Dinamalar - No 1 Tamil News Paper

எறும்புகள் மொய்க்க, பெண் சிசு ரோட்டில் வீசப்பட்ட பரிதாபம்
 
 
  இ-பேப்பர்
AAnmeegam News
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2010,23:29 IST

மேலூர் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை, மதுரை - மேலூர் நான்கு வழிச்சாலை ஓரத்தில் வீசப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


நான்கு வழிச்சாலையில் மேலூருக்கு திரும்பும் இடத்தில் உள்ள வாழை தோட்டத்தில் கிணறு தோண்டியபோது எடுக்கப்பட்ட கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை அதற்குள் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தனர். இரு புறமும் பாறாங்கற்கள் வைக்கப் பட்டு, அதன் நடுவில் குழந்தை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்றி பார்த்த போது, எறும்புகள் மொய்த்த நிலையில் காயங்களுடன், ஒல்லியான பெண் சிசு இருந்தது. அரசின் "108' இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுரேஷ், விமல், சரவணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர்.


டாக்டர்கள் கூறியதாவது: இக்குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆகி உள்ளது. மேற்புறமாக கல் அழுத்தி உள்ளதால் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கால் உடைந்துள்ளதாக தெரிகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பின், மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தை அனுப்பப் பட்டுள்ளது, என்றனர்.


மனிதாபிமானமற்ற பெற்றோர் யார்?: நான்கு வழிச்சாலையில் வழியாக பயணம் செய்த யாரோ தான் இப்படி குழந்தையை போட்டு விட்டு சென்றிருக்க வேண்டும். குழந்தையின் கை மற்றும் காலில் கண்மை இடப்பட்டு உள்ளது. ஆசையுடன் கொஞ்சிய பச்சிளம் குழந்தையை இப்படி வீசியதற்கு பதில் அரசு தொட்டிலில் சேர்த்து இருக்கலாமே.


 

மேலும் சம்பவம் செய்திகள்:




வாசகர் கருத்து (60)
sathy - pudukkottai,இந்தியா
2010-07-31 16:34:39 IST
very good...
v.christopher - sanaa,ஏமன்
2010-07-31 14:16:44 IST
I believe in God, so the God only saved the child. From the crucial hands. May God Bless the Child abundantly in all ways infinite times than me....
பாலா - Chennai,இந்தியா
2010-07-31 07:03:27 IST
என்ன உலகம் இது. இந்த மாதிரி சம்பவங்களை கேட்கும் பொழுது வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுகிறது....
balaji - chennai,இந்தியா
2010-07-30 23:42:03 IST
இந்த kuழத்தை இந்தியவின் ................விவேகனந்தர் போல .................
பத்ருல்் - madinah,சவுதி அரேபியா
2010-07-30 22:28:50 IST
கீழே போட்டதும் இல்லாமல் அதன் மேல் பாரங்கல்லையும் வைத்து, துன்பப்படுத்தி, எறும்பு மொய்க்கவைத்து என்ன எது, ஆண்டவா எங்கே இருக்கிறாய் ?...
akbar - beirut.......LEBANON.,இந்தியா
2010-07-30 21:41:59 IST
அன்புள்ள தினமலர் ஆசிரியபெருந்தகைக்கு....... அன்றாடம் கள்ளக்காதலையும்,கலாச்சார சீரழிவையும் நெஞ்சை உலுக்கும் விபத்துகளையும் பிஞ்சுகளின் கொடூர கொலைகளையும் தவறாமல் கோடிட்டு காட்டி,காட்டி கருவறையின் மென்மையாய் இருந்த எங்களின் மனங்கள் கல்லறை வேதனையில் கனத்துப்போகிறது என்பதுதான் உண்மை. மாறாக இந்த கொடூர நிகழ்வுக்கான தண்டனைகளையும் தீர்வுகளையும் மக்களுக்கு உடனுக்குடன் சொல்லப்படாத காரணமென்ன என்பதுதான் புரியவில்லை நம் நாட்டின் சட்டம் சரியில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை இருப்பினும் இதையே காரணம் காட்டி எல்லோரும் விலகிப்போனால் நம் நாடு வல்லரசாகாது கல்லறை வசமாகிவிடும்.ஒரு அரசாளும் மன்னனின் போர்வாளின் கூர்முனைதான் பத்திரிக்கை. ஆகவே சத்தமில்லாமல் தூங்கும் சட்டத்தின் பிடரியை தட்டவேண்டிய முக்கியப்பொருப்பும் தங்களை போன்ற மீடியாக்களுக்கு அதிகம் இருக்கு மொழியை செம்மை படுத்திய முதல்வருக்கு சட்டத்தை வன்மைப்படுத்த நினைவுபடுத்துங்கள் மக்களின் பாதுகாப்பு மேலோங்கட்டும்....இனியாவது தினமலரோடு எங்களின் மனங்களும் மலரட்டும் அன்புடன்அக்பர்.,...
