கருத்தை பதிவு செய்ய
புதுடில்லி : விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி, பார்லிமென்டின் முன்பு, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று லோக்சபாவில் விலைவாசி பிரச்னை குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் சபாநாயகர் மீரா குமார்,"தற்போது நாட்டில் நிலவும் சூழலுக்கு பொருத்தமாக இல்லாததால், ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதியளிக்க முடியாது' என்று மறுத்து விட்டார். சபாநாயகரின் முடிவை எதிர்த்து, லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ஐ.,(எம்) தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா,"நாளை (இன்று) பார்லிமென்டின் பிரதான நுழைவாயிலில் இடதுசாரி உறுப்பினர்கள் விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். இந்த ஆர்ப்பாட்டம் பார்லிமென்டின் உள்ளேயும், வெளியேயும் நடக்கும்' என்று தெரிவித்தார்.