Advertisement
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?மொழி பெயர்ப்பால் மாணவர்கள் குழப்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012,23:43 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 31,2012,00:21 IST

பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.


இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.


தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
30-ஜூலை-201215:55:57 IST Report Abuse
பாமரன் இது ஒன்னும் பெரிய தப்பா இல்லன்னா புதுசா தெரியல....நாம அஞ்சு வருஷத்துக்கு ஒரு தபா ஒரேயொரு எழுத்த தவிர வேற எதுலயும் வித்தியாசம் காட்டாத கட்சிங்களுக்கு (அதாங்கோ திமுக / அதிமுக) வோட்ட போட்டுட்டு ஞே ஞே ன்னு முழிக்கிரோம்ல????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
tamilaa thamila - chennai,இந்தியா
30-ஜூலை-201213:54:48 IST Report Abuse
tamilaa thamila அப்துல் என்றால் அடிமை அபுல் என்றால் தந்தை. முதல் கல்வியமைச்சரும் சுதந்திர போராட்ட தலைவர்களில் முன்னிலை தலைவர்களில் ஒருவரும்,.அன்றைய காங்கிரசின் அகில இந்திய தலைவருமான கல்வித்தந்தை அபுல் கலாம் ஆசாத் என்பதே சரி. இருட்டடிப்பு செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Manavalan - bintulu,மலேஷியா
30-ஜூலை-201205:48:18 IST Report Abuse
Manavalan இதில் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது.writer , reviewer ,approver ,oser என்று பல நிலைகளை தாண்டிதான் ஒரு டாகுமென்ட் தயாராகிறது.பிரதமர் அனைத்தையும் படிபதில்லை.படிக்கவும் முடியாது.இதில் பெரிய கூத்து என்னவென்றால் இதற்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல தினருவதுதான்.அப்துல் கலாம் என்பது 1988 மேல் தான் பிரபலம்.என்னத்த சொல்ல.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஜூலை-201214:32:09 IST Report Abuse
Nallavan Nallavanபிரதமருக்கு எப்படி ஐயா ஒன்றும் செய்ய முடியாமல் போகும்???? ஒரு டாகுமெண்டில் நீங்கள் கையெழுத்திட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? \\\\ பிரதமர் அனைத்தையும் படிப்பதில்லை.படிக்கவும் முடியாது. //// என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ""படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டேன்"" என்று சொன்னால் சிரிக்க மாட்டார்களா? சிரித்தாலும் நிச்சயம் வாயால் சிரிக்க மாட்டார்கள் நமது கல்வித்துறை அதிகாரிகள் அதைப் படித்துப் பார்த்து தவறினை உரிய கடிதப் போக்குவரத்து மூலம் பிரதமர் / பிரதமர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றிருந்தால் (மாநில அரசின் கல்வித்துறைத் தலைமைக்கு நகல் அனுப்ப வேண்டும்) தாமதமாகவேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் அதைச் செய்ய நமது அதிகாரிகளுக்குச் சோம்பேறித்தனம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mahaRaja - nagappattinam dist,இந்தியா
30-ஜூலை-201205:44:06 IST Report Abuse
mahaRaja இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nathan uthayan - Paris,பிரான்ஸ்
30-ஜூலை-201201:51:55 IST Report Abuse
nathan uthayan என்னாது.. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தா?? இது வரை எந்த பாடப்புத்தகத்திலும் படித்ததாக ஞாபகமே இல்லையே. அந்தளவிற்கு அவருடைய நாட்டுப்பற்றும் தியாகமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது சிலரால்.. ஐ.ஐ.டி யையும் உருவாக்கியவர் என்கிறார்கள் உண்மையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
30-ஜூலை-201206:09:03 IST Report Abuse
Thangairajaநீங்கள் குறிப்பிடுவது உண்மை தான். சுதந்திர போராட்டத்தில் பங்கு பெறாத ஒருவர் பிரதமராக இருப்பதால் அவருக்கு தெரியவில்லையோ என்னவோ ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jai - ,கனடா
30-ஜூலை-201201:30:41 IST Report Abuse
Jai மௌலானா அபுல் கலாம் அசாத் என்பதே சரி (என்று தோன்றுகிறது).
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
suvanappiriyan - riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-201201:02:31 IST Report Abuse
suvanappiriyan இதில் பிரதமர் மன்மோகன் சிங் எந்த தவறும் செய்யவில்லை. அரபி மொழி தெரியாததால் வந்த குழப்பம் இது. அப்துல் என்ற அரபி வார்த்தைக்கு அடிமை என்ற பொருள் வரும். அப்துல் என்பதை சுருக்கி சிலர் அபுல் என்று கூப்பிடுவர். எழுதும் போது அப்துல் என்றே எழுத வேண்டும். எனவே இதில் குழம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mahaRaja - nagappattinam dist,இந்தியா
30-ஜூலை-201205:46:53 IST Report Abuse
mahaRajaசுவனப்பிரியன் நீங்க முதலில் குழப்பம் பண்ணாம இருங்க . அப்துல் என்றல் அடிமை எல்லாம் தெரியும் ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Navas ahamed Shahib - riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-201206:17:52 IST Report Abuse
Navas ahamed Shahibஅபுல் கலாம் என்றால் வார்த்தைகளின் தந்தை , அப்துல் கலாம் என்றால் வார்த்தைகளின் அடிமை , எந்த ஒரு மனிதனும் கடவுளுக்கு மட்டும் தான் அடிமை , மேலும் தினமலர் அஸ்ஸாம் கலவரத்தின் உண்மை நிலையை எழுதியதற்கும் , அபுல் கலாம் ஆசாத் அவர்களை பற்றி எழுதியதிற்கும் என் மணபூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.