Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » மாணவர் காலண்டர்
<<    ஜூலை, 2010    >>

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
1
டயானா (1961-1997)::

1. பி.சி. ராய் (1882-1962):  டாக்டர் பிதான்சந்திரராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர். மருத்துவத்துறையில் முக்கிய பணியாற்றியவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் சிறந்த கல்வியாளர். பி.சி. ராய் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார். இவரது சேவை மனப்பான்மையை மதிக்கும் வகையில் தான் டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது வழங்கப்படும் பி.சி. ராய் விருது மருத்துவ உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.


அறிவிக்கப்படாத உலக அழகியாக திகழ்ந்தவர் வேல்ஸ் இளவரசி டயானா. பிரிட்டிஷ் அரச குடும்ப வாரிசான சார்லசை 1981ல் கைப்பிடித்த இவர் 1996ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பிறருடன் பழகுவதாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். பின்னர் சமூகசேவை, எய்ட்ஸ் விழிப்புணர்வு பணி, கண்ணிவெடி எதிர்ப்பு பிரசாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். டோடி அல்பயது என்ற நண்பருடன் பிரான்சில், காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு 36வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.



டயானா (1961-1997):

1. பி.சி. ராய் (1882-1962):  டாக்டர் பிதான்சந்திரராய் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர். மருத்துவத்துறையில் முக்கிய பணியாற்றியவர். சுதந்திர போராட்ட வீரரான இவர் சிறந்த கல்வியாளர். பி.சி. ராய் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம் பார்க்க இரண்டு ரூபாய் மட்டுமே நோயாளிகளிடம் வாங்கினார். இவரது சேவை மனப்பான்மையை மதிக்கும் வகையில் தான் டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது வழங்கப்படும் பி.சி. ராய் விருது மருத்துவ உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.


அறிவிக்கப்படாத உலக அழகியாக திகழ்ந்தவர் வேல்ஸ் இளவரசி டயானா. பிரிட்டிஷ் அரச குடும்ப வாரிசான சார்லசை 1981ல் கைப்பிடித்த இவர் 1996ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பிறருடன் பழகுவதாக இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். பின்னர் சமூகசேவை, எய்ட்ஸ் விழிப்புணர்வு பணி, கண்ணிவெடி எதிர்ப்பு பிரசாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். டோடி அல்பயது என்ற நண்பருடன் பிரான்சில், காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு 36வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.



2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
காமராஜர் (1903-1975)::

எளிமையின் அடையாளமாக போற்றப்படும் இந்தியத் தலைவர்களில் காமராஜர் முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்த போது மூத்த தலைவர்களை கட்சிப் பணிக்கும், இளைய தலைவர்களை ஆட்சிப் பணிக்கும் அனுப்பும் திட்டத்தை கொண்டு வந்தார். அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர் ஆற்றிய முன்னுதாரணப் பணிகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்று இலவச மதிய உணவுத்திட்டம்.

காமராஜர் (1903-1975):

எளிமையின் அடையாளமாக போற்றப்படும் இந்தியத் தலைவர்களில் காமராஜர் முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்த போது மூத்த தலைவர்களை கட்சிப் பணிக்கும், இளைய தலைவர்களை ஆட்சிப் பணிக்கும் அனுப்பும் திட்டத்தை கொண்டு வந்தார். அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர் ஆற்றிய முன்னுதாரணப் பணிகள் ஏராளம். அதில் முக்கியமான ஒன்று இலவச மதிய உணவுத்திட்டம்.

16
17
18
19
20
21
டி.வி. ராமசுப்பையர் (1908-1984)::

டி.வி.ஆர்., 1951ல் தினமலர் நாளிதழை நிறுவிய பெருமைக்குரியவர். சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றதோடு, காந்திய வாதியாகவும் திகழ்ந்தார். நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு வந்ததோடு நெல்லையில் மனோன்மணியம் பல்கலை., சித்த மருத்துவ கல்லூரி கொண்டு வர உதவினார். அரிஜன முன்னேற்றத்துக்கு பெரும் தொண்டாற்றியது, கட்டாய கல்வியை அமல்செய்ய உதவியது என இவரின் சமுதாய பணிகள் ஏராளம். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க முயற்சி மேற்கொண்டார். தமிழர் நலனுக்காகவும், தமிழக முன்னேற்றத்துக்காகவும் இவர் தனது பத்திரிகை வாயிலாக அயராது பாடுபட்டார்.

டி.வி. ராமசுப்பையர் (1908-1984):

டி.வி.ஆர்., 1951ல் தினமலர் நாளிதழை நிறுவிய பெருமைக்குரியவர். சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றதோடு, காந்திய வாதியாகவும் திகழ்ந்தார். நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு வந்ததோடு நெல்லையில் மனோன்மணியம் பல்கலை., சித்த மருத்துவ கல்லூரி கொண்டு வர உதவினார். அரிஜன முன்னேற்றத்துக்கு பெரும் தொண்டாற்றியது, கட்டாய கல்வியை அமல்செய்ய உதவியது என இவரின் சமுதாய பணிகள் ஏராளம். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க முயற்சி மேற்கொண்டார். தமிழர் நலனுக்காகவும், தமிழக முன்னேற்றத்துக்காகவும் இவர் தனது பத்திரிகை வாயிலாக அயராது பாடுபட்டார்.

