சென்னை: "காலரா பிரச்னைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் வெள்ளை அறிக்கை விடத் தயாரா?'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை மாநகரில் வேகமாகப் பரவிவரும் காலரா நோயை கட்டுப்படுத்தாத சென்னை மாநகராட்சியைக் கண்டித்தும், குடிநீரில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்காத நிர்வாகத்தைக் கண்டித்தும், தி.மு.க., சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது: நான் மேயர் பதவி வகித்தபோது, மக்களின் சேவகனாகப் பணிபுரிந்தேன். குடிநீர் பிரச்னை ஏற்பட்டிருந்தால் எனக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியது கிடையாது.
சவாலுக்கு சவால் : இப்போதைய மேயரிடம் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகக் கூறினால், குடிநீருக்கும், மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். சென்னையில் வாந்தி, பேதி, காலரா பரவுகிறது என்று கூறினால், உரிய நடவடிக்கை எடுக்காமல் மறுப்பு சொல்வதிலேயே குறியாக உள்ளனர். காலராவை வைத்து அரசியலை நடத்தும் எண்ணம் தி.மு.க., வுக்கு கிடையாது. காலரா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகளே கூறுகின்றனர். காலரா இல்லை என, சவால் விட்டு மேயர் பேசுகிறார். அவருக்கு நாங்களும் பதில் சவால் விட்டு எங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. மக்கள் நலனில் அக்கறை எடுத்து கேட்கிறோம். எங்கள் சவாலை ஏற்க தயாரா?
வெள்ளை அறிக்கை : நாளையே அனைத்துக் கட்சி குழு அமையுங்கள். அதில் கட்சிக்கு ஒரு பிரதிநிதி, பத்திரிகைகளுக்கு ஒரு பிரதிநிதியை இடம் பெறச் செய்யுங்கள். நீங்கள் சொல்லும் பகுதிக்கு குழு வந்து பார்வையிடட்டும். அப்போது காலரா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும். நாங்கள் சொல்லும் பகுதிக்கும் நீங்கள் வாருங்கள். காலரா இருப்பதை நிரூபித்துக் காட்டுவோம். காலரா இல்லை என உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறுகிறார். காலரா பிரச்னைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட அவர் தயாரா? இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
குஷ்பு ஆவேசம் : கண்டன ஆர்ப்பாட்டத்தில், "சென்னை மாநகராட்சி ஈக்கள், கொசுக்களின் இருப்பிடம்', "காலரா நோயின் பிறப்பிடம்' உள்ளிட்ட பல்வேறு கண்டன கோஷங்களை நடிகை குஷ்பு உட்பட தி.மு.க, நிர்வாகிகள் ஆவேசமாக எழுப்பினர். சில தொண்டர்கள் கொசு வலைகளையும், கொசுக்களை விரட்டி அடிக்கக் கூடிய எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து வந்தனர். மேடையில் முன் பகுதியில் கொளத்தூர் பகுதி தி.மு.க., சார்பில் கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏன்? உள்நாட்டிலும் ,வெளிநாட்டிலும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்திற்கு வெள்ளை அறிக்கை கேளுங்களேன் , மேலும், பல லட்சம் கோடிகளை தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிகளில் கடனாக வாங்கிவிட்டு, அதை பல வருடங்களாக முறையாக திருப்பி செலுத்தாமல் ஏப்பம் விட்டு விட்ட பெரும் பண முதலைகளின் பட்டியலை கேளுங்களேன் , வாராக்கடனுக்கு வெள்ளை அறிக்கை தருமாறு ரிசர்வ் வங்கியையும் ,நமது புதிய நிதி அமைச்சரையும் வலியுறுத்தி கேளுங்களேன் ,இதற்காக தொடர்ந்து பல முறை ஆர்பாட்டம் செய்தால் மக்கள் உங்களை மனமார பாராட்டுவார்கள்,வாழ்த்துவார்கள் .செய்வீர்களா ?
ஜி.எஸ்.ராஜன்
சென்னை .
காலரா இருப்பது உண்மை என்றால் அதை சரி செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இதில் அரசியல் தேவையில்லை. சரி செய்துவிட்டு அறிக்கை வெளியிடுங்கள். ஸ்டாலின் கோரிக்கை நியாயமானதே. தி.மு.க. ஆட்சியிலும் இதே காலரா பிரச்சனை வந்தபோது எதிர்கட்சிகள் என்ன செய்தீர்களோ அதை தான் இவரும் செய்திருக்கிறார். நமது தேவை ஆட்சியாளர்களின் சேவை......
சென்னை நகரம் குப்பை கூளமாகிவிட்டதேன்னவோ நிஜம் தான். அது எப்போது தான் சுத்தமாக இருந்தது? இவர்கள் ஆட்சியில் கூட தான் சென்னை இந்த அளவிற்கு குப்பையாக இருந்தது. இந்த குப்பைகளும் மண் துகள்களும் சேர்ந்து சென்னையை ஒரு குப்பைகாடாக மாற்றி விட்டது. மக்களுக்கும் சுகாதார விழிப்புணர்வு இல்லை. இந்த மாநகராட்சி ஊரை சுத்தம் செய்தால் மட்டும் போதாது. மக்களை EDUCATE செய்ய வேண்டும். தேவையில்லாமல் குப்பை போடுவதை தவிர்க்க என்னென்ன வழிகள் என்று எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும். குடிநீரில் கழிவு நீர் கலப்பது என்ன தற்போது மட்டும் தானா நடக்கிறது? இது இவர்கள் ஆட்சியில் கூட தான் நடந்தது. சும்மா சும்மா போராட்டம் அது இது என்று மக்களை தொடர்ந்து துன்புறுத்துவதை இந்த திமுக நிறுத்தினாலே தமிழகம் நிம்மதி அடையும்.
If Really the DMK is very much worried about the people of Chennai why can&39t he try to stop காலரா to stop from sperding is to keep the city clean only instead of he giving speach in the beach let all the people and start cleaning the city then we will think that he really worried about the city and the காலரா ok..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.