Advertisement
பெரிய தவறை மறைக்க நடக்குது முயற்சி: தேர்வாணைய விவகாரத்தில் கருணாநிதி திடுக்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2012,23:05 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012,02:17 IST

சென்னை:"தேர்வாணையத்தில் பெரிய தவறை மறைப்பதற்கான முயற்சி தான் தற்போது நடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து, அவரது அறிக்கை:தேர்வாணையக் கழகத்தின் தவறு தி.மு.க., ஆட்சியில் நடந்திருந்தால், அதை எவ்வளவு பெரிதாக ஆக்கியிருப்பார்கள்? தேர்வாணையக் கழகத்தின் வினாத் தாள்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள் யார், அவர்களிடமிருந்து எவ்வாறு வினாத்தாள் வெளியே சென்றது, இதற்குப் பதில் காணாமல், சாதாரணமாக யாரையோ பலிகடாவாக்கி ,பெரிய தவறை மறைப்பதற்கான முயற்சி தான் தற்போது நடக்கிறது.
கடந்த 13ம்தேதி மாலை, 2, 500 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, அதிகாலை 2 மணிக்கு, 1,500 மெகாவாட் ஆகவும், நேற்று காலையில், 500 மெகாவாட் ஆகவும் சரிந்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த இரண்டு நாட்களாக தினமும், 5 முதல், 7 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகிறது.

மொத்தம், 2, 970 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில், கடந்த, 14ம்தேதி அன்று, 2, 400 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகியுள்ளது. மொத்தம், 2, 080 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலையங்களில், 500 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகிறது. இதுதான் அ.தி.மு.க., ஆட்சியில், மின் உற்பத்தியை ஆறே மாதங்களில் அதிகரித்து, மின்வெட்டே இல்லாமல் செய்திருக்கிற லட்சணம்.சென்னை பொது மருத்துவமனையில் முக்கிய மருந்துகள் இருப்பு இல்லை என்றும், கேட்டால்," கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று சொல்வதாகவும் முறையீடுகள் வருகின்றன.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (59)
tamilan - chennai,இந்தியா
17-ஆக-201219:27:54 IST Report Abuse
tamilan எங்கே நாம் பெயர் வெளியே வண்டு நாருவதுர்க்குள், அடுத்தவர்களின் மீது பலி சுமத்தினால் மக்களின் கவனத்தை திருப்பி விடலாம் என்று முந்தி கொண்டாற்போல் தெரிகிறது?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kurumbu - tirupur,இந்தியா
17-ஆக-201215:03:59 IST Report Abuse
kurumbu தம்பி தாத்தாவுக்கு மோர் குடுப்பா ரொம்ப கடுப்புல இருக்கார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jayan - Salem,இந்தியா
17-ஆக-201214:43:12 IST Report Abuse
jayan தலைவா இன்னைக்கு செய்தி படிக்கலையா நிலக்கரி ஊழல் மறைக்க கூட்டணி கட்சியாக உங்கள் ஆலோசனை என்ன தலைவா முதலே உங்க முதுகிலே உள்ளதை பாருங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
17-ஆக-201213:21:08 IST Report Abuse
Rangarajan Pg கலைஞரே கவலையே படாதீர்கள். ஊழல் செய்வதில் நீங்கள் தான் FIRST AND THE BEST . இந்த இந்திய திருநாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் உங்களை போன்ற ஊழல்வாதியாக முடியாது. அது உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரம். நீங்கள் மட்டுமே இதில் முதல் இடத்தில இருக்க முடியும். இன்னமும் ஒரு ஐம்பது வருடங்களுக்கு இத்தகைய ஒரு சாதனையை யாரும் முறியடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. உங்கள் புதல்வனே கூறிவிட்டாரே, கலைஞர் ஐம்பது ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஐந்து ஆண்டுகளில் செய்து விட்டார் என்று. இதிலிருந்தே தெரியவில்லையா. பாவம் இந்த ஜுஜுபி அதிமுக உங்கள் முன் எந்த மூலைக்கு ஆவார்கள். அவர்களுக்கு அவ்வளவாக விவரம் பத்தாது. நீங்கள் படிக்காத மேதை - ஊழல் செய்வதில். அதிமுக என்ன,, இனி யார் அரசியலுக்கு வந்தாலும் ஊழல் விஷயத்தில் உங்கள் முன் மண்டியிட்டு தான் ஆகவேண்டும் .அந்த அளவிற்கு ஊழலில் நீங்கள் உலக POPULAR ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
alriyath - Hongkong,சீனா
17-ஆக-201213:00:04 IST Report Abuse
