பழநி: பழநி பழனியாண்டவர் கலை கல்லூரி காம்பவுண்ட் சுவர் அருகே பெரிய அளவு காளான்( 2கிலோ) முளைத்திருந்தது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. பெரிய அளவு காளானை பழநியில் பார்ப்பது முதல் முறை என கூறிய அவர்கள்,இது விஷத் தன்மை கொண்டதாக இருக்கலாம் எனவே சாப்பிட வேண்டாம் என ஆலோசனை தந்தனர். ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் காளானை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.
| வாசகர் கருத்து |