம் வீசுவது அழகல்ல ..டாக்டர் ஏ எல் முதலியார் துணை-வேந்தராக செயலாற்றிய பழம் கோப்புகளைப்பார்த்து திருவாசகனார் திருத்திக்கொள்ளுவது தாம் சார்ந்த உயர் கல்வி நிறுவனத்திருக்கு பெருமை சேர்க்கும் !!....
சின்னகண்ணு - COIMBATORE,இந்தியா
2010-07-02 18:21:07 IST
இந்த மாதிரி ஆளுககிட்டதான் கலைஞர் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும். அவர் பேர கெடுக்கறது இவங்களேதான்....
பிரேம்குமார் - Surat,இந்தியா
2010-07-02 17:42:34 IST
இது ஒரு இனிய தொடக்கமாக அமைய வாழ்த்துக்கள்...
த.Arulmony - Chennai,இந்தியா
2010-07-02 17:07:34 IST
Madras University known for its tradition and high quality Education. Why they sign in Tamil. Will it improve the quality of Education ? Improve standard? What happen now? Why they could not implement before? Its look like something different? OK. If something help our students and make them eminent scholars, we have to appreciate .But I dont think signature kind of thing improve our educational standerd. Universities are for signing in Tamil or to gain knowledge which available in any languages? Do not try to small? try to expand and gather knowledge from other parts of the world and other languges . யாதும் oorai ஏவரும் கேழீர்...
FAISAL PEER MOHAMED - Glasgow,யுனைடெட் கிங்டம்
2010-07-02 17:03:36 IST
I don't think Mr. Thruvaskam's movement towards signature in tamil work.This is simply good for nothing. This clearly shows that he wants to support a party for some aspects. Cheers Faisal...
parthi - mumdai,இந்தியா
2010-07-02 17:01:30 IST
தமிழ் வளர மலர இன்னும் முயற்சி செய்க. உலக அளவில் போட்டி நடத்து. wil can develop that....
பத்ரி - Chennai,இந்தியா
2010-07-02 15:50:57 IST
சரி தான். வேற்று மாநில மாணவர்களும் பேராசிரியர்களும் இனிமேல் தமிழ் நாட்டிற்கு தேவையில்லை போலும்.. தமிழ் நாட்டு மக்களெல்லாம் இனிமேல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டலாம்.. !!!...
vasu - doha,கத்தார்
2010-07-02 15:45:18 IST
யோவ்! உங்க தமிழ் பற்றுக்கு அளவில்லாம போயிடுச்சே! இப்பிடில்லாம் கையெழுத்து போட்டால் தமிழ் வளரும்னு யார்யா சொன்னது? மஞ்சதுண்டார் டுபாகூர் ஒன்னு. நீ டுபாகூர் ரெண்டு. உங்களையெல்லாம் நெனச்சா எனக்கு சிரிப்பாதான்யா வருது. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? அப்படியே சைக்கிள் பெடல், டயர், ரிம், spokes , செயின் எல்லாத்துக்கும் தமிழ்ல தான் சொல்லனும்னு சட்டம் போடுங்க! உடனே எங்களுக்கு இருவத்தி நாலு மணி நேரமும் கரண்டு வந்துடும். அப்புறம் கர்நாடகாவும் கேரளாவும் தண்ணிய விட்ருவான். போங்கய்யா போய் எங்களுக்கு வேலைக்கு ஆவரத யோசிங்க!...
Sundaram - Bangalore,இந்தியா
2010-07-02 14:25:19 IST
மிக சிறந்த முன் உதாரணம். பாராட்டுக்கள். I would like to hear more from other institutions....
Dhamodharan - Chennai,இந்தியா
2010-07-02 14:14:09 IST
It is ridicules decision, guess this VC is putting his effort to please someone. I am a Tamil enthusiast, but this kind of decision things difficult. Please VC, stop with this, don't make decision like all courses will be conducted only in Tamil, It will become difficult for us to survive in TamilNadu itself....
Mohammed Ali - Trichy,இந்தியா
2010-07-02 14:13:11 IST
துதி பாடுவது உங்களுக்கு வேணா பயனளிக்கும். ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பது ரொம்ப 'ஓவர்'........
siva - Chennai,இந்தியா
2010-07-02 14:05:42 IST
இந்த காமெடி எதுவும் பண்ணாமல் உருப்படியாக தமிழ் வளர எதாச்சும் செய்யுங்கய்யா.. ஒரு ஆரம்பத்துக்கு எல்லோரும் பல்கலை வளாகத்தில் தமிழில் பேச சொல்லலாம் .....
ashok - newyork,இந்தியா
2010-07-02 11:40:39 IST
signature in tamil they should start from schools,this is not the right place to implement.so they need to reconsider...
இரவிக்குமார் - villupuram,இந்தியா
2010-07-02 11:30:11 IST
நல்ல செய்திதிதன் பின்பற்றுங்கள்...
