சேலம்: சேலத்தில், ஆடிப் பண்டிகையையொட்டி, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், போஸ்டர்களில், முதல்வர் படத்துடன், கட்சியில் உள்ள நிர்வாகிகளின் படத்தையும் போட்டு, முதல்வர் உத்தரவை மீறி உள்ளனர்.
தமிழக அமைச்சர்கள், மாவட்டந்தோறும் ஆய்வுக்கு செல்லும்போது, அங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தங்களின் போட்டோ இடம் பெறவில்லை, பெயர் இடம் பெறவில்லை என, கூறி அமைச்சர்களிடத்தில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் கடுமையான உத்தரவை வழங்கினார். அதில், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில், என்னுடைய படத்தை தவிர, அமைச்சர், எம்.எல்.ஏ., நிர்வாகிகள் போட்டோக்களை போடக்கூடாது; வேண்டுமென்றால் பெயர்களை மட்டும் வெளியிட்டுக் கொள்ளலாம் என, கூறியிருந்தார். சேலம் மாவட்டத்தில், முதல்வரின் உத்தரவை யாரும் மதிக்கவில்லை. பெரும்பாலான விளம்பர பேனர்களில், பெயர் இடம் பெற முடியாத அளவில், போட்டோக்கள் நிரம்பியுள்ளன. சேலத்தில், தற்போது ஆடிப்பெருவிழா நடந்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர், போஸ்டர்களில், முதல்வர் படத்தை காட்டிலும், அமைச்சர், எம்.எல்.ஏ., மாநகராட்சி கவுன்சிலர்களின் போட்டோக்கள் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. முதல்வர் உத்தரவையும் அ.தி.மு.க.,வினர் யாரும் மதிப்பதில்லை, என எதிர்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
முதல்வர் உத்தரவை, கவுன்சிலர்கள், மேயர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், என யாருமே கேட்பதில்லை - இப்போ கட்சிக் காரர்களும் கேட்பதில்லையா? கூழைக் கும்பிடு போட்டால் மட்டும் போதும், நம்ம இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்களோ?? முதல்வரும், அவரது கமிஷன் வந்தால் போதும் என்றிருக்கிறார் (எங்க ஊரில் இன்னும் போதுமான எண்ணிக்கையில் எலைட் பார் வரலப்பா, சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க)
ஏம்பா உண்மையின் உறைகள், முதல்வர் அப்படீன்ற சொல் தமிழக மக்களுக்கு அதிமுக தலவி அப்டீங்கறது அதிமுகவுக்கு. அதனால இந்த உத்தரவ முதல்வர் சொல்லல. அதிமுக தலவி சொல்றாங்க. அதனால் அரசு உத்தரவ முதல்வர்ன்னும், கட்சி உத்தரவ அதிமுக தலவின்னும் போடுங்க
தினமலர் அதிமுக கட்சியின் பத்திரிக்கையாக இல்லாமல் மக்கள் பத்திரிகையாக இருக்க வேண்டும் . கட்சியின் செயல்பாட்டினை கண்காணிப்பதை விட்டு விட்டு பொது மக்களின் பிரச்சனையை கவனிக்கவும்.
இவர்கள் பதவிக்காக எதையும் செய்ய துணியும் அடி வருடிகள் தூ இதை விட ஒரு சாதாரண அலுவலகத்தில் குமாஸ்தாவாக அரைவயிறு கஞ்சி "மானத்தோடு" குடித்து வாழலாம். அதுசரி, மானம் இருக்கிறவனுக்கு தானே அதன் பெருமை தெரியும்?
காலில் விழுகிறார்கள் ஒரு நாள் காலை வாரிவிடலாம்???. இதெல்லாம் மனதில்கொண்டுதான் எத்தனையோ அனுபவசாலிகள் இருந்தும் ஒ.ப செல்வத்தை இடைக்கால முதல்வர் ஆக்கினர் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
கடைசியில் இருக்கும் அந்த வெங்காயத்துக்கு மட்டும் தங்கத்தில் frame செய்து வைத்துள்ளார்கள். அம்மாவுக்கு அல்லவா அப்படி போட்டிருக்க வேண்டும்? கொசுறாக MGR ஒட்டிக்கொண்டு வேறு இருக்கிறார். இரட்டை இல்லை இங்கு எப்படி வந்தது?
ஆமாம்....நாங்கள் இல்லாமல் ....பெரியார்,அண்ணா,எம்ஜியார் ஆகியோர் எங்கிருந்து வந்தார்கள்....ஏன் நாங்கள் இல்லாமல் நீங்களே இல்லை......புரிந்துக் கொள்ளுங்கள் தாயே....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.