வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மணலை திருடி கொள்ளை லாபத்துக்கு விக்கலாம். ஏரியை பிளாட் போட்டு அடுக்கு மாடி கட்டலாம். மரத்தையெல்லாம் வெட்டலாம், விவசாயம் நிலமெல்லாம் அழிச்சு பெரிய காலேஜ் கட்டலாம். எல்லாம் மனுஷனால முடியும். ஒரு கைப்புடி மணலைத் தயாரிக்க முடியுமா.. ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? நினைச்சவுடனே மழை பெய்ய வைக்க முடியுமா? தவிச்ச வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லேன்னா நாளைக்கு எல்லாரும் என்ன பண்ணுவோம்னு யோசிச்சு பார்க்கணும். மணல் கொள்ளையை மக்கள் துணிந்து எதிர்க்கணும். காடுகளை அழிப்பதை தடுக்கணும். நம் வருங்கால சந்ததியின் நல்வாழ்வு நம்ம கையில தான் இருக்கு. இந்த அரசியல்வாதிகளை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. இலவசம், டிவி, ஆடு, கணினி, டாஸ்மாக் யோசிக்கத்தான் அரசுக்கு நேரம் இருக்கு.
காவிரி தாய் இந்த மன சாட்சியற்ற மணல் கொள்ளையர்களின் அக்கிரமத்தால் உருக்குலைந்து போய்விட்டாள். அழகான காவிரியை கண்டு ஆண்டாண்டு காலம் ரசித்த கண்கள் இன்று காவிரியின் நிலையினை கண்டு உள்ளத்தில் உதிரம் கொட்டுகிறது. இவர்களின் செயல்களுக்கு தண்டனை பெரும் பாக்கியம் படைத்தவர்கள் விவசாயிகள்தான். இந்த மணல் மூலம் கிடைக்கும் செல்வத்தின் மூலம் எதனை இந்த மனிதர்கள் சாதிக்க போகிறார்கள்?
மழை பொய்த்தது என்று கூறுவதைவிட ... மக்களின் மனம் பொய்த்தது என்று சொல்வது சால சிறந்தது... குறிப்பாக நம் நாட்டு அரசியல்வியாதிகளின் மனம் பொய்த்து விட்டது ... மணல் கொள்ளை, ஏரி, குளம் கொள்ளை, வனம்கள்/காடுகள் அழித்தல், மரம்களை வெட்டுதல் போன்ற இயற்கைக்கு எதிரான செயல்களே இதற்கு காரணங்கள் ஆகும்.. மக்களே தயவு செய்து இயற்கைக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து குரல் கொடுங்கள்...
"ஆடி பதிநெட்டாம்பெருக்கன்று சோழ நாட்டு நதிகளெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியை தொட்டுக்கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுபக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அழித்துக் கொண்டிருந்தது." இப்படி படித்து திருப்தி அடைந்தால்தான் உண்டு. பொன்னியின் செல்வன் தந்த கல்கிக்கு நன்றி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.