டயானா (1961-1997)::

1. பி.சி. ராய் (1882-1962): டாக்டர் பிதான்சந்திரராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர். மருத்துவத்துறையில் முக்கிய பணியாற்றியவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் சிறந்த கல்வியாளர். பி.சி. ராய் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார். இவரது சேவை மனப்பான்மையை மதிக்கும் வகையில் தான் டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது வழங்கப்படும் பி.சி. ராய் விருது மருத்துவ உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.
அறிவிக்கப்படாத உலக அழகியாக திகழ்ந்தவர் வேல்ஸ் இளவரசி டயானா. பிரிட்டிஷ் அரச குடும்ப வாரிசான சார்லசை 1981ல் கைப்பிடித்த இவர் 1996ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பிறருடன் பழகுவதாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். பின்னர் சமூகசேவை, எய்ட்ஸ் விழிப்புணர்வு பணி, கண்ணிவெடி எதிர்ப்பு பிரசாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். டோடி அல்பயது என்ற நண்பருடன் பிரான்சில், காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு 36வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.