கருத்துகள் (10)
கருத்தை பதிவு செய்ய
ஆமதாபாத்: போலி என் கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விசாரிக்க சி.பி.ஐ., திட்டமிட்டிருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொராபுதீன் என்பவர் இவரது மனைவியுடன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். போலி என்கவுன்டர் செய்யப்பட்டதாக தாக்கனால மனுவின்படி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. வழக்கில் குஜராத் முதல்வர் மோடியின் நெருக்கமான அமைச்சர் அமீத்ஷாவை ஆஜராக வருமாறு கேட்டு தொடர்ந்து அவரை கைது செய்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் அப்ரூவராகியிருக்கிறார். அமீத்ஷாவிடம் சி.பி.ஐ., துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ., காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என பா.ஜ., மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் நரேந்திர மோடியையும் விசாரிக்க சி.பி.ஐ., திட்டமிட்டிருக்கிறது. என்கவுன்டர் நடந்த போது உள்துறையை மோடி கவனித்து வந்ததாகவும், இந்நேரத்தில் சி.ஐ.டி., போலீஸ் தலைவர் ரெய்ஜர் இட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சி.பி.ஐ.,க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநில முதல்வர் என்பதால் இவரிடம் விசாரனை நடத்த சி.பி.ஐ., மூத்த அதிகாரிகள் அனுமதி வேண்டும். இதனால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. உத்தரவு வந்தவுடன் மோடியை ஆஜராக கேட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே மோடியிடம் சி.பி.ஐ., சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைக்க மோடி மறுக்கும் பட்சத்தில் அவரை கைது செய்யும் அளவிற்கு கூட செல்ல காங்., அரசு திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.