விமல் - trichur,இந்தியா
2010-07-30 20:48:41 IST
இந்த உலகம் எங்கே போய்கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் இல்லாத பெற்றோர்....
R.SURESH KUMAR - COIMBATORE,இந்தியா
2010-07-30 20:27:51 IST
பெற்ற பிள்ளையை வளர்க்க முடியவில்லை என்றால் எதாவது அநாதை ஆசிரமத்தில் விட்டு இருக்கலாம்.எங்கே போனது மனிதநேயம்?இந்த பிள்ளையை பெற்ற பெண்னுக்கு இறக்கமே இல்லையா ?...
வ.ப.பெரியசாமி - CHENNAI,இந்தியா
2010-07-30 19:42:56 IST
nenjam thudikkiradhu..O God pl save the child....
proffie - madurai,இந்தியா
2010-07-30 19:14:52 IST
ரொம்ப kodumaya இருக்கு....
வேதகிரி - Mumbai,இந்தியா
2010-07-30 18:49:58 IST
இயற்கையில் எந்த ஒரு ஜீவராசியும் தான் பெற்ற பிள்ளை ஆணா, பெண்ணா என்று பார்த்து தன் பாசத்தை பிரித்து காண்பிப்பதில்லை. ஆனால்,..கேவலமான மனித இனம் மட்டுமே இதை செய்கிறது அதுவும் நம் நாட்டினர் செய்வதுதான் அதிகம். அதற்க்கு காரணம், பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், பாதுகாப்பற்ற சமுதாயம், எல்லாவற்றிற்கும் மேலாக 'வரதட்சனை கொடுமை' (அமெரிக்காவுக்கு சென்றாலும் கூட வரதட்சனை கொடுமைப்படுத்தும் கயவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்? ) இந்த நிகழ்வுக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பிற்க்காகவும், உரிமைகளுக்க்காகவும் உறுதியோடு செயல்படவேண்டும்........ .நெஞ்சு பொறுக்குதில்லையே ..........
எல் கிருஷ்ணன் - trichy,இந்தியா
2010-07-30 18:17:56 IST
எல்லோரும் வெட்க பட வேண்டிய வேதனயான செயல்...
thangasamy - chennai,இந்தியா
2010-07-30 17:46:36 IST
அவர்கள் அந்த குழந்தையை என் போல் ஏங்கும் மனிதர்களுக்கு கொடுத்திருக்கலாம்...
anitha - chennai,இந்தியா
2010-07-30 17:40:32 IST
ஏன் இவ்வாறு இந்த குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும், இக்குழந்தையை தெருவில் விட்டு சென்றதற்கு பதிலாக அரசு தொட்டிலில் சேர்த்திருக்கலாம். அவளும் தெருவிலிருந்து வந்து இருப்பல்லோ, எனவே அவளுக்கு இப்படி தோன்றி இருக்கும்.....
ரெல்ஸ் - Chennai,இந்தியா
2010-07-30 17:37:07 IST
பிறந்து ஒரு வாரம் ஆனா குழந்தை என்பதால் அந்தக் குழந்தை பத்து நிமிட சுகத்தால் பிறந்ததாக இருக்காது. மேலும் கண்ணுக்கு மை இடப்பட்டிருக்கிறது என்பதால், நிச்சயம் அந்த குழந்தையையே ஆசையுடனும்,பாசத்துடனுந்தான் வைத்திருந்திர்ப்பார்கள். யாராவது குழந்தையையே நகைக்காக திருடி இருக்கலாம். நகை எடுத்துக்கொண்டு குழந்தையையே அங்கேயே விட்டு சென்றிருக்கலாம். குழந்தையையே காப்பாற்றிய நல்ல உள்ளங்களுக்குப் பாராட்டுக்கள்....
