வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது பொது மக்கள் உயிர் பாதுகாப்பு சமந்தப்பட்ட விஷயம். அரசு உடனே இதில் கவனம் செலுத்தி சரிசெய்ய வேண்டும் சரியான பராமரிப்பின்மையே காரணம் என்றால் நீதிமன்றம் உடனடியாக நிர்வாக இயக்குனரை துறை சார்ந்த நடவடிக்கை உத்தரவு இட வேண்டும் இந்த லட்சணத்தில் கட்டணம் என்ற பெயரில் அரசாங்கமே விரைவு பேருந்து சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணம் 7 ரூபாய் 15 ரூபாய் 20 ரூபாய் 25 ரூபாய் பெரும் கொள்ளை நடத்துகிறது.
அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கலையவள்ளது கணிப்பொறி மயமாக்குவதே. நகரில் ஓடும் எல்லாப் பணிமனைகளுக்கும், பேருந்துகளுக்கும் அடையாளக் குறியீடு உள்ளது. ஒவ்வொரு பேருந்துக்கும் தேவையான உதிரி பாகங்கள் வாங்கி மாற்றப்படுவதை கணிப்பொறியில் பதிவு செய்யலாம். மேற்கண்ட பேருந்துகளுக்குத் தேவையான அதே உதிரி பாகம் மீண்டும் குறுகிய காலத்தில் மாற்றப்பட வேண்டியிருந்தால், முன்னர் வாங்கிய பொருள் தரக்குறைவான பொருட்கள் என்று சுலபமாக அறிந்து கொள்ளமுடியும். அதேபோல ஒவ்வொரு பேருந்தின் வசூல், டீசல் அளவு மற்றும் பராமரிப்பு ஆகியவை சம்பந்தமான விபரமும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுவதன் மூலம், அவற்றின் பராமரிப்பும் சுலபமாவதுடன் முறைகேடுகளும் பெருமளவு தவிர்க்கப்படுகிறது. முறைகேடுகள் தவிர்க்கப்படுவதன் மூலம் அதிரடி கட்டண உயர்வும் தவிர்க்க முடியும்.
கணினி வந்து பஸ் ஓட்டப் போகுதா என்ன ?? லஞ்சம் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி, விரவி இருக்கும் போது கணினி மயமாக்கினால், அதை வாங்குவதிலும் ஒரு கமிஷன் பார்த்து விட்டு, அதையும் காயலான்கடையில் போடும்படி ஆக்கி விடுவார்கள்... அரசு ஆஸ்பத்திரிகளில் இல்லாத மெஷின்களா, முதல் வருடத்திற்குப் பிறகு ஏதாவது ஒழுங்காக வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ? வாங்கும் போதே, எப்படி திருடி விக்கலாம் என்று திட்டம் போட்டுத் தான் வாங்குகிறார்கள்.. அதற்கு கோடிக்கணக்கில் திட்டம் போட்டுத் தருவது தானே ஆளும் கட்சியோட வேலை.....
இதற்கெல்லாம் ஒரே வழி, மேற்படி பேருந்துப் பராமரிப்புகள் முழுவதையும் அவுட்சோர்சிங் செய்து, சம்பந்தப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் கையிலேயே விட்டுவிடுவதே. பொதுவாகவே எந்தவொரு தயாரிப்பை விற்கும் நிறுவனமும் குறிப்பிட்ட காலம் வரை அந்தத் தயாரிப்புக்கான வாரண்டி, கேரண்டி மற்றும் Service Maintenance Contract (AMC) போன்ற உத்தரவாதம் தருவது இயற்கையே. அதேபோல இந்தப் பராமரிப்பு விஷயங்களையும் அந்தந்த நிறுவனத்திடமே விட்டுவிடலாம். மேலும் பெரும்பாலான வண்டிகள் சீக்கிரமே நாசமாவதற்குக் காரணம் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதும் கூட. இவற்றைச் சரி செய்தாலே விடிவுகாலம் கிடைக்கும். கடந்த இரு வாரம் முன்பு சென்னை வந்திருந்தபோது நகரில் ஓடும் வண்டிகளைக் கண்டு பரிதாபப் படவேண்டியிருந்தது. இந்த லட்சணத்தில் கட்டணம் என்ற பெயரில் அரசாங்கமே பெரும் கொள்ளை நடத்துகிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.