22
23
திலகர் (1856-1920)::

இந்தியாவின் தீவிர சுதந்திர போராட்ட வீரர்களில் பாலகங்காதர திலகர் முக்கியமானவர். ஆங்கிலேய ஆட்சியை அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்த இவர் தனது "கேசரி' பத்திரிகை வாயிலாக சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த இவர் "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என முழங்கினார். ரஷ்ய புரட்சியிலும், லெனின் மீதும் ஈடுபாடு காட்டினார். பன்மொழி புலமை பெற்ற மக்கள் தலைவராக திகழ்ந்தார் திலகர்.


 


திலகர் (1856-1920):

இந்தியாவின் தீவிர சுதந்திர போராட்ட வீரர்களில் பாலகங்காதர திலகர் முக்கியமானவர். ஆங்கிலேய ஆட்சியை அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்த இவர் தனது "கேசரி' பத்திரிகை வாயிலாக சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த இவர் "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என முழங்கினார். ரஷ்ய புரட்சியிலும், லெனின் மீதும் ஈடுபாடு காட்டினார். பன்மொழி புலமை பெற்ற மக்கள் தலைவராக திகழ்ந்தார் திலகர்.


 


24
25
26
27
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954)::

கவிமணி தேரூரில் 1876ம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே கவிபுனையும் திறம் பெற்றிருந்த இவர் தனது 19ம் வயதில் குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால் "அழகம்மை ஆசிரிய விருத்தம்' என்ற சிறு நூலை வெளியிட்டார். இவர் கோட்டார் ஆரம்பப் பள்ளி, நாகர்கோவில் ஆசிரியப்பயிற்சிப் பள்ளி,  திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி இங்கெல்லாம் ஆசிரியப் பணியாற்றினார். 1940ல் சென்னை மாநில தமிழ் சங்கம் சார்பில் இவருக்கு கவிமணி பட்டம் வழங்கப்பட்டது. மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், இளந்தென்றல் போன்ற ஏராளமான புகழ் பெற்ற நூல்களை தமிழ் உலகுக்கு வழங்கியவர். ஆசிய ஜோதியும், உமர் கயாம் பாடல்களும் இவரது மொழிபெயர்ப்பு திறனுக்கு எடுத்துக்காட்டு.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954):

கவிமணி தேரூரில் 1876ம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே கவிபுனையும் திறம் பெற்றிருந்த இவர் தனது 19ம் வயதில் குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடிகொண்டுள்ள அம்பாளின் பெயரால் "அழகம்மை ஆசிரிய விருத்தம்' என்ற சிறு நூலை வெளியிட்டார். இவர் கோட்டார் ஆரம்பப் பள்ளி, நாகர்கோவில் ஆசிரியப்பயிற்சிப் பள்ளி,  திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி இங்கெல்லாம் ஆசிரியப் பணியாற்றினார். 1940ல் சென்னை மாநில தமிழ் சங்கம் சார்பில் இவருக்கு கவிமணி பட்டம் வழங்கப்பட்டது. மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், இளந்தென்றல் போன்ற ஏராளமான புகழ் பெற்ற நூல்களை தமிழ் உலகுக்கு வழங்கியவர். ஆசிய ஜோதியும், உமர் கயாம் பாடல்களும் இவரது மொழிபெயர்ப்பு திறனுக்கு எடுத்துக்காட்டு.

28
29
ஈஸ்வர்சந்த் வித்யாசாகர் (1820-1891)::

 19ம் நூற்றாண்டில் கல்வியாளராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்தவர் ஈஸ்வர் சந்த் வித்யாசாகர். ஆச்சாரமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்த இவரது இலக்கிய ஞானத்தை பாராட்டி சமஸ்கிருத கல்லூரி இவருக்கு "ஐஸ்வர்ய சந்திரர்' என்ற பட்டத்தை வழங்கியது. விதவைகள் மறுமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்க போராடியவர். வங்காள மொழியின் எழுத்து வடிவத்தை மாற்றியமைத்ததிலும் இவருக்கு பங்குண்டு.

ஈஸ்வர்சந்த் வித்யாசாகர் (1820-1891):

 19ம் நூற்றாண்டில் கல்வியாளராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும் திகழ்ந்தவர் ஈஸ்வர் சந்த் வித்யாசாகர். ஆச்சாரமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்த இவரது இலக்கிய ஞானத்தை பாராட்டி சமஸ்கிருத கல்லூரி இவருக்கு "ஐஸ்வர்ய சந்திரர்' என்ற பட்டத்தை வழங்கியது. விதவைகள் மறுமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்க போராடியவர். வங்காள மொழியின் எழுத்து வடிவத்தை மாற்றியமைத்ததிலும் இவருக்கு பங்குண்டு.

30
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968)::

இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்தவர் இவர். 1912ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955ல் சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டை நிறுவினார். 1927-1930ல் சென்னை சட்டசபை உறுப்பினராகவும் துணை தலைவராகவும் இருந்தார். 1930ல் காந்தியடிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968):

இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தின் புதுக்கோட்டையில் பிறந்தவர் இவர். 1912ல் டாக்டர் பட்டம் பெற்றார். 1955ல் சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டை நிறுவினார். 1927-1930ல் சென்னை சட்டசபை உறுப்பினராகவும் துணை தலைவராகவும் இருந்தார். 1930ல் காந்தியடிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

31