Advertisement
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012,23:09 IST
கருத்துகள் (170)
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சுரங்க ஒதுக்கீடு: கடந்த 2005லிருந்து, 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல், சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 - 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை
ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, கணக்கிட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிட்டுள்ளோம்.

ரிலையன்ஸ்: மத்திய பிரதேசத்தில் உள்ள சாசன் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மின் நிலையத்துக்காக, விதிமுறைகளை மீறி, உபரியாக உள்ள நிலக்கரிகளை எடுத்துக் கொள்ள, அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக லாபம் அடைந்துள்ளது. இந்த தொகையும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடாகவே கருத வேண்டும்.

விமான நிலையம்
: டில்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதிலும், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டில்லி விமான நிலையம், தற்போது அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டில்லி விமான நிலைய ஆணையம் லிட்.,டும் (டி.ஐ.ஏ. எல்.,), ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, விமான நிலைய பொறுப்புகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக, இந்த நிறுவனங்களுக்கு, 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டு குத்தகையாக, அந்த நிறுவனங்களுக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து, 60 ஆண்டுகளுக்கு, இந்த நிலத்தின் மூலம், டி.ஐ.ஏ.எல்.,லும், ஜி.எம். ஆர்., நிறுவனமும், 1,63,557 கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆண்டுக்கு, வெறும் 100 ரூபாய் மட்டுமே, குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களும், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம்,
Advertisement
கட்டணம் வசூலித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மேம்பாட்டுப் பணிகளுக்காக, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, எந்த விஷயமும் இடம் பெறாத நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள், 3,415 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நெருக்கடி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில், அந்த துறையை, பிரதமர் மன்மோகன் சிங், கவனித்து வந்ததால், அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (170)
Balasubramanian Annamalai - chennai,இந்தியா
19-ஆக-201202:23:26 IST Report Abuse
Balasubramanian Annamalai டோன்ட் வொர்ரி காங்கிரஸ் எப்போதும் நேர்மை உண்மை யோடு ஒரு நாள் அவங்களா திருந்துவாங்க வெயிட் 2983
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
manikrishna - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-201202:11:41 IST Report Abuse
manikrishna எல்லாரும் நல்ல தான் கமெண்ட் பண்ணி இருகிர்கள் ஆனா ஒட்டு போடும் போதுமட்டும் மறந்துடுங்க இந்த பொறம்போக்கு பன்னாடைகள
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jeganathan . - Madurai,இந்தியா
18-ஆக-201218:43:57 IST Report Abuse
jeganathan . அண்ணே ,, ஊழல் ஊழல்னு தினம் பேப்பர்ல போடுறாங்களே ,,அப்படீன்னா என்னன்னே ,,,,?? பதில் சொல்லுங்கண்ணே ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajasimman - coimbatore,இந்தியா
18-ஆக-201218:25:08 IST Report Abuse
Rajasimman ayyooooooooooooo, intha naattai kappaatra aal ilaiyaa?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Senthil Kumar Ayyasamy - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201218:23:28 IST Report Abuse
Senthil Kumar Ayyasamy இந்த விஷயங்கள் எல்லாம் நம்ம பிரதமருக்கு தெரிந்தும், இதை எல்லாம் கவனிக்காமல் சோனியாவும்,ராகுலும் அடுத்து எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்று நம்ம நாட்டு மக்களை முட்டாளுக்கும் விசயங்களை நடத்தி காட்டிகொண்டிருகிறது.இதை எல்லாம் இனி நாம் பார்த்துகொண்டிருக்ககூடாது .அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாம் இந்தியர்கள் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jeganathan . - Madurai,இந்தியா
18-ஆக-201218:15:03 IST Report Abuse
jeganathan . என்னோட கால்குலேட்டர்ல 14 ஸ்தானம் மட்டும் உள்ளது ,, கடைசியா உள்ள ஒரு பூஜியதிற்கு இடம் இல்ல ... இனி வரும் காலங்களில் நடக்கும் ஊழல் கணக்கிட முடியாது ,,,, அதனால வேற கால்குலேட்டர் வாங்க போறேன் ,, அரசியல்வாதிகள மாத்தினாலும் ஊழல் குறையும்னு நம்பிக்கை இல்லை ,,, ரூ.910603234300000 ...இது என்னோட செல் நம்பர் கிடையாது ,,,,,1947 முதல் 2010 முடிய இந்தியாவில் மொத்த ஊழல் 2011 மற்றும் 2012 சேர்க்க படவில்லை ,,,, இந்த நாடு போற போக்க பாரு டிங்கிரி டிய்யாலே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
alriyath - Hongkong,சீனா
18-ஆக-201217:54:04 IST Report Abuse
alriyath பொணம் தின்னி பசங்க.. மயான நிலத்திலேயே கையெ வச்சவங்களுக்கு இது ஒன்னும் பெரிசல்ல.. செல்வம் என்பது போதும் என்ற மனதில் தான் இருக்கிறது.. இதை தெரியாத அரசியல்வியாதிங்க நம்ம செழிப்புகளை எல்லாம் மற்ற நாடுகளுக்கு விற்று விட்டு.. நம் நாடு மீது கடன் மேல் கடன் உழக வங்கியில் போட்டிபோட்டு வாங்கி மக்களை கடன் காரர்களாக வைத்திருக்கிறார்கள்.. இதுதான் இந்தியாவின் 66வது சுதந்திர வருஷந்தின் சாதனை.. இந்த தொகை இருந்தால் இந்தியாவின் மீதுள்ள கடன் வட்டியவாசசியும் கட்டி முடித்திருக்கலாம்.. கடனை பற்றி கண்டு கொள்ளாத தலைவர்கள் எல்லாம் ஒரு தலைவரா.. நாளை நம் வாரிசுகள் கல்வி கேட்பார்கள்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
solaimuthu.j - pondicherry,இந்தியா
18-ஆக-201217:49:08 IST Report Abuse
solaimuthu.j இந்திய ஜனநாயகம் என்பது &39 மக்களுடயத்தை திருடர்களால் திருடர்களுக்காக திருட்டுதனமகவே நடதபடுவதே ஆகும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ponnuchamy - sivakasi ,இந்தியா
18-ஆக-201217:42:25 IST Report Abuse
ponnuchamy சட்டங்கள் இயற்ற்றுபவர்கள் சட்டத்தை ஏமாற்றி ஊழல் செய்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Srinath - Coimbatore,இந்தியா
18-ஆக-201217:25:21 IST Report Abuse
Srinath தேசவிரோத காங்கிரஸ்-திமுக கூட்டத்துக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போர்ப் பிரகடனம் விரைவில் வந்தால் தேவலை என்றுதான் தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் நாடுமுழுவதுமே சுதந்திரப் போரில் கலந்துகொள்ளத் தயாராகும். ஆட்சி,பதவி, பணத்துக்காக மலத்தையும் தின்னத் தயாராக உள்ளது காங்கிரஸ்-திமுக கூட்டம். தனது ஓட்டுவங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்குவங்கம்-அஸ்ஸாம் மாநிலத்தில் பங்களாதேஷிகளைத் திருட்டுத் தனமாகக் குடியேறவைத்து வட-கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் தலைதூக்க இந்த தேசவிரோதிகள் அச்சாரம் போட்டுவிட்டனர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.