காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கிறார். முதல் கட்டமாக அவர், தன் தாயாரின் ரேபரேலி லோக்சபா தொகுதி பொறுப்புகளை கவனிக்க உள்ளார்.
பிரியங்கா, தீவிர அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலக பொறுப்பாளர்கள் அனைவரும், "பிரியங்கா எப்போதும், ரேபரேலி தொகுதி மக்களுடன் கலந்துரையாடி வருபவர். அதனால், இதில் புதிய விஷயம் ஒன்றும் இல்லை' என்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும், இனி பிரியங்கா, ரேபரேலி தொகுதிக்கு செல்வார் என்றும், அங்கு மக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்பார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு முற்பகுதியில், உ.பி., சட்டசபை தேர்தல் நடந்த போது, ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில், பிரியங்கா தீவிர பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்கப் போவது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அவர் எப்போதுமே கட்சிக்கு ஆதரவாக இருப்பர். தன் சகோதரர் மற்றும் தாயாரின் தொகுதிகளில், அவர்களுக்கு உதவிகரமாக இருப்பவர்' என, காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இனி இந்தியாவை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும் இந்திராவை அப்படியே உரித்து வைத்திருக்கும் பிரியங்கா குணத்திலும் இந்திராவை கொண்டிருந்தால் அதில் ஆச்சரியமில்லை. நேரு குடும்பம் இந்தியாவை பிடித்த சாபக்கேடு.இந்தியாவுக்கு ஏற்கனவே இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகள் போதாது என்று இப்போது புதிதாக பிரியங்கா வேறு. சூரியனை கிரகணம் பிடிப்பது போல், இந்தியாவை நேரு குடும்பம் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்த கிரகணம் எப்போது விடும் என்று தெரியும்.இந்த கிரகணம்?நேரு குடும்பம் என்னும் கிரகணம் விடும் வரை இந்திய சூரியன் ஒரு நாளும் பிரகாசிக்க முடியாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.