புதுடில்லி: உலக அளவில் பெருமை கொள்ளும் படி செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா சார்பில் விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சியை துவக்குவோம் என சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் சூளுரைத்தார்.
இந்தியாவின் 66வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். முன்னதாக காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முப்படை தளபதிகளை சந்தித்தார். பின்னர் 7.34 மணிக்கு கொடி ஏற்றினார்.
தேசிய கொடியேற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: உணவு தானியங்கள் வீணாவது நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. உலக பொருளாதாரம் வறுமை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதாரத்தை பொறுத்தவரை இந்தியா போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் போன்ற சம்பவங்கள், வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் . நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதும் வறுமையை ஒழிப்பதும் அவசரத்தேவையாக உள்ளது. நாட்டில் அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை . இவ்வாறு பிரதமர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
1 லட்சம் டன் உணவு தானியம் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணானது.. இதை ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கொடுத்திருந்தால் மக்கள் பசி குறைந்திருக்கும். குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு சந்தையில் விற்றிருந்தால் விலைவாசி அடங்கியிருக்கும்... இதை குறைக்க போர்கால அடிப்படையில் தானிய சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று சொல்லமுடியவில்லை... செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பராராம்... என்னவோ செவ்வாய் கிழமை வெண்கலம் வாங்குவோம் என்ற ரேஞ்சில் பேசுகிறார்.... நாட்டின் பிரதமருக்கு, நாட்டிற்கு எது தேவை என்பக்கூட தெரியவில்லை..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.