குக - India,இந்தியா
2010-07-02 11:01:08 IST
கையழுத்து எப்படி போடுவது என்பது அவர்களின் விருப்பம். இதை எப்படி கட்டாயம் ஆக்குவது. இது நல்லதா படல....
குக - India,இந்தியா
2010-07-02 11:01:04 IST
கையழுத்து எப்படி போடுவது என்பது அவர்களின் விருப்பம் அல்லவா!!. இதை எப்படி கட்டாயம் ஆக்குவது. இது சட்டப்படி செல்லுமா? பாஸ்போர்ட், பேங்க் அக்கௌன்ட், PAN கார்டு மாற்றுவது என்பது எவ்வளவு கடினம்?...
koneswaransaro - Trincomalee,இலங்கை
2010-07-02 09:21:38 IST
கையெழுத்தையே தமிழில் போடத் தயங்குபவர்கள் தமிழை வளர்க்கிறேன் என்றால் யார் நம்புவார்கள்? ஆனாலும் ஒரு சந்தேகம்... ஸ்டாலின் என்ற தமிழ்க் கொடியின் குழந்தை தமிழில் கையெழுத்துப் போடுவதானால் தகப்பன் முதலெழுத்தை ஸ் என்று போட்டால் பாம்பின் குட்டி போலல்லவா சீறுகிறது?...
Pragasam - Singapore,இந்தியா
2010-07-02 09:16:00 IST
வணக்கம், நன்றி, மன்னிக்கவும் என்ற சொற்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். அது போலத்தான் தமிழ் உணர்வும் இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். வெறும் கையெழுத்தால் அல்ல....
விஜய் - USA,இந்தியா
2010-07-02 09:07:32 IST
எல்லாம் சரி, ஆனால் இவர் போஸ் கொடுப்பது கோட் சூட் ல. இதை எங்கு போய் சொல்வது!!!! இவன் தமிழ் தமிழ் என்று சொல்லி வேலை வாங்கி இருப்பது நல்லா தெரியுது....
சாமி - Tirupur,இந்தியா
2010-07-02 08:59:50 IST
ஜால்ரா கோஷ்டிகள் இருக்கும் வரை என்றுமே நாடு உருப்பட்டதா தெரியவில்லை. இப்படியே போனால் தமிழன் தமிழ்நாட்டை விட்டு வெளியே போகாமல் ஒரு சிறிய வட்டத்திலே ஒடுங்கிவிடுவான். அறியாமை உள்ளம் கொண்ட நாளைய சமுதாயம் உருவாக்க முயல்கிறார்கள். ஏனெனில் அறிவு வந்துவிட்டால் ஆட்சிக்கு பிரச்சனை அல்லவே????????????????...
D.M. R - California,யூ.எஸ்.ஏ
2010-07-02 08:48:41 IST
ஜால்ரா அடிப்பது தான் பிழைக்கவும் பதவியில் நீடித்து இருக்கவும் சிறந்த வழி என்று திருவாசகம் நன்றாக புரிந்துகொண்டு செயல் படுகிறார் என்பது இவர் பேச்சிலிருந்தே தெரிகிறது. இவ்வளவு ஆர்வமுள்ள இவர் கோட் சூட் போன்ற மேல்நாட்டு உடைகளை அணியாமல் தமிழ் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து கொண்டு (கோவணம் தவிர்த்து) பேட்டி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.காலஞ்சென்ற மா மேதை திரு இலக்குமணசாமி முதலியார் போன்றவர்கள் கம்பீரமாக துணை வேந்தராக இருந்த இடத்தில் தற்போது திருவாசகத்தின் செயல்பாடுகள் சிரிப்பைத்தான் வர வழைக்கிறது....
bala - Try,இந்தியா
2010-07-02 08:36:32 IST
துணை வேந்தர் தனது அடிமை குனத்தை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவதற்காக தேவையில்லாத இந்த ஆர்ப்பாட்டம் செய்கிறார். தமிழுக்கு இவர்களால் தான் ஆபத்தே ஒழிய வேறு யாராலும் இல்லை. கழக ஆட்சி வந்த நாளிலிருந்து தமிழன் குடிக்கு அடிமையாகி இரண்டு தலைமுறைகள் தனது பொறுப்புகளை மறந்து இவர்களுக்கு தொண்டு செய்து தமிழ் நாடு கெட்டு விட்டது. தமிழ் மக்களே விழித்தெழுங்கள். பொருப்புள்ளவர்களை தேர்ந்தெடுங்கள். இல்லைஎன்றால் நமது நாகரீகம் அழிந்துவிடும்....
