சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா வறட்சி மற்றும் கிரானைட் குவாரி ஊழல் விவகாரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கோட்டையில் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் 90 நிமிடங்கள் நடந்தன.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்த முதல்வர், நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை வந்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த அவர், அன்று கோட்டைக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி வரை, கோட்டைக்கு அவர் வரும் எந்த திட்டமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்பு திடீரென பிற்பகல் 2:20 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, கோட்டைக்கு வந்தார். முன்னதாகவே அவர் வருகை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர்கள் அனைவரும், தலைமைச் செயலகத்தில் ஆஜராகியிருந்தனர்.
பரபரப்பு: முதல்வரின் இந்த திடீர் வருகையால், தலைமைச் செயலக வட்டாரம் பரபரப்படைந்தது. தொடர்ந்து, ஒண்ணரை மணிநேரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருந்தார். அதன் பின் புறப்பட்டு சென்றார். அலுவலகத்தில் கோப்புகளை பார்ப்பதற்காக முதல்வர் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தை உலுக்கி வரும் கிரானைட் குவாரி பிரச்னை, காவிரி டெல்டா பகுதி விவசாயம், சென்னையில் தற்போது நிலவி வரும் காலரா பீதி
சென்னையில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், காவிரி டெல்டா பகுதியில் நிலவி வரும் வறட்சி தொடர்பாக, அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கனிமவள ஊழல் குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மிகவும் வரவேற்க படவேண்டிய நடவடிக்கை இத்துணைக்கும் காரணம் பத்திரிகைகள் செய்திகள் விழிப்புணர்வு ஆகும் நமது முதல்வர் அவர்கள் கற்பனை கலை துறை- அதாவது சினிமா துறையை சேர்த்தவர்கள் இருந்தாலும் தாம் படித்த நல்ல கல்வியால் மட்டுமே அவர் போராடும் குணம் கொண்டவராக விளங்குகிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும் அவர் நிர்வாக கலையில் சிறந்து விளங்க பொதுமக்கள் கோரிக்கை மனுவாக அனுப்ப வேண்டும் அப்போதுதான் தமிழகம் முழுவதும் குற்றங்கள் தடுக்கப்படும் மக்கள் வாக்கு மட்டும் போட்டால் போதாது சரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் மக்கள் ஆட்சி நிர்வாகம் மெருகேறும் - பூபதியார்
தினமலருக்கு வேறு வேலையே இல்லையா? "அம்மா" "சும்மா" எதையாவது செய்தால், அதை அவரது கடமை என்று விட்டுவிடாமல் அதைபெரிது படுத்தி, "அதிரடி", சட்டையை சுழற்றுகிறார் முதல்வர், கிடுக்கிபிடி, அதிசயம் ஆனால் உண்மை, சூப்பர் முதல்வர் என்றெல்லாம் தலைப்பைபோட்டு ஆளும்கட்சிக்கு "ஜிங் ஜாக்" அடிப்பதும், "அப்பாடா" இனி விடிந்துவிடும் என்று நினைக்கும் மக்களுக்கு மொட்டை அடிப்பதும் ஒரு பத்திரிக்கைக்கு அழகா? இந்த செய்திகளெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மிகைபடுத்தி, என்னவோ மேற்கே இருக்கும் மலையை பெயர்த்து கிழக்கில் கொண்டு வைத்ததுபோல்,யாராலும் முடியாத ஒரு சாகசத்தை செய்ததுபோல் இவ்வளவு "பில்டப் " தேவையா? இதே மற்ற எதிக்கட்சிகள் என்றால் தலைப்பே வேறுமாதிரியாக இருக்கும். அந்த தலைப்பை பார்த்தாலே அவர்களை நக்கலடிப்பது போலவோ அல்லது அவர்களை தரம் தாழ்த்துவது போலவோ இருக்கும் சிந்திக்குமா தினமலர்? "உறைகல்" "குறைகல்" ஆகிவிடக்கூடாது
20 வருஷங்களாக கணிமவளத்தை சுரண்டியது அரசாங்கத்துக்கு தெரியாமலா இருந்தது அந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாமலா அரசு இருந்தது இதுபோன்ற மஹா கொள்ளையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த திரு.சகாயம் அவர்களை பாராட்டி வணங்குகிறேன்.
இந்த கொள்ளையில் தொடர்புடைய 20 ஆண்டுகளில் அங்கு வேலை செய்த அனைத்து அதிகாரிகளும் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் அதற்க்கு எதுவாக மீண்டும் திரு.சகாயம் அவர்களை மதுரைமாவட்ட ஆட்சியராக நியமிக்கவேண்டும் அல்லது இந்த உழலை விசாரிக்க தனியாக (special Team) ஒரு அரசு அமைப்பை சுதந்திரமாக செயல்படுமாறு அமைக்க வேண்டும் அதில் திரு.சகாயம் மற்றும் அவரோடு திரு.உமாசங்கர் அவர்களையும் சேர்க்கவேண்டும்.அப்பொழுதுதான் முழு உண்மையும் வெளியில் வரும் செய்வாரா நம் முதல்வர் அவர்கள்.....??????????
சகாயம் பெரிய ஆளா, மம்மி பெரிய ஆளா... மம்மி தூக்கிப் போட்ட ஆளை, திரும்பவும் கொண்டு வரச்சொல்ல நீர் யாரு ஓய் ?? இந்த தமிழ்நாட்டு பூலான் தேவியை இன்னமுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க ?? இந்தியாவுலே இதுக்கெலாம் சட்டமே இல்லைன்னு நம்ப வச்சி, இதுக்கு காரணம் மத்திய அரசும், கருணாநிதியும் என்று சொல்லி முடிச்சிருவாங்க... பி.ஆர்.பி எவ்வளவு பெரிய ஆளு.. முப்பது ஊரிலே, மூணு லட்சம் பேரு இருக்காங்க.. அதை விட முக்கியமா பக்கத்திலேயே ஒரு பாம்பை (சசிகலாவை) மடியிலே வச்சிக்கிட்டு சுத்துற மம்மியாலே இந்த கேசிலே ஒண்ணும் பண்ண முடியாது... ஒரு சின்ன கல்லைக் கூட புரட்ட முடியாது.. சகாயம், நீ பெரிய கில்லாடிய்யா.. சைலண்டா வச்சியே ஒரு ஆப்பு... சபாஷ்.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.