புவனேஸ்வர்: மாணவியை கடத்தி, கற்பழித்து நிர்வாணமாக மொபைல் போனில் வீடியோ படம் எடுத்த, எம்.பி.ஏ., மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நயபள்ளி என்ற இடத்தில், இரவு ஒன்பது மணி அளவில் இந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டாள்.
வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்தியுள்ளனர். சில கிலோமீட்டர் தூரம் காரை ஓட்டிச்சென்று, ஜெயதேவ் விகார் என்ற பகுதியில், ஒரு உணவு விடுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச்சென்றனர். அங்கு, இருவரும் கற்பழித்தனர். பின், நிர்வாணமாக மொபைல் போனில் வீடியோ படமும் எடுத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு பின், அந்த பெண்ணை விரட்டி விட்டனர்.
வெளியே வந்த அந்த மாணவி அழுவதை பார்த்து பக்கத்தில் உள்ள சிலர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்துவந்து விசாரணை செய்து, விடுதியில் இருந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் ஒருவர் பெயர் சுவாஸ்தி மகபாத்ரா; இன்னொருவர் சஞ்சய் சுகாசியா. இவர்களில் மகபாத்ரா, எம்.பி.ஏ., மாணவர். சுகாசியா, உணவு விடுதியை நடத்தி வருபவர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பெண்ணுக்கு இந்த இருவரையும் தெரியுமா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. மொபைல் போனில் நிர்வாண வீடியோ எடுத்த இவர்கள், அதை "லேப்டாப்' கம்ப்யூட்டரில் நகல் எடுத்து வைத்துள்ளனர். அதனால், நீலப்படம் தயாரிக்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது' என்று தெரிவித்தனர்.
| வாசகர் கருத்து |
Manu needhi system should be implemented for these type of crimes. These criminals should be taken to all over India in a steel metal cage with out dress.
|
by R Gopu,Chennai,India 11/4/2009 7:26:16 PM IST |
Strict Laws like Saudi should be adhered... If you touch any girl you will be dead that fear should come among those culprits then only these crimes will be stopped
|
by H Althaf,Doha,Qatar 11/4/2009 5:49:57 PM IST |
''DOG''
|
by M RAJESH,CHNNAI,India 11/4/2009 3:39:44 PM IST |
பெண் சுதந்திரம் இன்னும் பிறக்கவில்லை. நம் நாட்டில் வேட்டை நாய்கள் அதிகமாக நடமாடுகின்றன தமிழ்
|
by sdr sundar,united arab emirates,India 11/4/2009 1:04:03 PM IST |
On the spot police should have shoot them.
|
by S Santhosh,coimbatore,India 11/4/2009 12:54:14 PM IST |
நடந்தது தப்பல்ல நண்பரே. மாபெரும் மனிதக் குற்றம் / சமூக-தீவிரவாதம். அதற்காக அம்மாணவர்களை உடனடியாக தாராளமாகத் தூக்கில் போடலாம். இதற்காகத் தான், நல்ல எண்ணங்கள், நல்ல நடத்தை முதலியனவேண்டும் என அறிவுருத்தப்படுகிறது. ஆனால், மேற்கத்தைய கலாச்சாரம் அளவிற்கு அதிகமாகத் திணிக்கப் படுவதால், செக்ஸ் என்பது, ஏதோ வாங்கித் தின்கின்ற பொருள் மாதிரியான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது, அத்தகைய வக்கிர உள்ளங்கள் இந்த மாதிரியான தீவிரவாத செயல்களில் ஏடுபடுகின்றன. ஆகவே, இத்தகைய மிருகங்களை மனிதர்களாக்க முடியாது.
|
by Vedam Vedaprakash,Chennai,India 11/4/2009 12:35:34 PM IST |
இவனுக்கு நன்றாக புரியும் படி இந்த அரசு பாடம் கற்பிக்க வேண்டும். இனி இந்த மாதி தப்பு நடக்க கூடாது
|
by mr கனி,kuala lumpur,India 11/4/2009 9:35:58 AM IST |
மாணவியை கற்பழித்து நிர்வாண வீடியோ : படிக்கும்போதே நம் மனம் கதி கலங்குகிறது. நம் தமிழகத்தில் நடந்து கொண்டு வரும் இன்னொரு காட்சி. பணக்காரப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அழைத்துசெல்லும் வாகனங்களில் நடக்கும் காட்சியை யாரிடம் சொல்வது? பெற்றோர்கள் ஒரு புறம் செல்லுகிறார்கள் . ஆளுக்கு ஒரு கார், வாகன ஓட்டி, தனி வாழ்க்கை, ஆனால் இந்த குழந்தைகளுக்கு என்று யார் இருக்கிறார்கள்? இவர்களுக்கும் ஒரு தனி கார், எல்லாமே தனித் தனி... இப்படி இருக்க குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறைகொண்டவர்கள் யாருமே இல்லாத காரணத்தால், இவர்கள் செல்லும் வாகனத்திலேயே எல்லாமே நடக்கிறது. இந்த காட்சியினை யார்வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் காணலாம். . நாம் பார்ப்பது அவர்களுக்கே தெரியாது? பல மயக்கங்களில் இருக்கும் அவர்கள் தனி உலகத்தில் வீடு வருகிறார்கள். காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு வேலை போகும் நிலை, காரணம் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவ்வளவு வசதி படைத்தவர்கள். மேற்கண்ட தவறு ஈன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை அனைவரும் பார்ப்பதால் மன நிலை தடுமாறி நாமும் இந்து போன்ற தவறு செய்தால் என்ன என்று நினைத்து செயல் படுகின்றனர் இளைஞர்கள். பெற்றோர்களே இதற்க்கு காரணம். பிள்ளைகளை நல்ல வழியில் வளர்க்காததே இதற்க்கு முழு காரணம். Lion Dr S Sekar India
|
by Ln Dr S Sekar,Chennai,India 11/4/2009 7:59:23 AM IST |