இஸ்லாமாபாத் : பாகிஸ்தானிற்கு 5 ஆயிரம் மெகாவாட்ஸ் வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகை நியூஸ் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி சமீபத்தில் தென்கொரிய தலைநகர் சியோலில் சந்தித்துப் பேசினர். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் கிலானி, மன்மோகன் சிங்கிடம் மின்பற்றாக்குறையால் தாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே மின்உதவி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில், 5 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
“மின்சார வெட்டு எப்போது நீங்கும்?” – அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன் பேட்டிலிருந்து ஒரு பகுதி
“அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் மின்சாரப் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்து விலைக்கு மின்சாரம் வாங்க முடியாது. வட மாநிலத்தில் இருந்து வாங்கினாலும், அதை கொண்டு வருவதற்கான மின் தொடரமைப்பு வசதி, ஒரே வழித்தடம்தான் உள்ளது. 2 ஆயிரம் மெகாவாட்தான் அந்தப் பாதையில் கொண்டு வர முடியும். மின்சார பற்றாக்குறையில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் இந்தப் பாதை மூலம்தான் மின்சாரத்தைப் பெறுகின்றன. ஆகவே, நான்கு தென்மாநிலங்களும் இந்த பாதையை மட்டுமே நம்பியிருப்பதால், எந்த மாநிலமும் தான் கொள்முதல் செய்யும் அளவுக்கு முழுமையாக மின்சாரத்தை கொண்டு போக முடியவில்லை. “உதாரணமாக, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, குஜராத்தில் இருந்து ஒரு யூனிட் 4 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில் 500 மெகா வாட் கொள்முதல் செய்ததில், 235 மெகா வாட்டை மட்டுமே கொண்டு வர முடிந்தது. மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பே இது பற்றி சிந்தித்து, திட்டமிட்டு கூடுதல் மின் தொடரமைப்புப் பாதைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இதைச் செய்யத் தவறிவிட்டது. இதனால் இப்போதைய தட்டுப்பாட்டை போக்க வடக்கில் இருந்து விலைக்கு வாங்கலாம் என்றாலும், மின்சாரத்தைக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உள்ளது. இது தான் உண்மை , வட மாநிலத்தில் மின் உற்பத்தி அதிகமாக இருந்தாலும் ,தென் மாநிலத்திற்கு கொண்டு வர முடியாது ,இருக்கின்ற மின் வழி தடம் 5000MW தான் கொண்டு வர முடியும் ,அந்த வழி தடமும் நான்கு மாநிலத்தால் உபயோகிக்க படுகிறது,அதற்கான வேலைகளை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் , பாகிஸ்தான் மின்சாரம் வேண்டும் என்றாலும் ,அதற்கான வழி தடம் ஏற்படுத்த வேண்டும் அல்லது ஏற்கனவே ஏற்படுத்தி இருக்கலாம் , இருந்தாலும் பஞ்சாப் ,காஷ்மீரில் உள்ள அதிக மின்சாரத்தை விற்பதானால் தவறு இல்லை ,கொஞ்சம் கமிசனும் கடைக்கும் என்பதால் அது சிக்கிரம் நடக்கும்,
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று வீரப்பா வசனத்தை சோனியாவும் சிங்கும் இந்த தமிழ்நாடும் இந்த தமிழ் மக்களும் நாசமாய் போகட்டும் நங்கள் சிங்கலனையும் பட்டாங்கலயும் பத்திரமாக பாதுகாப்போம்... தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சமாளிக்க எங்களுக்கு தெரியும் என்னா ஓர் MP ஒரு இணை அமைச்சர் பதவிய தூக்கி போட்டா தமிழ் நாடே நம்ம கைலதான் அது காவேரி பிரச்சனைய இருந்தாலும் சரி முல்லை பெரியாரலும் சரி ஈழ ப்ரிச்சனைனாலும் சரி ...ஆனா சோனியாஜி தமிழ்நாட்டு மக்கள் எவ்ளோ அடிச்சாலும் தாங்குரங்க வாங்கிக்கிட்டு கடைசியா சொல்றாங்க பாருங்க நீங்க ரொம்ப நல்லவங்கநு ...
கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்......நம் மக்களை பலி கொடுத்து நம் எதிரிக்கு மின்சாரம் கொடுப்பார்களாம் ? அவர் கேட்டாராம் இவர் தாரளமாக தருகிறோம் என்று சொல்லி விட்டு வந்தாராம்....என்ன தான் இருந்தாலும் அவருடைய பிறப்பு வூர் இன்றைய பாக்கிஸ்தானில் தானே இருக்கிறது....ஊர் பாசம் யா ஊர் பாசம்...
they are not giving it free, if TANGEDCO can pay they still can get electricity. For 5 months jaya and 3 months by EC has unpaid dues to private power plants thats why there is electricity blackouts. please learn the facts first. Moreover Dinamalar news paper is confusing its readers with false aspects attached to news produced....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.