லூதியானா: வளர்ச்சித் திட்டங்களை மூன்று மாதங்களில் நிறைவேற்றும் வகையில், முதல் தடவையாக, மத்திய அமைச்சர்களுக்கு கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், பிரதமர் அலுவலகம் உட்பட, மூன்று நிலையில் கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவுக்கு வந்திருந்த திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இத்தகவலை தெரிவித் தார். பொருளாதார நிலையில் தொய்வு ஏற்பட்டு, நாடு, வளர்ச்சியில் பின் தங்கி வருகிறது என்ற புகார், அதிக அளவில் எழுந்திருக்கிறது. பிரதமர், தன் பொறுப்பில் நிதித்துறையை வைத்துக் கொண்டு, சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வளத்தை அதிகப்படுத்த, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, சமீபத்தில் அறிவித்தார். ஆனால், அது எந்த அளவு செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. பிரதமரின் பொருளாதார ஆலோசகரான ரங்கராஜனை, பிரபல தொழிலதிபர் சந்தித்து, தங்கள் கருத்துகளையும், அதிருப்திகளையும் தெரிவித்த சமயத்தில், திட்ட ககமிஷன் துணை தலைவர் அலுவாலியா, நேற்று இத்தகவலைத் தெரிவித்தார்.
தாமதம்: மேலும், அவர் கூறியதாவது: நாடு முழுவதும், கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை துவக்குவதற்கு, அமைச்சகங்களிடம் இருந்து அனுமதி கிடைப்பதில், தாமதம் ஏற்படுவதாகவும், அதனால், திட்டங்களை நிறைவேற்றுவதில், முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாகவும், புகார்
டீசல் மானியம்: டீசலுக்கு அளிக்கப்படும் மானியம் வாபஸ் பெறப்படுமா என கேட்கப்படுகிறது. பெட்ரோல் விலை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவைப் போல், டீசல் விலை தொடர்பாகவும், முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கும். மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரை, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி, எந்தவித தடையுமின்றி கிடைக்கும். இவ்வாறு, மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெரும் தொழிலதிபர்களை திருப்தி படுத்துவதற்காகவே பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்றால் அது விழலுக்கு இறைத்த நீர் தான். அவர்கள் கொழுக்கவும் வலுக்கவுமே இன்னடவடிக்கை பயன்படும். மாறாக வேலைவாய்ப்பை வளப்படுத்தவும் மனித சக்தியை ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் நடவடிக்கை வேண்டும். நம்நாட்டில் எட்டுமணி நேர வேலையே தொழிலாளர்களுக்கு அதிகமாக தெரிகிறது. நூlறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் கூட சோம்பேறிகளை வளர்க்கத்தான் பயன் படுகிறது. இலவசங்களாலும் இது போன்ற திட்டங்களாலும் வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது. கூலியும் ஐ டி பணியாளர்களை விட அதிகம் கேட்கிறார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.