லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீரர் காஷ்யப் முன்னேறினார். இதன்மூலம் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார்.
லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை சந்தித்தார். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய காஷ்யப், இரண்டாவது செட்டை 15-21 எனக் கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட காஷ்யப் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-9 என தன்வசப்படுத்தினார். இறுதியில் காஷ்யப் 21-14, 15-21, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இவர், இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் காலிறுதி வரை சென்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.