சென்னை:"சிறை நிறப்பும் போராட்டம் நடத்திய தி.மு.க.,வினரை விடுவித்தது ஏன்?' என்பது குறித்து முதல்வர் ஜெ., விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:மக்களை ஏமாற்றும் விதமாக நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அரசுக்கும், காவல் துறைக்கும் ஒரு பயனற்ற பணியாக அமையும். அதன் காரணமாக, போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கவில்லை:போராட்டம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், ""கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 35 மாவட்டங்களிலும் சேர்த்து 2,32,297 பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதை நான் எதிர்பார்க்கவில்லை. சிறை நிரப்பும் போராட்டத்திற்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. மிரட்டல் மூலமாக, தொண்டர்களின் கூட்டுத்தொகையை குறைக்கலாம் என்றும் கருதினர். ஆனால், அது முடியவில்லை, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆட்சி இருந்த பொது என்னமா ஆடுனீங்க தலைவர் முதல் தொண்டன் வரை தலைவன் இளைஞன் படம் எடுத்து கூத்து கொண்டாட்டம் டு ஜி தலைவி கலை கொண்டாட்டம் கீழ் மட்ட முதல் மேல் மட்டம் வரை கொள்ளையோ கொள்ளை ஒவோருதரையும் உள்ளே போடுவது வெளியில் விடுவது என்பது செய்தி இது மக்கள் மீது அதிருப்பதி எனேவ மொத்தமாக ஒருமுறை பிரயசிதம் தேடுவதற்கு செய்தா தவறுகளுக்கு தாங்களாகவே தண்டனை அடைய ஏற்று கொண்டதற்கு அடையாளமாக ஒருமுறை சிறைக்குள் போய் வந்தாச்சு, குற்றம் செய்தவர்கள் தாங்கள் என்று உண்மையை ஒப்பு கொண்டு விட்டார்கள், அனால் நீதி கேட்டவர்களை மறக்கமால் புகார் கொடுத்தவர்களின் மனுக்களை ஏற்று சம்பந்த பட்டவர்கள் எந்த கட்சி யாக இருந்தாலும் நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும், உள்ளே தள்ள வேண்டும், ஜாமீன் கொடுக்க கூடாது. சிலர் சொல்வது போல் ஜாமீன் கேட்காமல் உள்ளேயா இருக்க வேண்டும், பொல பேத்த கரு நா களின் பேச்சு கலை கவனி, சிறை நிரப்பு போராட்டம் என்றது தங்கள் மீது பொய் வ்ழ்லக்கு போட படுவதை எதிர்த்து மாலை பொழுதில் விலை வாசி கட்டண உயர்வு பற்றி சிந்து பாடுகிறார்
பலே, பேஷ், " ஒன்றரைக்கோடி திமுக உறுப்பினர்கள் உள்ளனர் " என்று கூறிய முன்னாள் முதல்வர், அவர்களில் " தன வாரிசுகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நபர்கள் மட்டுமே " ஊழல், எதேச்சாதிகாரமான வழியில் சொத்துகுவித்தது, நிலமோசடி, அரசு அதிகாரிகளை மிரட்டியது ஆகிய நல்ல செயல்களை செய்திருப்பார்கள் " என்று எண்ணியது பொய்யாகி, தாமே ஆச்சரியப்படும் வகையில் " 2 ,32 , 297 பேர் இவ் வகை செயல்களை தனது வாரிசுகளை மீறி எப்படி செய்துள்ளார்கள் " என்று வியப்பில் ஆழ்ந்துள்ளேன், என்று நமக்கு இந்த செய்தியின் வாயிலாக தற்போது தெரிவித்துள்ளார், ஆ.தவமணி, செயலாளர், சேந்தமங்கலம் பயனீட்டாளர் சங்கம், நாமக்கல்.
இது போல் போராட்டத்தை ஜெயா அறிவித்தால் அ தி மு க தொண்டர்கள் வருவார்களா...............? அ தி மு க வில் உள்ள பெரிய தலைகளே வராது. எல்லாம் காசு பண்ணும் பேர்வழிகள். தி மு க வில் மட்டும் தான் கட்சிக்கொள்கை பிடிப்பானவர்கள் அதிகம். ஒரு வேளை அ தி மு க இப்படி ஒரு போராட்டம் அறிவித்தால் தினமலரில் உள்ள ஊழியர்கள் (விசுவாசத்துடன்) கலந்துகொள்ள வாய்ப்பிருக்கு. என்ன சரிதானே மலர்.
தமிழக முதல்வர் அவர்களே இந்த போராட்டமே தேவையில்லாத போராட்டம் என்று அனைவருக்கும் தெரியும். இதற்கெல்லாம் போய் ஏன் விளக்கம் கொடுத்து உங்களுடைய நேரத்தை வீணடிக்கிறீர்கள். ஏதோ அரசுக்கு தண்ட செலவுகள் குறைந்தது என்று சந்தோஷபடுகிறேன். ஒரு நாளைக்கு தமிழ் நாட்டில் திரைபடத்திற்கு வரும் கூட்டம் கூட வரவில்லையே. கழக(கலக) கண்மணிகள் மொத்தமே அவ்ளோதானா? வாழ்க தமிழகம்..............
திமுகவை பொருத்தமட்டில் தனது தொண்டர்களை ஊக்கபடுத்த இப்படி ஒரு போராட்டம் நடத்தியது சரிதான். அதே போல் இந்த போராட்டத்தை நல்ல முறையில் கையாண்டு அமைதியாக முடித்து மாலையே விடுதலை செய்ததது சரிதான். மொத்தத்தில் இருகட்சிகளும் பொறுப்புடன் நடந்து கொண்டன. இதே போல் மக்கள் நலம் குறித்த விஷயங்களிலும் லஞ்ச லாவண்யம் இல்லாது பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இருக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள ஜெயில்களின் கொள்ள லவும்,அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த மேற்கொள்ள வேண்டியதில் உள்ள தலைவலியும் இந்த அம்மையாருக்கு நன்கு தெரிந்திருப்பதால் இந்த முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் எந்த ஆட்சியாளர்களும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள் போராட்டகாரர்களை(பல்லாயிரகணக்கான பேரை ) எல்லாம் கோர்டிற்கு
அழைத்து செல்வது சாத்தியமில்லாத ஒன்று என்று சிறு குழந்தைக்கும் தெரியும் ? இதில் எல்லாம் பெருமை படவேண்டிய விஷயம் எதுவுமில்லை ?அது சரி இந்த நில அபகரிப்பு வழக்கு குறிப்பிட்ட கட்சியினர் மீது மட்டும் பாய்வது ஏன் ? மற்ற கட்சியினர் அனைவரும் புத்த மதத்தை சேர்ந்தவர்களா??

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.