சென்னை: தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது, சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் பேச்சு வெளியாகியிருந்தது. சென்னை நகர மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது (காலராவால்), ஒரு முதல்வர் எப்படி விடுமுறையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என ஸ்டாலின் பேசி யதாக, அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியீட்டாளர், ஆசிரியருக்கு எதிராக அவதூறு வழக்கை, தமிழக அரசு சார்பில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:முதல்வர் விடுமுறையில் இருக்கிறார் என கூறியிருப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. இது அவதூறானது. முதல்வர் எங்கு தங்கியிருந்தாலும், அவரது அலுவலக மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான கடமைகளை தொடர்ந்து ஆற்றி வருகிறார். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அடிப்படையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
திரு பாலமுருகேசன், நானும்தான் இந்த தள்ளாத 90 வயதில் எனது அலுவலகத்தில் மானேஜரா வேலை செய்யிரேன்னு சொல்றேன். அதை பாராட்டாம முடியாது நீ ரிட்டையர் ஆகனும்னு சொல்லி 60 வயசிலே அனுப்பிட்டாங்க. தள்ளாத வயசுன்னா ஒதுங்கிக்கிடனும். அதை வச்சி அனுதாபம் தேடக் கூடாது. எல்லாம் பணம் படுத்தும் பாடு. அதுக்கு கைத் தட்ட இது போல நாலு சொம்புங்க.
ஜெயாவின் ஆட்சி தொடர என் வாழ்த்துக்கள்...பேச்சுரிமை, எழுத்துரிமை மக்கள் நல பணியாளர்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் எல்லோர் மீதும் அராஜகத்தை அவிழ்த்து விடுவது இது என்ன புதுசா...ஒட்டு போட்ட மக்கள் இதை அனுபவித்து தான் ஆக வேண்டும்...
இப்போ தான் தெரியுது 90 நிமிடம் என்ன ஆலோசனை பண்ணாங்கன்னு, எல்லார் மேலையும் அவதூறு வழக்கு போடத்தானா? முதல்வர் அவர்களே நீங்கள் பொது வாழ்வில் உள்ளீர்கள், உங்களை கேள்வி கேட்க உரிமை உள்ளது.
முதல்வர் இம்மாதிரியானவற்றில் கவனத்தைச் செலுத்தாமல், மற்ற முக்கியப் பிரச்சினைகளைக் கவனித்தால்தான் லோக் சபைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்... ஏனென்றால், மக்கள் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர்...
ஸ்டாலின் அண்ணா, அப்போ மாண்ட மயிலாட பாத்து, வாரத்துக்கு ஒரு நாள் சினிமா விழா கொண்டாடினது ... இந்த வயசுல நமீதா , குஷ்பு டான்சு பாக்கறது எல்லாம் , விடுமுறை இல்லையா ??
ஓகோ எங்க தாத்தா இந்த வயசுலேயும் உழைக்கிறார் என்று சொல்றீங்களா முருகேசன். அவரை முதலில் நல்லதை கற்று தர சொல்லுங்க. நல்லதுன்னா எதுன்னு நீங்க அவருக்கு கற்று கொடுங்கள்....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.