Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
சம்பவம்
ஆற்றில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
நவம்பர் 07,2009,00:00  IST

தர்மசாலா: இமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டம் குல்லர் அருகில் உள்ள பானர் ஆற்றில், பஸ் ஒன்று நேற்று கவிழ்ந்தது. இதில், 25 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இமாச்சல பிரதேசம், ஜஸ்பூரில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று, காங்க்ரா மாவட்டம் ஜுவாலமுகி பகுதிக்கு சென்றது.



வழியில், குல்லர் அருகே, வளைவு ஒன்று இருப்பதை கவனிக்காமல் சென்ற போது, டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் பஸ் பானர் ஆற்றில் விழுந்தது.இதைத் தொடர்ந்து, சம்பவ பகுதியில் இருந்து ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும், அருகில் உள்ள டாண்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க் கப்பட்டுள்ளனர். இதில் பலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் சம்பவம் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்