யோகி - chennai,இந்தியா
2010-07-30 17:31:12 IST
இந்த குழந்தையை இப்படி விடுவதற்கு அவள் வேறு வழியை யோசித்திருக்கலாம் அவளும் ஒரு பெண் என்பதை நினைத்திருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டால்....
lady - chennai,இந்தியா
2010-07-30 17:09:59 IST
அவர்கள் அந்த குழந்தையை என் போல் ஏங்கும் மனிதர்களுக்கு கொடுத்திருக்கலாம். கடவுள் இருகின்றனா...
lady - chennai,இந்தியா
2010-07-30 17:09:56 IST
அவர்கள் அந்த குழந்தையை என் போல் ஏங்கும் மனிதர்களுக்கு கொடுத்திருக்கலாம். கடவுள் இருகின்றனா...
Kasivel - Madurai,இந்தியா
2010-07-30 17:08:58 IST
Kadavul eppai Ena pervigaluke entha packiathai tharugiran pavam kulanthai ellathe thampathiyar...
Manavalan - Madurai,இந்தியா
2010-07-30 16:46:15 IST
மனசு வலிக்குது...
vinod - pollachi,இந்தியா
2010-07-30 15:18:21 IST
What the child have done to that idotic lady...
பாலாஜி - madurai,இந்தியா
2010-07-30 15:02:10 IST
மனிதாபிமானமற்ற செயல் யா இது.......
SSEENNTHILL - THIRUVANANTHAPURAM,இந்தியா
2010-07-30 14:54:15 IST
WHY they done like this? Uncompassionate?...
Anuratha vinodkumar - udumalpet,இந்தியா
2010-07-30 14:52:58 IST
Where is Tamil nadu going. Poovarasi killed a small boy for taking revenge on his illegal lover. This unknown lady thrown a small liitle kid. Why girls are changing like this?...
A.பிரேம் - sivagangai,இந்தியா
2010-07-30 14:44:40 IST
இந்த குழந்தை இன் பாட்டி செய்ய வேண்டிய வேலை...
INDIAN - bangalore,இந்தியா
2010-07-30 14:42:12 IST
உன் குற்றமா ? அவள் குற்றமா? அவன் குற்றமா ? யாரை நன் குற்றம் சொலுவது? பச்ச பசும் கிளியே ..............
2010-07-30 14:19:27 IST
உசிலம்பட்டியிலும், மேலுரிலும் இது சகசமாக நடக்கிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் இதை தடுக்க உடன் ஆவன செய்ய வேண்டும். செய்வார்களா?...
Nagarajan - Chennai,இந்தியா
2010-07-30 14:15:02 IST
ஈவு இரக்கமற்ற இவர்களை நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும். சட்டம் கடுமையாக இருக்குமேயானால் நல்லது கடவுள் இந்த குழந்தையை காக்க வேண்டும்...
கே.பன்னீர் செல்வம் - Jeddah,சவுதி அரேபியா
2010-07-30 14:12:51 IST
கலிகாலத்தில் இப்படியும் நடக்கிறது. இதை படித்தபோது என் இதயம் உறைந்துவிட்டது. இறைவன் அருளட்டும்....
sivakami - pudukkottai,இந்தியா
2010-07-30 13:42:06 IST
கடவுள் தந்த வரத்தை இப்படி வீசிருக்கிரர்கள். இவர்களுக்கு இரக்கமே கிடையாத?...
Muthukumar - bangalore,இந்தியா
2010-07-30 13:38:47 IST
இப்படி ஒரு செயல் எனது மண்ணில் நடப்பது என் நெஞ்சு பதறுகிறது. தாயே நீ உனது பொறுப்பில் இருந்து தவறலாமா. பெண் குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள். அம்மா நீ உயிரோடு இருந்தால் சென்று உன் குழந்தைய பெற்றுகொள் அப்போதான் பெண்ணாய் பிறபதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் என்ற பா உண்மையாகும்....
வெங்கடேஷ் - Rajapalayam,இந்தியா
2010-07-30 12:36:34 IST
எவர்களுக்கு எதுக்கு குழந்தை குட்டியலாம்.....
24 ம் புலிகேசி - madurai,இந்தியா
2010-07-30 11:58:24 IST
குழந்தைகளுக்கு எதிரான சமீபத்திய குற்றங்கள் மிகவும் கொடூரமாக உள்ளன..ஆடு மாடு பன்னி கோழி காடை கவுதாரி மீன் என்று நாம் உணவுக்காக பல உயிர்களை இரக்கமில்லாமல் கொல்கிறோம்..ஏனைய விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் நாம் செய்யும் அநியாயங்கள் சொல்லி மாளாது..அந்த பட்டியலில் குழந்தைகளையும் சேர்த்து விடாதீர்கள்..குழந்தையின் அருமை அது இல்லாதபோதுதான் தெரியும்..சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் எதுக்கம்மா..மங்காத கண்ணில் மையிட்டு பார்த்தாலே தங்கமும் வைரமும் எதுக்கம்மா.....
