Advertisement
இயற்கை வளங்கள் ஏலம் விட உத்தரவு ! ஜனாதிபதி மனு இன்று விசாரணை நடக்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2012,11:05 IST

புதுடில்லி: 2 ஜி ஸ்பெட்ரம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் இயற்கை வளங்கள் ஏலம் விட வேண்டும் என்ற யோசனையை ஏற்பதில் சிரமம் உருவாகும் என்றும் மறு சீராய்வு மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.


தலைமை நீதிபதி எச்.கப்பாடியா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த மனுவை விசாரிக்கிறது. ஏற்கனவே இந்த பெஞ்ச் இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் தனியார் மற்றும் அரசு தொழில் நிறுவனங்கள் , ஜனதாகட்சி தலைவர் சு. சாமி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த மே மாதம் 11 ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இன்று காரசார விவாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


2 ஜி ஸ்பெக்ட்ரமில் விடப்பட்ட 122 லைசென்ஸ்சுகள் ரத்து செய்து இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏலம் விடும் முறை ஏன் பின்பற்றக்கூடாது என்று கோர்ட் எழுப்பிய கேள்வி மத்திய அரசை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்று செயல்படுவதில் சிரமம் ஏற்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் சார்பில் மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Gokzz - Bangalore,இந்தியா
10-ஜூலை-201214:53:14 IST Report Abuse
Gokzz ஏலம் விட்டால் கொள்ளை அடிக்க சிரமம் என்பதை மத்திய அரசு தெளிவாக சொல்ல வேண்டாமா...அப்போ தானே உச்ச நீதி மன்றத்துக்கு புரியும்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
10-ஜூலை-201214:18:40 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் உண்மையிலேயே குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கு சேவை செய்யும் எண்ணம் இருந்திருந்தால் அரசு நிறுவனமாகிய BSNL க்கு அந்த ஸ்பெக்ட்ரத்தை கொடுத்து, ஒரு ரேஷன் கார்டுதாரருக்கு, ஒரே ஒரு சாதாரண மொபைல் மூலம் மாதம் 100 கால்கள், 100 sms மட்டும் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தும் வசதியுடன் கொடுத்திருக்கலாம் ( மின் வாரிய கட்டணம் போல ). அதனை விட்டுவிட்டு, லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு மஞ்சத்துண்டின் கிரிமினல் ஆலோசனையின் பேரில் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்டரத்தை விற்றது கிரிமினல் குற்றமே. ( அவர்களும் ஹவாலா, கள்ளக் கடத்தலில் இன்டர்போலால் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளின் கம்பெனிகளுக்கு பல மடங்கு விலையில் ஸ்பெக்ட்ரத்தைக் கைமாற்றி விட்டதும் உண்மைதான். அதிக விலைக்கு வாங்கியவன் ஏழைகளுக்கா சேவை செய்வான்? ). அதனை அங்கீகரித்த சிதம்பரம், மன்மோகன், பெரும் பலன்பெற்ற சொக்கத்தங்கம் ஆகியோர் குற்றவாளிகளே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
10-ஜூலை-201213:27:01 IST Report Abuse
Mohd. Rias ஒரு காலத்தில் நமது நாட்டை காங்கிரஸ் (I ) ஆண்டது. இப்போது தீய சக்திகளின் துணையுடன் காங்கிரஸ் ( இத்தாலி ) ஆண்டு கொண்டு இருக்கிறது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kalugu - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூலை-201212:47:21 IST Report Abuse
kalugu அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறது இந்த காங்கிரஸ் அரசாங்கம். தேசிய அவமான சின்னம் காங்கிரஸ் மற்றும் அதன் தற்போதைய (கொள்ளை) கூட்டணி. திருடர்கள் முனேற்ற கழகம் திருந்தாதவரை தமிழ்நாட்டை காப்பாற்றமுடியாது. கழுகு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.