சென்னை:"இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பெற, அறவழியில் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது தான், "டெசோ' மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்குப் பின், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட, அறவழியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான், சென்னையில் நடத்தப்போகும் மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.தனித் தமிழ் ஈழம் வேண்டும்; அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இவர் இப்படிச் சொன்னதால் தான், இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு இவர் தான் காரணம் என்பர்.
முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்து சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பர்.தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம். இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ் ஈழம் வேண்டும், அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டியிருக்கிறது. அவர்களின் அழிவுக்கு கருணாநிதிதான் காரணம் என்பர். முதலில் இலங்கைத் தமிழர்களின் இப்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்துச் சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், தமிழ் ஈழ கொள்கையை விட்டார் என்பர்."
ஸ்ரீலங்கா பிரச்சனை போன்று எதையாவதை கையில் எடுத்தால் கலகலத்து வரும் கட்சியினரை கைபிடிக்குள் வைத்து இருக்கும் மத்திய மாநில அரசுகள் புதிய கைது நடவடிக்கை எடுக்க தயங்கும் என்பதாலும் டெசோ வியாபாரத்தை மு க கையில் எடுத்தார். ஆனால் ராஜீவ் குடும்பம் அதிருப்தி அடைந்து கூட்டணி உடைந்தால் மாநில அரசு மலைப்பாம்பு இரை விழுங்குவது போல குடும்ப மற்றும் கட்சியினரை கைது செய்து உள்ளே தள்ளும். இந்த குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பேசி அப்புறம் பின்வாங்கியதில் இப்போது ராஜீவ் குடும்பம் மற்றும் தமிழ் அமைப்புகளின் ஆகிய இரு புறமும் வெறுப்புக்கு ஆளாகி திரி சங்கு சொர்க்கத்தில் மு க உள்ளார். ஆளும் கட்சி மற்றும் பத்திரிக்கை வேறு தமது ஏளனத்தை காட்டுவார்கள். மு க விற்கு இது வேண்டாத வேலை.ஆனால் அதனால் என்ன??? இவரும் இவர் குடும்பத்தோர் அடித்த கொள்ளையில் சம்பாதித்த பொருளுக்கு வழக்கு செலவுகள் நிங்கலாக வேறு எந்த குறைவும் வராது . வைத்தி சென்னை
அறவழி, அன்னா ஹசாரே வழி எல்லாம் இந்த காலத்தில் வெற்று பேப்பர் செய்திக்கு மட்டும் தான் உபயோகப்படும்...அறவழி காந்திஜி காலத்தில் வெள்ளைகாரனிடம் 1900 -இல் ஒத்துபோனது, வென்றது, வெள்ளைக்காரனுக்கு இதயம், இறுக்கம் கொஞ்சமேனும் இருந்தது .. ஒருவேளை கலைஞர் எடுத்த முடிவு வெற்றி பெற்றால் என்றென்றும் உலக சரித்திரத்தில் நிலைத்து நிற்ப்பார், கலைஞர் இந்தியாவில் உள்ள vision இல்லாத இடை தரகர்களிடம் பேசுவதை விட்டுவிட்டு, ராஜபக்ஷேவை நேரடியாக சந்தித்து தமிழர்களுக்காக பேசுவது நலம், அந்த ஆள் கண்டிப்பாக கேட்பான் இவருக்காக... அப்போதும் அவன் கேட்கவில்லை என்றால்.......நாம் பதில் சொல்ல தேவை இல்லை... காலம் தக்க பாடத்துடன் பதில் சொல்லும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.