Advertisement
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2012,00:02 IST
கருத்துகள் (38)
தமிழக அரசில், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, சத்துணவுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம் என, பல்வேறு துறைகளில் வேலையில் சேர, புதிய வாய்ப்புகள் குவிகின்றன. இத்துறைகளில், 1 லட்சம் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை, 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுப்பதால், அரசு வேலையில் சேர, படித்த இளைஞர்களுக்கு, பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது . நடவடிக்கை:முந்தைய தி.மு.க., ஆட்சியில், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பியபோதும், முழுமையான அளவில், அனைத்துத் துறைகளிலும், போதிய அளவிற்கு பணியாளர்களை நியமிக்கவில்லை. அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசுத் துறைகளில், அனைத்துப் பணிகளும், தேங்காமல் உடனுக்குடன் நடப்பதற்கு ஏதுவாக, அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் பணியாளர்களை நியமனம் செய்ய, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.இதன் காரணமாக, ஒவ்வொரு துறையிலும், புதிய பணி நியமனங்கள் நடந்து வருகின்றன. எனினும், கடந்த சில வாரங்களாக, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சத்துணவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், போட்டி போட்டுக் கொண்டு, புதிய நியமன அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.ஒரு பக்கம், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனங்களும், மற்றொரு பக்கம், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகளும், நடந்து வருகின்றன. பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் தேர்வு வாரியம், 12ம்
தேதி நடத்த உள்ள டி.இ.டி., தேர்வு மூலம், 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர்.

தற்காலிகம்:போக்குவரத்துத் துறையில், 16 ஆயிரத்து 850 டிரைவர், கண்டக்டர் மற்றும் 9,000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்துணவுப் பணியாளர்கள் 16 ஆயிரம் பேர், 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்-4 தேர்வு மூலம் 11 ஆயிரம் பேர், முதுகலை ஆசிரியர் 3,000 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 1 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1,623 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்யும் அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மேலும், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பையும், டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலை வெளியிட்டது. ஏற்கனவே, 11 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, 7ம் தேதி தேர்வு நடத்திய நிலையில், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், 2,000 வி.ஏ.ஓ.,க்களை தேர்ந்தெடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படி, எல்லா துறைகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆள் எடுத்து வருவதால், படித்த இளைஞர்கள், அரசு வேலையில் சேர, மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், அரசு, தொடர்ந்து புதிய நியமனஅறிவிப்புகளை வெளியிட்டு வருவது, படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மத்தியில், பெரும் வரவேற்பையும்,
Advertisement
மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டால், அரசுத் துறைகளில், வேலைகள் வேகம் எடுக்கும் என, அரசு எதிர்பார்க்கிறது.
எவ்வளவு செலவாகும்? பல்வேறு அரசுத் துறைகளில், ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், தொடர்ந்து புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆறாவது ஊதியக்குழு சம்பளம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சம் பேருக்கு, சம்பளம் மற்றும் இதர சலுகைகளாக, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக அரசில் ஊழியர்கள் எண்ணிக்கை, 20 லட்சத்தை நெருங்கிவிட்டது.
- நமது நிருபர் -



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (38)
muthaian aruldhas - marthandam,இந்தியா
10-ஜூலை-201222:53:39 IST Report Abuse
muthaian aruldhas அரசு வாத்தியார் ஆய்டலாம் என்று 1991 லிருந்து காத்துக்கிட்டிருந்தேன் மூன்று வருசத்துக்கு ஒரு தடவை கால் கடுக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நின்னு பதிவை முறையாக செய்து வந்தேன். என் மனைவியும் அப்படித்தான். நரை வந்ததே, தேடி காந்திருந்த ஆஷையலே இடி விள்ளுந்ததோ போலே ஆனது. நன் இப்போ வெளி நாட்டிலே ,ஆங்கில ஆசிரியர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201218:54:28 IST Report Abuse
