ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில், சமீபத்தில், 12வயது சிறுவன் ஒருவன், நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உட்பட, பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், தற்போது அமைதி நிலவுவதாக, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா சமீப நாட்களாக, அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், நிலைமை அதற்கு மாறாக இருப்பதாக, அங்குள்ள சிலர் புகார் கூறுகின்றனர். சிறுவர்களை குறி வைத்து போலீசார் கைது செய்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. போலீசாரின் இந்த அதிரடி வேட்டையில், சமீ பத்தில் கைதானவன் பைசான் பஷீர் சோபி,12. சிறுவனான இவனை, கடந்த ஞாயிறன்று, ஸ்ரீநகரில் போலீசார் கைது செய்தனர். இவன் மீது, தீவைப்பு, கொலை முயற்சி மற்றும் நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் போன்ற, சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவனை, 15 நாள் காவலில் வைக்க, கோர்ட் உத்தரவிட்டா லும், மறுநாள் அவனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இவனுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மற்ற நான்கு சிறுவர்கள், ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல சிறுவர்களை போலீஸ் தேடி வருகிறது. சிறுவன் பைசானைப் போல, வேறு பல சிறுவர்கள் இதற்கு முன்னரும், பொதுப் பாதுகாப்பு சட்டம் உட்பட, கடுமையான சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் குறை கூறுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருங்கால தீவிரவாதியை உள்ளே போட்டு நொங்கி எடுப்பதில் தவறில்லை. சட்டத்தில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும். இவன் ஒரு நூறு வீட்டை எரித்திருப்பான், ஆயிரம் ராணுவ வீரர்களை கல் எரிந்து தாக்கி இருப்பான், தீவிரவாதிகளுக்கு கூரியர் வேலை பார்த்திருப்பான், அவனுங்களுக்கு சோறு, தண்ணி பாட்டில் சப்ளை செஞ்சிருப்பான். இது இவன் தப்பு இல்லை, இவன் சமூகமான காஷ்மீரிகளின் தவறு. அது ஒரு தேச துரோகிகளின் கூட்டம். இந்த சிறுவனின் குடும்பத்தில் யாராவது ஒருவர் புத்திமதி சொல்லி இருப்பார்களா ??? புத்திமதி சொல்வதற்கு முன்தான் தாடி வச்சவன் ஜிஹாடி பத்தி ஓத வந்துடரானே, என்ன செய்ய...தாய் தந்தையர் சொல்வதை விட தாடி வச்சவன் சொல்றதை கேள் என்கிறது மதம்.
வீரப்பனை பிடிக்க போன இரு மாநில போலிசார்களே இத்துனை அட்டுழியம் செய்திருக்கும் போது, 50 வருடமாக தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி கொள்ளும் நம் ராணுவம், எத்தனை கற்பழிப்பு, மானபங்க பலாத்கார செய்திகளை காஸ்மீரின் ஒவ்வொரு கிராமங்களும் கதைகதையாய் சொல்லும், இலங்கையில் தமிழ் கிராமங்களில் சிங்கள படையினர் இத்தகைய அட்டுழியங்களை செய்ததாக சொன்னால் நம் மக்கள் நம்புவார்கள், வீரப்பனை பிடிக்க போன நம் போலீசார் செய்ததாக சொன்னால் நம் மக்கள் நம்புவார்கள், ஆனால் காஸ்மீரில் நம் ராணுவம் செய்ததாக சொன்னால் நம்மில் பலர் நம்ப தயாரில்லை. .
சிறுவர்கள் வன்முறையில் இடுபட மாட்டார்கள் என்று சொல்வதும் சரியல்ல.
இங்கே லெபனான் இல் பாருங்கள் 8 வயது சிறுவன் கையில் AK 47 துப்பாக்கி வைத்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் இடுவான். இப்பொழுது தீவிரவதி கலாச்சாரமே சிறுவர்களை துண்டி விட்டு வேடிக்கை பார்பது தான். காஷ்மீரில் இந்திய ராணுவதிற்கு எதிராக 4 வயது சிறுவன் கோஷம் இடுவதை மீடியாவில் காண்பித்தார்கள். இவர்களை உதைப்பதில் தவறே இல்லை.
சார் கம்மண்ட்ஸ் செய்யும்போது சூழ்நிலைகளையும் ஆராயுங்கள். உங்கள் மகனுக்கு விளையாட்டு துப்பாக்கி போதுமானது. காரணம் உங்கள் பையன் கண் முன்னாலே உங்கள் மனைவியோ அல்லது உங்கள் தங்கையோ கற்பழிக்கபடுவதில்லை, கொடுமைபடுதுவதில்லை. நீங்கள் நல்ல ஜீவாதாரதோடு வாழ்கிரீர்கள். சந்தோசம். ஆனால் பாதிக்கபட்டவர்களை கொச்சை படுத்தாதீர்கள். அதை அனுபவிற்பவனுக்கு தான் தெரியும்...
