நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி, கருட சேவை வெகு சிறப்பாக நடந்தது. திருமலை மாடவீதிகளில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி காட்சியளித்தார்.
பக்தர்கள், கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், ஒரே நாளில், இரண்டு கோடியே 45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, செகந்திராபாத் நகரைச் சேர்ந்த ராகவன், களிங்கத்து பச்சை, சிகப்பு கற்கள் பதித்த, தங்கத்தினால் செய்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஒன்றை, நேற்று முன்தினம் காணிக்கையாக வழங்கினார். திருமலை அடிவாரத்தில், கலியுகதெய்வம் சீனிவாச பெருமாள், திருமலைக்கு பாதயாத்திரையாக செல்ல முதல் அடி வைத்த ஸ்ரீவாரி பாதம் அருகில், படி உற்சவம் சிறப்பாக நடந்தது.
| வாசகர் கருத்து |