கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததாலும், பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகள் இரண்டு லட்சம் பேர், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நூறு நாள் வேலைக்குச் செல்கின்றனர்.
பருவமழை பொய்த்தது, கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தது போன்ற காரணங்களால், தமிழகத்தில் நடப்பாண்டில், குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சாகுபடி செய்யும் பரப்பில், 30 முதல், 40 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது. தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, கிணற்று நீர் பாசனமும், கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால், டெல்டா விவசாயிகள் பலர், தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள, நூறு நாள் வேலைத் திட்டப் பணிக்குச் செல்வது, அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, உள்ளாட்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு நாள் வேலைத் திட்டத்தில், மாநிலம் முழுவதும், நாளொன்றுக்கு, 17 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். கடந்த சில வாரங்களாக, இந்த எண்ணிக்கை, 19 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தஞ்சை, நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திடீரென்று இரண்டு லட்சம் பேர் வேலைக்கு வந்ததால், நூறு நாள் வேலைத் திட்டத்தில், புதிய திட்டங் களை வகுக்க வேண்டியுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை, கிராம ஊராட்சிகள் தயார் செய்துள்ளன. தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 5,300 கோடி ரூபாயை, நூறு நாள் திட்டத்திற்காக, மத்திய அரசு ஒதுக்குகிறது. இங்கு வேலை கேட்டு வரும் தொழிலாளர்களுக்கு, "வேலை இல்லை' என்று சொல்வதில்லை. இவ்வாறு உள்ளாட்சித் துறை அதிகாரி கூறினார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிடைக்கும், ஒரு நாள் கூலியான, 132 ரூபாய் தான், விவசாயக் குடும்பங்களுக்கு ஓரளவு உதவுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பஞ்ச காலங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கை கொடுக்கிறது என்ற உண்மையை மறக்கவோ, மறுக்கவோ இயலாது.... விவசாயிகளுக்கு வெறுமனே , நிவாரணம் கொடுக்காமல் , வேலை வாங்கி சம்பளம் கொடுக்கும் இந்த திட்டம் பாராட்டுக்கு உரியது.... ஆனால் இப்போது செய்யப்படும் வேலைகள் , அடுத்து மழை வரும்போது உபயோகபட வேண்டும்.... நீரில்லா ஏரிகளை , குளங்களை, கண்மாயிகளை , இந்த 2 மாதத்தில் தூர் வாரினால், அடுத்த மழை , செழிப்பானதாக இருக்கும்.....பஞ்ச காலங்களுக்கு மட்டும், மத்திய அரசின் இந்த திட்டம் உபயோகமானது என்பதை அறுதியிட்டு சொல்லலாம்.... உழைத்து 130 ரூபாய் வாங்கினாலும் அது செரிமானமாகும் அவர்களுக்கு.... ஆனால் பஞ்ச காலங்களில் , வறட்சி சமயத்தில் மாதத்திற்கு 20 நாட்கள் அவர்களுக்கு வேலை இருக்குமாறு அரசு கவனிக்குமேயானால் தான் அவர்கள் ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்....
கருநாடகம் தண்ணீர் தர மறுத்து விட்டதா? ஆஹா ஆஹா கருநாடகத்தில் என்னன்னா வறட்சி என்று கூறி மழை வேண்டி யாகம் என்று நடத்துறாங்க, இங்க பத்திரிக்கைகள்/மீடியாக்கள் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறார்கள்?, ஒரு வேலை கருநாடக மேகங்கள் தண்ணீர் தர மறுத்துவிட்டது என்று கூறலாமோ?, மத்தியப்ரதேசத்திலும், ஓடிசாவிலும், ஐதராபாத்திலும், கேரளாவிலும் மழை கொட்டுகிறது, சாலை பெருக்கெடுத்து ஓடுகிறது, சில இடங்களில் வெள்ளம் என்று செய்தி வருகிறது, கேரளா மலைபகுதி மழை நீர் அரபு கடலில் கலக்கிறது, அதே இந்தியாவில் ஒரு பகுதியில் வறட்சி, விவசாயம் பாதிக்கிறது, மத்தியில் ஆளும் கட்சியின் இளம் தலைவனோ நதி நீர் இணைப்பு கூடாது, சாதியபடாது என்று கூறுகின்றான்? எங்கே போயி முட்டிக்கொள்வது, கதம்பமான செய்திகள், தினமலரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து செய்தி தருகையில் தெளிவாய் குறிப்பிடுங்கள், இல்லையென்றால் எட்டப்ப மன்னன் பொங்கி எழுந்து கடிதம் எழுத புறப்பட்டு பின்னர் சிறை நிரப்புவான், கருநாடகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அல்லல் உறுவார்கள்.