அல்ல Pitchai - Moothandaki,கிரிகிஸ்தான்
2010-07-02 08:33:47 IST
கல்வி தரத்தை உயர்த்த நல்ல திட்டத்தை கொண்டு வர பாடு படு. அதை விட்டு சும்மா மஞ்சள் துண்டு பெரியவர்க்கு ஜால்ரா அடிகாதே. உன்னை துணை வேந்தர் ஆக்கியதுற்கு எங்கள் புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். வாய மூடுயா கோமாளி...
navaneethakrishnan - sharjah,இந்தியா
2010-07-02 08:30:29 IST
ஜால்ராக்களே, இது நடைமுறைக்கு சாத்தியமா என்று சிந்தியுங்கள். உங்கள் வீட்டு குழந்தைகளை தமிழ் வழி கல்விக்கு அனுப்புவீர்களா? தமிழ் மீது உள்ள பற்றையும், முக்கியத்துவத்தையும் வளர்ப்போம். வெறியை ஊட்ட வேண்டாம். ஏன், ஐயா கலைஞருக்கு தெரியாதா மூத்த மகன் அழகிரி படும் பாடு? ஐயா துணைவேந்தர் அவர்களே மூளையை அடகு வைக்க வேண்டாம். முன்னேறிய தமிழர்கள் நான் ஒரு தமிழன், என் தாய் மொழி தமிழ், தமிழர்கள் மத்தியில் தமிழ் பேசுவோம் என்ற மனப்பான்மை வந்தாலே, இளைஞர்கள் மத்தியில் தமிழ் வளரும். ஐயா கலைஞர் குடும்பத்திலும், உங்கள் குடும்பத்திலும் எத்தனை பேர் தமிழ் வழியில் கல்வி பயில்கிறார்கள்? தமிழை வளர்க்க பாடு படுவோம். ஆனால் வாழ்க்கையை அடகு வைத்து, மொழியை வளர்க்க முடியாது என்பதை புரிந்த நீங்கள், தெரியாதது போல் நடிக்க வேண்டாம். கையெழுத்து மாத்திரம் தமிழை வளர்த்து விடாது. நீங்கள் துணைவேந்தர் என்பதை மறந்து விட வேண்டாம். மற்றவர்கள் மத்தியில் வெறுப்பினை வளர்க்காமல், மாணவர்கள் மத்தியில் தமிழ் பற்றினை வளர்க்க வழி தேடுங்கள். வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம்!...
V.Vijayabasker - Chennai,இந்தியா
2010-07-02 08:00:26 IST
Tamiliz figargala mattum site adikka sollathingappa....
சங்கர் - singapore,இந்தியா
2010-07-02 07:35:23 IST
மிகவும் நல்ல செய்தி...இதேபோல அனைவரும் பின் பற்றுங்கள் ....
supramani - chennai,இந்தியா
2010-07-02 06:39:25 IST
stupid decision. Ask your kids to do so.....
Krishnan - NewYork,யூ.எஸ்.ஏ
2010-07-02 06:01:19 IST
Incentives are good. That is the right way to go. But this signature in Tamil is ridiculous....
செல்வன் - chennai,இந்தியா
2010-07-02 05:54:34 IST
இவர் எப்படி கலைஞர் வளாகம் மற்றும் அழகிரி வளாகம் அமைக்காமல் விட்டார்?...
DR.T.E.PARTHASARATHY - NANGANALLURCHENNAI,இந்தியா
2010-07-02 05:50:01 IST
A WELCOME STEP.TO BEGIN WITH A COMMITTEE MAY BE FORMED TO SELECT SUBJECTS THAT MAY BE OFFERED IN TAMIL ALSO.AT THE SAME TIME OTHER LANGUAGES SHOULDNOT BE DISCOURAGED.IT WILL TAKE 3-5 YEARS TO MAKE GOOD PREPARATION THAT WILL BE EFFECTIVE.IT IS ALSO IMPORTANT TO ELICIT VIEWS OF STUDENTS....
kamaloodin - toronto,கனடா
2010-07-02 03:00:52 IST
படிச்சவர்கள் இருப்பதாக நான் நினைத்திருந்தேன்.எல்ல இடத்திலும் கையெழுத்தை மாற்றமுடியுமா ? போய்யா ஜால்ரா...
N T Chellappa - Natal,பிரேசில்
2010-07-02 02:03:41 IST
Tamil language affinity is a welcome notion but obsession of it is a harmful to national integration. The act sidelines many of the professors of non-Tamil origin who work for the upward mobility of Madras University through their eminence in science and Technology. It is unfortunate to register Vice-Chancellor´s sudden and flourishing enthusiasm for Tamil. To me, it appears the enthusiasm of a converted religious persons and their borrowed passion. I am a dislocated Tamil working in far off country where Portuguese is a national language and English co-exist harmoniously in University Education. Now China is clamoring to equal India by implementing English language in core curriculum while our VC looking sadly inward....
ஓகே yes - hofuf,,சவுதி அரேபியா
2010-07-02 00:47:37 IST
தமிழில் கையழுத்துப் போட்டால் தமிழ் வளருமா? சிந்தனைத் திறன் இல்லாதவர்களை து.வேந்தராகப் போட்டால் இப்படித் தான். தமிழ் வளர்ச்சிக்கு நல்ல வழிகளைத் தேடுங்கள்- அறிவுப்பூர்வமாக....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)