Senthil - Chennai,இந்தியா
2010-07-30 11:38:14 IST
தொட்டில் குழ்ந்தை திட்டம் இருந்தும் இன்னும் ஏன் இந்த நிலை.இறைவா எப்போது மாறுமோ இந்த 6 அறிவு படைத்த மிருகங்களின் மனம்....
Augustin - chennai,இந்தியா
2010-07-30 11:38:06 IST
என்ன மனிதர்கள். There are many families they dont have kids. This ppl would have given the baby to them....
சரவணன் - Chennai,இந்தியா
2010-07-30 11:26:57 IST
இந்த மாதிரி பண்றவங்களை தூக்கில் போடணும்.. தண்டனைகள் பலமா இருந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும்......
சரவணன் - Chennai,இந்தியா
2010-07-30 11:26:39 IST
இந்த மாதிரி பண்றவங்களை தூக்கில் போடணும்.. தண்டனைகள் பலமா இருந்தால் தான் இந்த மாதிரி குற்றங்கள் குறையும்......
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-07-30 11:16:11 IST
இவு இரக்கமற்ற செயல், பத்து நிமிட ஆசைகாக பிள்ளையை பெற்று புதை குழியில் புதைத அந்த சண்டாளி யார்? சட்டம் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அந்த பெண் குழந்தை நன்றாக படித்து வருங்காலத்தில் ஒரு டாக்டராகவோ,சிறந்த ஆசிர்யை,சிறந்த ஐ பி எஸ் அதிகரியகோவோ வர வேண்டும். எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக பிறர்திபோம். நல்லவர்கள் சிறந்த தாய் உள்ளம் கொண்ட பெண்கள் இந்த குழந்தை எடுத்து வளர்கலாம். கொடிது கொடிது மனிதரை பிறத்தல் கொடிது,அதில் பெண் பிள்ளைகள் தமிழ்நாட்டில் பிறப்பது??????????????...
நsar - uae,இந்தியா
2010-07-30 11:04:57 IST
இந்த மாறி குழந்தைகளை பெத்து போடுவதற்கு சரியான தண்டனையை கடவுள் தருவார் என நம்புகிறேன்...
நவாஸ் கான் - jeddah,சவுதி அரேபியா
2010-07-30 10:39:15 IST
இத படித்ததும் ஒரு நிமிடம் இதயம் நின்றதை போல் உணர்ந்தேன் ....அறிவு கெட்ட ஜென்மங்களா குழந்தை வேணாம்னா எத்தனையோ குடும்ப கட்டுப்பாடு வழி முறைகள் இருக்கு அப்படியும் இல்லன அரசு தொட்டிலிலே சேர்த்து இருக்கலாம் .....
மீரான் - chennai,இந்தியா
2010-07-30 10:35:32 IST
வறுமைதான் காரணம் என்று நினைக்கிறேன். இப்படி வீசியதற்கு பதில ஐயா சொன்ன மாதிரி அரசு தொட்டிலில் சேர்த்திருக்கலாமே.......
சத்யப்ரியா - paramakudi,இந்தியா
2010-07-30 10:26:26 IST
வர வர மக்களுக்கு இரக்கமே இல்லாமல் போய்விட்டது. என்ன கொடுமை , நமக்கு ஒரு குழந்தை பிறக்காத என கவலைபடுபவர் களுக்கு தான் குழந்தையின் அருமை தெரியும் . கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் தான் பெற்ற குழந்தையை ரோட்டில் போடும் தாய்க்கு அப்படிதான் மனசு வந்ததோ தெரியவில்லை.கடவுள் அந்த பிஞ்சு குழந்தையை காப்பர்த்டட்டும்....
smalini - chennai,இந்தியா
2010-07-30 10:21:57 IST
தாய்க்கு தெரியாமல் பிள்ளையை கடத்தி கொண்டுவந்து அந்த இடத்தில் போட்டு சென்று இருக்கலாம்.மனிதாபிமானம் என்பது நம் மக்களுக்கு மறந்து போன ஒரு பண்பு ஆகிவிட்டது.அந்த எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்த எந்த கடவுள்தான் முன்வரப் போகிறாரோ தெரியவில்லை?...
