சென்னை: மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, சைதாப்பேட்டையில் உள்ள நான்கரை கிரவுண்ட் நிலத்தை, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக மீட்டனர்.
மயிலாப்பூர், கற்பகாம்பாள் உடனுரை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 10,100 சதுர அடி நிலம், சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி பகுதி எண், 117ல் உள்ளது. 4.57 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தில், 1,500 சதுர அடி மட்டும் தனியார் ஒருவருக்கு பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும் இறந்து விட, அந்த இடமும் காலியாகவே உள்ளது.
மீதம் உள்ள கோவில் நிலத்தை, ஆளுங்கட்சி வட்ட செயலர் ஒருவர் தன் கட்டுபாட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்நிலையில், அந்த இடத்தை, இரவு நேரங்களில் சூதாடுவதற்கும், மது அருந்துவதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களால், அப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலை குறித்து, நேற்று, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. ஆக்கிரமிப்பு விவரம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோவில் நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் நேற்று இந்து சமய அறநிலையத் துறையினர் களம் இறங்கினர்.
நடவடிக்கை
மயிலாப்பூர் கோவில் துணை கமிஷனர் காவேரி, தக்கார் விஜயகுமார் தலைமையில், 15 பேர் கொண்ட குழு, சைதை போலீஸ் உதவி கமிஷனர் ராமன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான காவலர்களின் உதவியோடு நேற்று மதியம், 12 மணியளவில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அதிரடியாக மீட்டனர்.
இது குறித்து கோவில் துணை கமிஷனர் காவேரி கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமான இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த பின்பக்கச் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டது. காவல் துறை உதவி ஆணையர் மற்று சைதாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ஆயோரின் ஒத்துழைப்புடன் இடம் கையகப்படுத்தப்பட்டது. சமூக விரோதிகளால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டு, இவ்விடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உடைக்கப்பட்ட மதில் சுவர் கட்டும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதே போன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் கொல்லிமலை கீழபாதி கிராமத்தில் இருக்கும் அருள் மிகு சிவலோகநாத சுவாமி கோயில் சொத்துகளும் ஆக்கிரமிப்பில் உள்ளது , இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும் .இது குறித்து இந்து சமய அற நிலையத்துறைக்கு பல புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை .தினமலர் தலையிட்டு சிவன் சொத்தை காப்பாற்றுமா ????
B .சரவணன் .கொல்லிமலை கீழ்பாதி
செல் 9865311036
தினமலர் நடவடிக்கை சூப்பர் .....ஆளும் கட்சி வட்ட செயலரே ..சமூக விரோதின்னு அரசு துறையே சொல்லிவிட்டது .......அவருக்கு என்ன தண்டனை ...?..இன்னும் பல ஊர்களில் உள்ள கோவில் நிலங்கள் மீட்ப்பு எப்போது ....? கோவில் நிர்வாகத்தினருக்கு சம்பளம் ...அதற்க்கு ஒரு அமைச்சர் வேற ......அவர்கள் என்ன செய்கிறார்கள் .....அம்மாவிற்கு தலை கும்பிடு போட்டால் மட்டும் போதாது .....பனி செய்யனுமிடியோவ் ......ஆப்பு காத்துகிட்டு இருக்கு .....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கொல்லிமலை கீழ்பாதி அருள்மிகு சிவலோகநாத சாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் இதே போன்று அபகரிக்க பட்டுள்ளது ,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை , இதே போன்று செய்தி தினமலர் பிரசுரித்து சிவன் சொத்தை காப்பாற்றுமா. சரவணன் .ப கொல்லிமலை கீழ்பாதி
செல் 9865311036

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.