சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.
| வாசகர் கருத்து |
பகுத்தறிவாம்,கொள்கையாம் போங்கடா !!!!! .............. வெங்கயம்களா ?????
|
by R Muruganandam,Al-Jubail,Saudi Arabia 23-11-2009 10:45:49 IST |
வெரி குட்; இத இத இததான் பகுத்தறிவு திராவிட பாரம்பரியம் அப்டீன்னு அம்பது வருஷத்துக்கும் மேல சொல்லிக்கிட்டு நம்ம காதுல பூ சுத்திக்கிட்டு இருந்தாங்க; அவுங்க தப்பா என்ன?
|
by பால ஸ்ரீனிவாசன் ,chennai ,India 23-11-2009 10:33:28 IST |
இதை அண்ணா அறிவாலயதிற்கும் கருணாநிதிக்கும் வீரமணிக்கும் சத்யராஜுக்கும் அனுப்பவும். என்னே ஒரு பகுத்தறிவு. ''கண்கள் பனிக்கிறது, நாக்கு தழுதழுக்கிறது, கவிதை சொல்ல மனம் வரவில்லை'' சூப்பர் டயலாக் .
|
by k Kumar,chennai,India 23-11-2009 06:46:54 IST |
ஊருக்கு உபதேசம்.. தலைவருக்கு வனவாசம்..
|
by s ஸ்ரீராம்,chicago,United States 23-11-2009 01:30:31 IST |