phoenixdassan - Singapore,இந்தியா
2010-07-30 10:08:33 IST
ரயில் பயணத்தில் ஒருநாள்....... ரயில் பயணத்தில் ஒருநாள் .. நெஞ்சை வருடிய சில நிகழ்வுகள்... நெருப்பாய் சுட்ட சில நிஜங்கள்.. கண்களில் நீர்வார்த்த சில காட்சிகள்.. இதோ ... கடலென மக்களோடு கடற்கரை நோக்கி பயணப்பட்டது அந்த காலை ரயில் ... காலில்லாத மனிதர் ஒருவர் தன் கட்டைகால் வைக்க இடம் தேடி காத்திருக்க... ஒருக்காலும் நடக்காது என்பது போல் அமர்ந்து இருதனர் கருணையற்ற கணவான்கள் பலர் .... கல்லூரி கலைமாமணிகள் சிலரின் கானாக்களில் முகம்சுளிக்கும் காமலீலவிநோதங்கள்.... கண்ணன் வந்தான்...கண்ணன் வந்தான் ஏழையின் கண்ணீர் துடைக்க வந்தான் என பாடி கொண்டே... கண் தெரியாத மனிதர் ஒருவர் அங்கே கண்ணீருடன் கண்ணனை தேடுகிறார்... கூத்தாடி ஒருவன் அங்கே குட்டி கரணமிட காசு கேட்டு கை ஏந்தினாள் அவனது குட்டி தேவதை... பையில் இருந்த உணவை கையில் எடுபதற்குள் என்னிடம் பிடுங்கி சென்றான் அவளது அண்ணன்.... குட்டி தேவதையின் பார்வையோ அங்கே குழந்தைக்கு பாலூட்டும் தாயிடம் .... கை நிறைய காசை அவளது பிஞ்சு கைகளில் திணித்தேன்... காசு கொடுத்த என்னை அவளது கண்கள் கருணையோடு பார்த்தன... வழிந்த ஒரு சொட்டு கண்ணீரில் புரிந்தது அவளது பார்வையின் அர்த்தங்கள் அன்று... தெரிந்தது இவை தான் நம் இந்தியாவின் நிலை என்று .... மக்களே தயவு செய்து உங்கள் காமத்திற்காக இளம் பிஞ்சுகளை உருவாக்கி இப்படி தெருவில் விடாதீர்கள்.. இப்படிக்கு கண்ணீருடன் உங்கள் Phoenixdassan ........
fazal - uae,இந்தியா
2010-07-30 09:52:56 IST
மனசு வலிக்குது இன்றே அணைத்து பத்ரிககைகளிலும் முதல் பக்கத்தில் போடுங்கள் அரசு தொட்டில் உள்ளது என்று என்ன வளம் இல்லை நம் நாட்டில் ? ... உன்னை எல்லாம் வேட்டனுண்ட ........
பட்டுராஜா - coimbatore,இந்தியா
2010-07-30 09:41:46 IST
இந்த மாதிரி பெற்றோருக்கு பிறந்த குழந்தை இனி மேலாவது ஒரு நல்ல பெற்றோருக்கு மகளாக போய் சேர ஆண்டவனை பிராத்திக்கிறேன்...
FAZAL - uae,இந்தியா
2010-07-30 09:41:11 IST
இந்த மனிதாபமற்ற பெற்றோர்களுக்கு மனித நேயம் எங்கே சென்றது இவர்களை கண்டுபிடித்து அந்நியன் போல் கொள்ள வேண்டும் சமுதாய மானக்கேடு இந்தியா வல்லரசு.....ஆகும் முன் இந்த சமுதாய சகதிகளை தூர் எடுக்க வேண்டும்...
சஞ்சீவ் - bangalore,இந்தியா
2010-07-30 09:19:40 IST
ஐயோ கடவுளே, இது என்ன சோதனை. இந்த செய்தியை படிப்பதற்கே மனம் பொறுக்கவில்லையே அந்த நிகழ்வை பார்த்து மனம் நொந்து உதவிய உள்ளங்களே உங்களை வணங்குகிறேன்...