alriyath தாதா விட்டுட்டு போனது தொடருது.. தென்னை கன்று வச்சா தென்னை மரம் தான் வளரும்... உன்கள ஆட்சியிலே இத பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே ஏன்? இப்பதான் காத்தாலை ஒன்னு இருக்குனே தெரிந்ததா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jayachandran - Doha,கத்தார்
17-ஆக-201212:56:23 IST Report Abuse
Jayachandran அதிகாரிகள் பழைய ஆட்சி போல இருக்கும். ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிற அசட்டு தைரியத்தினால், இப்படி நடந்து கொண்டார்கள் போல. எப்படியாகிலும் பணம் கொடுத்து வினாத்தாள் பெற்று வேலையில் அமர்ந்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கு, தேர்வு ரத்து மிக சிறந்த சவுக்கடி. ஆனால் இதே தவறு மீண்டும் நடக்காமல் இருக்க ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். இதை கண்டிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. முன்னால் முதல்வர் சொல்வதால் இதை பற்றி அறிக்கை விடுவதால் அதிகாரிகளின் மேத்தனதிற்கு ஒரு முடிவு கிடைக்கும் என நம்புவோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vramanujam - trichy,இந்தியா
17-ஆக-201218:52:57 IST Report Abuse
vramanujamஇச்சம்பவத்திற்கு ஆட்சியாளரை குறை கூற முடியாது.எதாவது ஒரு மூலையில் தப்பு செய்தாலும் உடனே மறுமூலைக்கு அனுப்பபடுகிறது. TOFEL பரீஷைமுறை போல இந்தமாதிரியான பரீக்ஷைகளையும் நடத்தவேண்டும். ஒருவருக்கு கொடுக்கப்படும் கேளிவி தாள்கள் இன்னொருவருக்கு தரப்படுவதில்லை. அதிகமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இரண்டவது பரீக்ஷை நடத்தலாம் .reservation கூட செய்யலாம் .முறைகேடுகள் நடப்பது தவிர்க்க படும் . ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
unmai19 - bengaluru,இந்தியா
17-ஆக-201210:02:57 IST Report Abuse
unmai19 இதற்கெல்லாம் அடித்தளம் நீயே உன்னோட ஆட்சி காலத்தில் tnpsc தேர்வு எழுதினால் தேர்வு முடிவு தெரிய ஒன்றரை வருஷம் காக்க வேண்டும் அப்புறம் ஒன்றரை வருஷம் கழிச்சுதான் மதிப்பெண் பட்டியலே வரும் , அதற்குள் தேர்வு எழுதியவர்கள் அந்த தேர்வையே மறந்து விடுவார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் உனக்கு வேண்டியவங்க , சொந்தகாரங்க , காக்கா புடிகிரவங்க இவங்களை எல்லாம் தேர்வு செஞ்சுடுறது , உண்மையா படிச்சவங்க கதி ? நீ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தால் இந்த மாதிரி தப்பு நடக்க வைப்பு இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rajaram avadhani - Tiruchy,இந்தியா
17-ஆக-201209:48:26 IST Report Abuse
rajaram avadhani "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்", என்றார் வள்ளுவர்.மிகவும் நியாயமான கருத்து. அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். தக்க நடவடிக்கை எடுத்து தவறு செய்தோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.தண்டிக்க ஆவன செய்ய வேண்டும். மீண்டும் இதுபோல நிகழா வண்ணம் இருக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sakthi - Zrich,சுவசிலாந்து
17-ஆக-201209:42:09 IST Report Abuse
sakthi 2G ஐ விட பெரிசு ஏதும் கெடையாது பெருசு..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201209:05:11 IST Report Abuse
Pannadai Pandian எனது ஆட்சியின் பொது TNPSC தலைவராக தங்க முத்து வளம் வந்தபோது தேர்வாணையம் மிக சிறப்பாக செயல் பட்டு தங்கமுத்துவும் அவர் கீழ் பணிபுரியும் தமிழக அரசு தேர்வாணைய குழுவும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். அவர்களுக்கு வழிகாட்டிய நான் பயனடைந்ததும் உண்மை தான். எனது ஆட்சியில் தாழ்த்த பட்டோர் (விடை தெரியாத தேர்வர்கள் தான், வேறு யாரும் இல்லை) பலருக்கு தனி அறையில் சகல சௌங்கரியங்களுடனும் தேர்வு எழுத வைத்த தென்ன, SMS மூலம் பயன் பட்டோர் எத்தனை பேர், வினா தாள்களில் சங்கேத மொழிகளை விட்டு சென்றவர்களுக்கு அள்ளி வீசிய மதிப்பெண்கள் தாம் எத்தனை எத்தனை, நேர்முகத்தேர்வில் தாராளமாக நடந்து கொண்ட தேர்வாளர்களுக்கு போட்ட மதிப்பெண்கள் தான் கொஞ்சமா நஞ்சமா ......ஆகா.....எங்கள் ஆட்சியின் சாதனையை சொல்லி மாளாது.....யாரையா அது....கொஞ்சம் கூலா தாளித்த மோர் கொடையா....சூடு தாங்கல.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.