கோத்தகிரி: ""பணத்தால் சத்தான உணவுகளை வாங்கலாம்; பணம் பசியை ஏற்படுத்தாது,'' என, முதல்வர் ஜெ., பேசினார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாடு காட்சி முனை பகுதியில், "பாங்க் ஆப் இந்தியா' கிளையின், ஏ.டி.எம்., மையத்தை, மாநில முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் செழிக்கவும், மக்களின் வாழ்க்கை தரம் உயரவும் வங்கிகள் ஆற்றும் பணிகளில் முன்னிலையில் இருப்பது, "பாங்க் ஆப் இந்தியா' என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஏ.டி.எம்., சேவை மூலம், இங்குள்ள மக்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில், தேவைக்கேற்ற அளவில் எளிதாக எடுத்துக் கொள்ள இயலும். சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள எனது விருப்பமாகும். சிறுதுளி பெரும் வெள்ளம், சிறுக கட்டி பெறுக வாழ் போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன.
பணம் மட்டுமே வாழ்க்கையில்லை: அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்தில் உண்டு. பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை வாங்கலாம்; அவை மட்டுமே நமக்கு தூக்கத்தை கொடுக்காது. பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்கலாம். ஆனால், பணம் பசியை ஏற்படுத்தாது. நோயை சரி செய்ய, மாத்திரைகளை பணத்தால் வாங்கலாம்; அழகு சாதனங்களை பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது. எனவே, பணத்துடன் நல்ல மனமும் வேண்டும். அதுவே எப்போதும் மகிழ்ச்சியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.
நிலமும், கட்டடமும் இலவசம்! நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில், பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம்., மையம், புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளை ஆகியவை, முதல்வரால் நேற்று திறக்கப்பட்டது. இந்த ஏ.டி.எம்., மையத்திற்கான இடத்தை, கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் இலவசமாக அளித்ததுடன், கட்டடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு ATM கட்டுறதுக்கு மிஞ்சி மிஞ்சி போனா எவ்வளவு நிலம் தேவை படும்.... அஞ்சுக்கு அஞ்சு சதுர அடி நிலம் இருந்தா போதும்ன்னு நினைக்கறேன்..... இவ்வளவு பெரிய நிலத்தை இந்தம்மா இலவசமா குடுப்பாங்களாம்..... ஆனா திருமண மண்டபம், பூங்கா, வங்கிகள் கட்டுவதற்கான சிறிய இடத்தை மக்கள் தரணுமாம்.... ரொம்ப நல்லா இருக்குங்க........ நான் உமி கொண்டாறேன் நீ அரிசி கொண்டுவா ரெண்டுபேரும் ஊத்தி ஊத்தி சாரி ஊதி ஊதி திம்போம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.