100 நாள் வேலை திட்டம்? இதனால் இருக்கின்ற ஒரு சில விவசாய கூலி ஆட்களும் விவசாயம் செய்ய வருவதில்லை.... 100 நாள் திட்டம் மட்டும் தான். அதனால் பயன் அடைபவர்கள் அவ்வூர் தலைவர்கள் மற்றும் அவர் சேர்ந்த அல்லக்கைகள் மட்டுமே. எந்த ஒரு உருப்படியான காரியமும் இத் திட்டத்தால் நடைபெற்றதாக கேள்விப்பட்டதில்லை..... பெரும்பாலனவர்கள் இந்த அட்டையை மட்டுமே வைத்துக்கொண்டு பாதி கூலி பெற்றுகொள்கின்றனர்... மீதி அல்லக்கைகளுக்கு....... இலவச அரிசி, இலவச, மிக்சி, இலவச அடுப்பு, இலவச மின் விசிறி, இலவச, டிவி இப்படி எல்லாமே இலவசம்.... மக்கள் வேலை செய்ய யோசிக்கிறாங்க...... நாட்டை முன்னேற்ற எத்திட்டமும் வருமா?..... கடவுளுக்கு தான் வெளிச்சம்.....
சோம்பேறிகளின் இறுதி புகலிடமே இந்த திட்டம். 19 லட்சம் உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து உழைத்து காட்டி சாதித்த செயல் என்னவோ? இவர்கள் உண்மையாக உழைத்தால்..ஒரே நாளில் இத்தனை கரங்களும் சேர்ந்து ஓர் ஏரியையே தூர் எடுத்திருக்கலாமே..இது மத்திய அரசாங்கத்தின் ஊழல் செய்யப்படும் அபார திட்டமே. இதனால் என்னென்ன திட்டங்களும்..செயல்பாடுகளும் நடந்துள்ளன என்று சொல்ல முடியுமா? இது இப்படி என்றால்..இது போன்ற வேலைக்கு செல்ல காரணம்..விவசாயம் பொய்த்துவிட்டது. நதிநீரை தேசியமாக அறிவிக்காதவரை நாடு பாலைவனமாகும் காலம் விரைந்து வரும். எடுத்ததற்க்கெல்லாம் அரசாங்கத்தை கண்டிக்கும் கோர்ட்டார்கூட இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஆச்சர்யத்தையே கொடுக்கின்றது. காவிரி ஆணையத்தை கூட்ட சொல்லி ஒருமாதம் ஆகியும்..இப்போதுதான் பிரதமர் சம்மதம் தெரிவிக்கின்றார்.பதவி போதை அவரை டெல்டா விவசாயிகளை பற்றி சிந்திக்க மறுக்க வைக்கின்றது. முறையான அரசியல்வாதிகள் இல்லாத நாடு..இப்படித்தான் அல்லோகல்லோகப்படவேண்டும். அம்மாதான் அடுத்த பிரதமர் என்கிற அறிவிப்பு வேண்டுமானால் ஓரளவு நிலையை மாற்றும். நிச்சயம் காலம் உணர்த்தும் அதனை..
கர்நாடகத்தில் தலிபான் ஆட்சி செஞ்சா தண்ணிய தாராளமா சப்ளை செய்வாங்க. அதேமாதிரி கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், மூனாறு, பீர் மேடு பகுதிகளில் லக்ஷரீ தொய்பா இன்னும் ஸ்ட்ராங் ஆவணும். அவுங்கத்தான் முல்லை பெரியாறு தண்ணிய தடை இல்லாம தமிழ்நாட்டுக்கு தொறந்து விடுவாங்க. அப்புறம் அந்த ஹைத்ராபாடி சுல்தான்கள் அனந்தபூர், சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்கள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்த பாலாறு, கிருஷ்ணா நதி நீர் பிரச்சனை முடிவுக்கு வரும். இதெல்லாம் ஒருங்கிணைக்க நான் அஹ்மது ராப் சஞ்சானிய பாத்து பாத் கர்கே ஆயேங்கே...
ஹசன் சாப், கொஞ்சம் யோசித்து கருத்து எழுதுங்களேன், கேரளாவில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது, காவிரியில் கலக்கும் பவானி ஆறுக்கு நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்தாலும் மேட்டூருக்கு தண்ணி வரவில்லை என்னென்ன காரணிகள் என்று கூற முடியுமா இல்லை அதற்க்கும் பிஜேபி தான் காரணி என்று கூறி விட்டு செல்வீர்களா? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று கூறுவதை நினைத்து கொள்ளுமாம், அதுபோல உங்களை பழக்க படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்....
இது மத்திய அரசின் திட்டமானாலும் கிராம லெவெலில் நம்ம கட்சி காரங்க டெய்லி செலவுக்கு வருஷம் முழுவதும் கிடைக்க கலைஞர் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான திட்டம். கம்மாக்கரையில் வேறு எதுக்கோ ஒதுங்குரான்களோ இல்லையோ காதலுக்கு தற்போது காசு வாங்கிகிட்டு ஒதுங்குறாங்க. இதுல வேடிக்கை என்னன்னா கல்யாணம் ஆனா கேசுங்க பண்ற ரவுசுதான் தாங்க முடியில....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.