Samuel Christopher இந்த அறிவிப்பு எல்லாம் வெறும் மக்களை ஏமாற்றும் செயல்,ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்கிறோம் என்று exam வைத்து எத்தனை ஆசிரியர்களுக்கு வேலை கொடுத்தீர்கள்? நல்ல ஆட்சி என்றால் பதிவு மூப்பு அடிப்பையில் அல்லவா போடவேண்டும்,so அறிவிப்பு எல்லாம் அரசியல் ஆதாயத்திற்கு மாத்திரமே மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
10-ஜூலை-201215:57:33 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar தமிழக அரசு ஆள்சேர்ப்பு திராவிட வரலாற்றில்.., புதிய மைல்கல்..,மிக பெரிய பாராட்டுகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Latha Sridhar - chennai,இந்தியா
10-ஜூலை-201214:46:58 IST Report Abuse
Latha Sridhar ரொம்ப நல்ல விஷயம். ஒரு சின்ன வேண்டுகோள். செலக்ட் ஆகிறவர்கள் ஒரு ட்ரைனிங் அட்டென்ட் பண்ணனும். அதில் அவர்களுடைய வேலை மக்களுக்கு சேவை செய்யத்தான் கொடுக்க பட்டிருக்குன்னு புரிய வைத்து அதற்கு தான் சலுகைகளும், விடுமுறைகளும், சம்பளமும் கொடுக்கிறோம் லஞ்சம் வாங்க கூடாதுன்னு கண்டிப்பாக சொல்லணும். மீறினால் வேலை போய் விடும் என்று சொல்லணும். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இதே போல நான்கு மணி நேரம் ( half எ டே) ட்ரைனிங் கொடுக்க வேண்டும். அதில் யார் யார் இந்த ஐந்து வருடத்தில் புகாரின் அடிப்படையில் வேலை இழந்தார்கள் என்று துறை வாரியாக எல்லோருக்கும் லிஸ்ட் படிக்கணும். இதனால் அரசு துறைகள் நன்றாக இயங்கும் மக்களும் நிம்மதியாக வாழலாம். செய்வார்களா ?? லதா ஸ்ரீதர், சென்னை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
10-ஜூலை-201214:38:59 IST Report Abuse
v.sundaravadivelu சும்மா பெரிசா அத செய்றோம், இத செய்றோம் நு குதிப்பாங்க.. அப்புறம் பார்த்தா மறைமுகமா ஒரு லஞ்சப்பேயி ரகசியமா தலை விரிச்சாடும்... அதை ஈடு கட்டறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்... உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா .. அரசனை நம்பி புருஷனை கை வுட்ட மாதிரி.... இந்த மாதிரி பழமொழிகளுக்கு எல்லாம் உயிர் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி விடும்... லஞ்சம் வாங்கி சிக்கற நியூஸ் பேப்பர்ல ரெண்டு தான் வந்திருக்கும்... ஆனால் இங்கே இருநூறு பக்கம் லஞ்சலாவண்யம் குத்தாட்டம் போடும்... . இந்த மாதிரி செய்திக்கெல்லாம் சந்தோஷப் படறது ஒரு மிகப் பெரிய மாயை அப்டிங்கறதே தெரிய ரொம்ப நாளு ஆகிடும்.. அதான் இதுல ஸ்பெஷாலிட்டி.. கொடுமையான ஸ்பெஷாலிட்டி..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
10-ஜூலை-201214:02:30 IST Report Abuse
saravanan என்னது, ஆண்டுக்கு 4000 கோடி அதிகமா செலவாகப் போகுதா??? அப்படின்னா டாஸ்மாக் வருமானத்தை இன்னும் பெருக்கணும்..... சரக்கை டோர் டெலிவரி குடுக்குற மாதிரி இன்னும் புதுசு புதுசா நிறைய திட்டங்கள் போடணும்..... நாட்டுல இருக்குற 7 கோடி மக்கள்ல எப்படியும் 5 கோடி மக்களையாவது குடிக்க வைக்கணும்.......அதுக்கு இப்ப பொம்பளைங்க ரொம்ப கம்மியா குடிக்கிராங்க..... அதனால குடிக்கிற பெண்களோட எண்ணிக்கைய அதிகரிக்கணும்..... ஒரு குவார்ட்டர் வாங்குனா ஸ்டிக்கர் பொட்டு ஒரு பாக்கெட் இலவசம்னு ஏதாவது அதிரடி திட்டம் போட்டு எப்படியும் டாஸ்மாக்கோடா வருமானத்தை பெருக்காம விடமாட்டாங்க நிர்வாகப் புலியான அம்மா......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arasan - chennai,இந்தியா
10-ஜூலை-201213:58:30 IST Report Abuse
Arasan சேகர் சேகரன், ஒருவேளை தினமலரின் நிருபர் என்று நான் நினைக்கிறேன், நீங்கள்?..................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arasan - chennai,இந்தியா
10-ஜூலை-201212:39:49 IST Report Abuse
Arasan ராமன் iyere -என்ன சொல்லவர்ரே ஒன்னும் புரியல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arasan - chennai,இந்தியா
10-ஜூலை-201212:38:12 IST Report Abuse
Arasan கல்லா கட்டும் நேரமிது. வாழ்க, வளர்க, உங்கள் சீரிய தொண்டு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nathiya - namakkal,இந்தியா
10-ஜூலை-201212:35:40 IST Report Abuse
nathiya Amma kadantha sila வருடங்களில் இல்லாத அளவுக்கு சாதனை படைத்து உள்ளார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.