திரிசூலம்:""இந்திய விஞ்ஞானிகள் தயாரிப்பில் உருவான, 100வது ராக்கெட்டை, செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்,'' என, இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பெங்களூரில் இருந்து, நேற்று மதியம், 12 மணிக்கு, ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம், சென்னை வந்த இஸ்ரோ தலைவர், ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: இந்திய விஞ்ஞானிகளால் உருவாகப்பட்ட, டி.எஸ்.எல்.வி., பி., 21 ரக, 100வது ராக்கெட், முழு கட்டமைப்புடன், தயாராக உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம், இந்த ராக்கெட்டை, விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளில், விஞ்ஞானிகள், முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
அணு சக்தித் துறையில் இந்தியா, 100வது ராக்கெட்டை, குறுகிய காலத்தில் பறக்க விடுவது, மகிழ்ச்சியான விஷயம். இதைத் தவிர ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டோடு, இரண்டு சிறிய ரக ராக்கெட்டுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டுக்களும், வரும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில், ஏவப்பட உள்ளன.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.