சென்னையை தாக்கும்:
இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே, 500 கி.மீ., மற்றும் இலங்கையில் திரிகோண மலைக்கு வட கிழக்கில், 100 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்தது.தாங்குமா சென்னை:
புயலை அறிவிக்கும் வகையில், நேற்றுஏற்பாடுகள் தீவிரம்:
இது தவிர, பொதுப்பணி துறையினர், மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும், புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி, அவர்களுக்கான உதவிகளை செய்ய, தயார் நிலையில் உள்ளனர். கடந்தாண்டு, "தானே' புயல் தாக்குதலில் இருந்து, கடலூர், நாகை மாவட்டங்கள் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், "நீலம்' புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதலே, கடலூர் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், அரசு சார்பில், சேத தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.விடுமுறை:
புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, ஏற்கனவே சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்களில், நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயல், இன்று கரையை கடக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நீலம்' பெயர் எப்படி?:
இந்தாண்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின், முதல் முறையாக புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு, "நீலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளவில், ஏற்படும் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம், 1945ம் ஆண்டு துவங்கி விட்டாலும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கான பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலக வானிலை மையத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் உறுப்பு நாடுகள், சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன.கடந்த, 2005ம் ஆண்டு உருவான புயலுக்கு, "பனோஸ்' அடுத்து, 2008ம் ஆண்டு உருவான புயலுக்கு, "நிஷா' அதை தொடர்ந்து, 2010ல் உருவான புயலுக்கு, "ஜால்' கடைசியாக, கடந்தாண்டில் தமிழகத்தை தாக்கிய புயலுக்கு, "தானே' என்று பெயரிடப்பட்டது.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இங்கே பதியப்பட்டுள்ள கருத்துகளை பார்த்தால், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பாலும், தேனும் ஓடி, மக்கள் மிக்க மகிழ்ச்சியாய் இருந்த மாதிரி ஒரு தோற்றம் கொடுக்கப்படுகிறது. அது உண்மை என்றால், மக்கள் தி.மு.க.வை மூன்றாவது இடத்துக்கு எதுக்கு தள்ளினார்கள் அன்பர்களே.........இங்கே கருத்து பதியும் நீங்கள் புத்திசாலிகளா, இல்லை, மக்கள் புத்திசாலிகளா? உங்களின் அறியாமை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.
அப்பவும் சாக்கடை தான் ஓடியது... இப்பவும் சாக்கடை தான் ஓடுகிறது... நாத்தம் பிடிச்ச சாக்கடைகள் தான் இரண்டும்... நீங்கள் "புதிய சாக்கடை சந்தனம் தான்" என்று பழைய நா(த்)தத்தில் கானம் பாடுகிறீர்கள்.. திமுகவினர் "புதிய சாக்கடை, சாக்கடை தான்", என்று புதிய நா(த்)தத்தில் கானம் பாடுகிறார்கள்... நா(த்)தம் என்னவோ ஒன்று தான்... ராகம் (ரகம்) தான் வேறு... எனக்கு சிரிப்பு வரவில்லை... வெறுப்பு தான் மேலோங்கி வருகிறது .....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.