சென்னை:""சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடித்தது பெண்கள் தான். இப்போது, தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுகின்றனர்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
ரம்ஜான் பண்டிகை ஒட்டி, முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புது வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு செய்திருந்தார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர். தி.மு.க., வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக நான் பேசினேன் என்று என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குகளை கண்டு நான் அஞ்சமாட்டேன். என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை கோர்ட்டில் சந்திப்பேன்; வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டேன்.ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலை பயப்படாமல் எதிர்கொள்வோம். பெண்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை பெற்றவர்; தி.மு.க.,வை தோற்கடித்ததும் அவர்கள் தான். இப்போது, தவறு செய்து விட்டோம் என்று கவலைப்படுகின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வழக்கை சந்திக்க தயார் கருணாநிதி அறிக்கை
:"முதல்வர் ஜெயலலிதா என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கைச் சந்திக்கத் தயார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறார். அந்த வழக்கைச் சந்திக்க தயார். முதல்வர் சென்று மாதக்கணக்கில் தங்குகிற அளவிற்கு உள்ள அந்த கொடநாடு எஸ்டேட் யாருடையது, அது எப்படி வாங்கப்பட்டது, அந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது என்றால், அங்கு ஒரு முதல்வர் சென்று தங்குகின்ற காரணத்தால், அந்தத் தனியார் இந்த அரசில் உள்ளவர்களிடம் செல்வாக்கைக் காட்டி காரியம் சாதித்துக் கொள்ள முடியுமல்லவா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண வழக்கை சந்திப்பேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
500 ருபாய் 1000 ருபாய் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம் என்று நினைத்து தளபதியார் ஏமாந்துவிட்டார் பாஆவம் ஆனால் தமிழ் நாட்டு மக்கள் நம் வரிப்பணத்தில் ஒரு 0.1% திரும்பக்கிடைக்கிறது என்று வாங்கிக்கொண்டு தமிழ் நாட்டின் நலன் கருதி ஓட்டுப்போட்டார்கள். இப்பொழுது ஒரு குடும்பத்தையே புலம்ப வைத்துவிட்டார்கள் இல்லை இல்லை நிறைய குடும்பங்களை காப்பாற்றி இருக்கிறார்கள். வாழ்க தமிழகம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.