பல மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று தெரியுமா நண்பர் முஹம்மது இலியாஸ்? சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு தீவிரவாத விஷம் உடலில் செலுத்தப் படுகிறது அப்படி உருவானதுதான் சிமி \\\\ உங்கள் பையன் கண் முன்னாலே உங்கள் மனைவியோ அல்லது உங்கள் தங்கையோ கற்பழிக்கபடுவதில்லை, கொடுமைபடுதுவதில்லை. //// சரித்திரத்தைச் சற்றே கண்ணுற்றால் தெரியும் கற்பழித்தாலும், தலையை வெட்டுவதும் யாருடைய பழக்கம் என்று...
அய்யா முஹமது , உங்களுக்கு அந்தத் அனுபவம் உண்டோ ??? உங்கள் வீட்டில் எந்தனை பேர் போலீஸ் மட்டும் ராணுவம் கற்பழித்து கொல்லபட்டனர் ??? . எவனாவது பொய் சொன்னால் அதை அப்படியே நம்பி நாட்டுக்கு எதிரா போர் அதுவும் கடவுள் பெயரில் இது இஸ்லாமிய மதம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை . அந்நிய நாடுகள் இந்திய மீது மறைமுக போர் அதுவும் இஸ்லாம் பெயரில்....
காஷ்மீரில் போலிஸும், நமது ராணுவமும் அந்த மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது, அந்தச் செய்திகள் ஏனோ பத்திரிக்கையிலோ, மீடியாக்களிலோ அவ்வளவாக வெளியிடுவதில்லை. 12வயது சிறுவனுக்கு என்ன தெரியும்? அவனுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு இருக்குமா? என்று சிந்தித்து பார்க்கவேண்டும். இது போன்ற சிறுவர்கள் ஏதேனும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதற்கு காரனம், அவர்களது குடும்பத்தினர் யாரேனும் போலிசாராலோ, ராணுவத்தினராலோ பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் தீவிரவாதிகள் இவர்களது வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு,பணத்தாசை காட்டி, அல்லது நீ பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று இவர்களுக்கு மூளைச் சலவை செய்கிறார்கள். அனைத்து பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்துத்தான் வளர்க்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றானா?, எங்கு செல்கிறான்?, அவன் யார் யாருடன் பழகுகிறான்?, அவனிடம் ஃபோன் இருந்தால் யார் யாரிடமிருந்து அவனுக்கு ஃபோன் வருகிறது? என்ற விபரங்களை எல்லாம் அறி்ந்து வைத்திருக்க வேண்டும். எல்லா மனிதர்களையும் கெடுப்பது தீய நண்பர்களும், சூழ்நிலையுமே. அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் சொல்ல வில்லை. காஷ்மீரில் பாதுகாப்பு இல்லை, குஜராத்தில் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டில் இந்துக்கள் சுமார் 70 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். அவர்கள் அத்துனை பேருமா முஸ்லிம்களை விரோதியாக நினைக்கிறார்கள் இல்லை. ஒரு சொற்ப தொகையினரே அப்படி கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை.நேற்று கூட திரு. நரேந்திர மோடி அவர்கள் எங்கள் மாநிலம் சைவ மாநிலமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டிருந்தார், இவர் இந்தியாவின் பிரதமரானால் இந்திய மக்கள் அனைவரும் சைவமே சாப்பிட வேண்டும் என்று சொன்னால் அது சாத்தியமா? சற்று சிந்தித்து பாருங்கள். பிறகு காய்கறிகள் ரேஷன் கடையில்தான் வாங்க வேண்டும். சில மிருகங்கள், பறவைகள் சைவம் மட்டும்தான் உண்ணும், சில மிருகங்கள், பறவைகள் அசைவம் மட்டும் தான் உண்ணும். மனிதன் மட்டும்தான் சைவம், அசைவம் இரண்டும் சாப்பிட்டாலும் செரிக்கும் அளவுக்கு அவனுக்கு குடல் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் பெரிய தத்துவம் இல்லை. தாங்களெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன். கடவுள் படைத்தது யாவும் மனிதர்களுக்கே. இங்கு ஒருவர் அசைவத்தை சாப்பிட்டுவிட்டு வாட்டசாட்டமாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாக இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.