ரா .ராஜன் - singapore,இந்தியா
2010-07-30 09:12:28 IST
இவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள் இல்லை . எந்த ஒரு சூழ்நிலையிலும் இது மிகவும் வன்மையாக கண்டிக்கபடதக்கது .குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் , அந்த கடவுளையா தூக்கி எறிந்தார்கள் . இந்த குழந்தையின் பெற்றோர் கண்டிப்பாக ஒருநாள் தான் பெற போகிற குழந்தையினால் தூக்கி எறியப்படுவார்கள் ....
Jsn - mumbai,இந்தியா
2010-07-30 08:55:15 IST
பல பெற்றோர் குழந்தை இல்லை என்று எங்களை போல் தவம் கேடகின்றனர்.ஆனால் கேட்பவனுக்கு கொடுக்க மாட்டார் அந்த இறைவன்.என்ன கொடுமை ithu.பச்சை குழந்தையை எப்படி விட்டு போனவள் அவளும் ஒரு பெண்ணா? மனிதாபிமானமே illatha ஒரு araki aval.than udal sugam thirtha udan இந்த குழந்தை அவளுக்கு பாரமாகி போனது. இந்த பெற்றவனுகும், பெற்றவளுக்கும் நல்ல சாவு வரத்து. கண்ணீருடன் ஒரு தாய்....
laksme - coimbatore,இந்தியா
2010-07-30 08:54:49 IST
மனிதாபிமானமற்ற செயல். மனதை நெகிழ செய்கிறது. அந்த குழந்தை குணமாகி நல்ல ஒரு இடத்தில வளர இறைவனை பிரார்த்திகிறேன்....
sangeetha - Bangalore,இந்தியா
2010-07-30 08:38:27 IST
கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத பெற்றோர்கள். எங்கே போய் சொல்வது?? அந்த குழந்தை நலம் பெற வேண்டி இறைவனை வேண்டுகிறேன்....
மங்கை பிரபாகர் - Singapore,சிங்கப்பூர்
2010-07-30 08:05:24 IST
Its very sad to hear this. How is it possible for them to through one week's baby. So many people are longing to have a child. Whoever it is, they have to be punished severely....
uva - chennai,இந்தியா
2010-07-30 07:40:36 IST
still parents are here in tamilnadu... who dosen't like girl baby...since government has taken so many steps to prevent girl babies but still these kinds of incidents are happening here.. they should be punished severiely ......
ராஜ் - trichy,இந்தியா
2010-07-30 06:39:13 IST
இது போன்ற ஈன பிறவிகள் ஒரு பச்சிளம் குழந்தையை தூக்கி போட எப்படி மனம் வந்ததோ.. கடவுள் இது போன்றவர்களை தண்டிப்பான் ..கடவுள் அந்த குழந்தைக்கு நல்லதொரு வாழ்கையை அமைத்து தர பிரார்த்திப்போம். அந்த ஈன ப்ரிவிகளை கண்டு பிடித்து அரசு தண்டிக்க வேண்டும். நல்லதோர் வீணை செய்து அதை புடுதியில் விடுவதன்றோ என்று பாரதி பாடியது தன் நாபகம் வருகிறது....
ராஜ் - USA,இந்தியா
2010-07-30 06:10:14 IST
உலகம் விரைவில் அளியபோகிறது...
இந்தியன் - tirunelveli,இந்தியா
2010-07-30 05:28:17 IST
அட மிருகங்களா உங்களால் வளர்கமுடிய வில்லையென்றால் அரசாங்கத்திடமாவது சேர்த்து தொலைங்கடா...
VENKATES - MADURAI,இந்தியா
2010-07-30 05:21:37 IST
UDDANUKUDAN SEITHIKALAI THERINDHU KOLVATHARKU DINAMALARUKU NANRI...
ammiya - DenHelder,நெதர்லாந்து
2010-07-30 01:42:21 IST
ஐயோ எதற்கு இந்த அநியாயம்?தன குழந்தைக்கு,ஒரு சிறிய எறும்பு கடித்தாலே தாங்கமாட்டாள் தாய்.....இந்த அரக்கியோ எறும்புக் கூட்டத்துக்குள் விட்டுப் போய் இருக்காளே????இவள் பெண்ணா அல்லது பேயா?அந்தப் பிஞ்சு என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை...இந்த அரக்கியிடம் அகப் பட்டுக் கொண்டது........
S .வினோத் - SINGAPORE,சிங்கப்பூர்
2010-07-30 00:21:19 IST
என்ன கொடுமை இது! மனிதர்கள் ஏன் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
Your Name  :
Your Email Id :
Your city (or) location  :
Your country  :
Your Comment :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)