பாதுகாப்பிற்கு ஆபத்து:மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் தர்மேந்திர சர்மா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""தனி ஈழ கோரிக்கை ஆதரவாளர்களும், விடுதலைப் புலிகளின்ஆதரவாளர்களும், தொடர்ந்து மக்களிடையே பிரிவினைவாத போக்கை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், புலிகளுக்கு ஆதரவான நிலையை அதிகரிக்க முற்பட்டுள்ளனர். இது, நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்,'' என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கைத் தமிழர்கள் மத்தியில், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை, புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். இது போன்ற பிரசாரங்கள் செய்யப்படுவது தொடர்வதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில், அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.-நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சரியாகசொன்னீர்கள் சசி. இவர் ஆட்சியில் எத்தனை மீனவர்களை சிங்களப்படை சுட்டுத்தள்ளியது முதலில் சொந்த இனத்தை பாதுகாக்க அல்லது யோசிக்க அப்பொழுது பெரியவருக்கு நேரமில்லை சொத்து சேர்ப்பதில் தான் குறியாய் இருந்தார். இவர் தமிளினத்துக்காகப் மாநாடு போடப்போகிறாரா? பலே பலே இதை வைத்து மத்தியிலே புதிதாய் ஒரு அமைச்சர் பதவி சட்ட அமைச்சர் கேளுங்கள் எல்லா நீதி மன்றங்களும் உங்கள் அமைச்சர் கட்டுபாட்டில் வேண்டும்..... அப்புறமென்ன தி மு க திறந்து விட்ட குண்டர்கள் கட்சி தான் தமிழ் நாடு அடுத்த ஈழ நாடு தான்..........
நாளொரு எண்ணம் பொழுதொரு வண்ணம் கருணாநிதிக்கு நேற்று வரை தனி ஈழமே தீர்வு யாருக்கு இலங்கை தமிழர்களுக்கு இன்று அந்தர் பல்டி தனி ஈழத்திற்கு ஆதரவு இல்லை, இந்திய அரசும் எட்டப்பன் கூட்டாளிகள் தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கை மக்களை அழித்து விட்டார்கள், எஞ்சியவர்களுக்கு இங்கு போர் பயற்சி தான், இந்திய தமிழனை மறந்தது, தமிழினம் இலங்கை தமிழ் மக்களை மறந்தது, தமிழ் ஈழம் பகல் கனவு, கொட்டாவி விட்ட நேரத்தில் பேட்டி கொடுத்தது தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்று மாநாடு பேசும் முன் தீர்வை தீக்கிரையாகி விட்டார்கள் எபோதும் போல் இருகின்றவரை பாதுகாக்க போகின்றனராம், இங்கு யாரும் பேசாமல் இருந்தாலே அங்கு பாதிப்பு இல்லை,
கவிதை வடிப்பாய் கேடக ஆசையாய் இருக்கும், தமிழ் பேசுவாய் இனிமை சுரக்கும், வறுமையில் வாடும் மனிதனாக இருக்கும் சினிமா இளஞனுக்கு கொஞ்சும்தமிழிலும் ,வீர தமிழிலும் வசனம் எழுதுவாய் அனல் பறக்கும் , தமிழனுக்காவும் ,தமிழ் மொழிக்காவும் குரல் கொடுப்பதாய் கூறியவுடன் மெய்சிலுத்து கலத்துக்கு வரவோம் ,ஆனால் உன் சுயனலத்திறகாதான் செய்கிறாய் என்பத்தை காலம்கடந்து தெரிந்து கொண்டபோது தமிழன் அழிந்துகொண்டிருக்கிறான் காப்பாற்ற வருவது யார் என்பதை தெரியாமல் நிற்க்கிறோம் ஏன் தெரியுமா முக்கால் வாசிப்பேர் உன்பாசறையில் வளர்ந்தவர்கள். இனியுமா பேசுகிறாய் தமிழனை பற்றி .
கருணாநிதியை பொறுத்தவரை அவரும் அவரது குடும்பமும் தவிர வேறு கொள்கை எதுவும் கிடையாது.தானும் தன குடும்பமும்,கிடைத்தால் ஆட்சியையும்,இல்லை என்றால் மத்திய அரசில் ஒட்டிக்கொண்டிருப்பதும் சொத்தும் சுகமும் அதை அடைய நயவஞ்சகமும் தான் அவரது கொள்கை.தமிழ் ஈழத்திற்கு பெப்பே காட்டிய மாதிரி இவரை நம்பும் இவரது தொண்டர்களுக்கும் இறுதியில் பெப்பேதான்.தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே போட்ட நாமத்தால்தான் ஆட்சியை இழந்தார்.திராவிடம் பேசியே தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்டுக்கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள் எல்லாமே விட்டைகள்தான்
கருணாநிதியின் அறிவிப்பு ஊரை ஏமாற்றும் வேலை. இது மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்க எடுத்த ஆயிதம் கருணாநிதிக்கு உண்மையில் தமிழீழம் பற்றி அக்கரை இருந்தால் முடிவை மாற்ற மாட்டார் பாவம் தமிழர்கள்
" அக்கட்சியின் மாநில செயலர் பாண்டியன் கூறும் போது, ""இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின் போது, கருணாநிதி, மத்திய அரசுக்கு நெருக்கடி தரவில்லை. தற்போது, "டெசோ" மாநாடு யாருக்காக நடத்துகிறார் என்பது தான் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்." - இன்னமும் புரியவில்லையா? தமிழ் தேசிய இனத்தின் தலைவன் என்று பிரபாகரனை விளித்தால் அவரால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? "தமிழர்களுக்கு ஒரே தலைவன் தான் அது இந்த கருணாநிதி தான் " என்பதை மனதில் கொண்டு, தற்போது ஈழத்தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததை மனதில் கொண்டு, எப்படியாவது இந்த முறையேனும் சிறை சென்று மக்களின் அனுதாபத்தை பெறவேண்டும் என்பதையும் மனதில் கொண்டு, மேலும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிலபல கல்வெட்டுக்களை மனதில் கொண்டு... தனக்கே தனக்காக மட்டுமே இந்த மாநாட்டை தலைவர் நடத்துகிறார்... உலகத்தமிழ் மக்களே... அலைகடலென திரண்டு வாரீர்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.