டவுண்ஸ்வில்லே: ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்தியா இன்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இன்று நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் வில்லியம் போசஸ்டோ 87 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் சந்தீப் சர்மா 4 விக்கெட் கைப்பற்றினார்.ஆஸி. இந்தியாவிற்கு 226 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
வெற்றியை உறுதி செய்த சாந்த் சதம் :
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சோப்ரா ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சாந்த் சதம் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 47.4 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 227 ரன் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா தற்போது சாம்பியன் பட்டத்தை பெறுவது 3 வது முறையாகும். கடந்த 2000 மற்றும் 2008 ல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர் நமது ஜூனியர் வீரர்கள். இன்றைய ஆட்டத்தில் அதிகபட்சமாக கேப்டன் சாந்த் அதிகப்பட்சமாக 111 ரன்கள் எடுத்தார்.
நமது சீனியர் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 முறை உலக கோப்பை பெற்றுள்ளனர். கடந்த 1983 மற்றும் 2011 உலககோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. ஆனால் ஜூனியர் அணியினர் 3முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன்மூலம் சீனியரை, ஜூனியர்அணி முந்தி விட்டனர்.
வீரர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு அறிவிப்பு
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் என். ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ள செய்தியில், உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ. 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.