சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்னை வரும் 2013ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மின்வெட்டு பிரச்னை குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரிவான பதில் அளித்து பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த தி.மு.க., ஆட்சியும், மத்திய அரசுமே காரணம் என்று கூறினார். தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு செயல்படுத்தி வரும் மின்திட்டங்கள் மூலம் வரும் 2013ம் ஆண்டு இறுதிக்குள் 4300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வல்லூர், வடசென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டு வரும் மின் திட்டங்கள் செயல்படத்துவங்கும் போது மின் பிரச்னை குறையத் துவங்கும் என்று தெரிவித்துள்ள அவர், கூடங்குளத்தில் 925 மெகாவாட் மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையம் மூ,லம் 230 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் போது, தமிழகத்தின் மின்பற்றாக்குறை முழுமையாக தீர்க்கப்படும் என்றும் கூறினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் மிகக்குறைந்த அளவே மின்சார உற்பத்திக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டதாகவும், மத்திய அரசும் தமிழகத்தின் மின் பிரச்னையை தீர்க்க தவறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கவுள்ள 1721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்காக சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பணமெல்லாம் இலவசதுகுதன் போகுது, இவனகலாலாகரண்ட் கரண்ட் கொண்டு வர முடியாது , ஆமாம் இலவசத்தை அவங்க வீட்டுக்கு கொண்டு போறாங்க, இலவசம் பெரும் மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல,தமிழ் நாட்டு மக்களும் அல்ல ,அப்படியா, அம்மாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் முன் விரோதம் அதனால கரண்ட் கொடுக்க கூடாதுன்னு இப்படி பண்றாங்க , கூடங்குளம் உற்பத்தி தொடங்கினால் ஓரளவுக்கு கரண்ட் ப்ரோப்லேம் குறையும் என்பதயு எல்லோருக்கும் தெரியும் இருதாளும் அதற்கு தடைகள் பல , ஒருபோவேர் பிளான்ட் போட்டால் அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமலா ஆரம்பிப்பார்கள், அங்கு இரிக்கும் மக்கள் எல்லம் மக்கள் தன என்று எல்லோருக்கும் தெரியும் ,சயின்ஸ் படித்தவர்கள் கண்டிப்பாக இதை ஒப்பு
கொள்வர்கள், எந்த அரசும் மக்களுக்கு கொடுகக்கூடதுன்னு எதையும் செய்வதில்லை, இலவசம் கொடுக்கவில்லை என்றல் சொன்ன்ச்தை செய்யல என்பது, கொடுத்தால் இதில் பணத்தை போட்டால் கரண்ட் எப்படி வரும் என்பது , ஒவ்வொரு தனி மனிதனின் மனதில் தோன்றும் கருத்துக்கும் அரசு பதில் தேடினால் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாது,அரசு இயன்றவரை விரைவாக மின்வட்டு பிரச்சன்னைக்கு தீர்வு காண வேண்டும்
மின் தேவை என்பது ஒரு தொடர் பிரச்சினை. எனவே அடுத்த ஆண்டிற்குள் நமது தேவை எவ்வளவு உயரும் என்பதை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்த வேண்டும்.. இல்லையெனில் இப்போது உள்ள நிலை தொடரலாம். மேலும் மின் கட்டண உயர்வை நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு உல்லாச ஹோட்டல்களுக்கும், சினிமா தியேட்டர்களுக்கும் அதிக படுத்தலாம். வீட்டு உபயோகத்திற்கு கட்டணத்தை குறைத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் உதிய உயர்வு விலைவாசி உயர்வுக்கு இணையஹா இருப்பதில்லை
எந்த புத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார பிரச்சினை தீர்க்கப்படும் என்று தேர்தலுக்கு முன் சொன்னீர்கள்? ஆட்சிக்கு வந்தவுடன், மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்பு சரியில்லை மற்றும் தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ததினால் சரியாக இயக்க முடியவில்லை என்றீர்கள். அடுத்தது சூரிய ஒளியிலிருந்து மின் தயாரித்து பிரட்சினையை தீர்ப்பேன் என்றீர்கள். அடுத்தது பிரதமரிடம் மின்சாரம் கடன் கேட்டீர்கள். இப்போது தான் உண்மையை ஒத்துகொள்கிறீர்கள். உங்கள் கடந்த கால ஆட்சியின் போது மின்சார உற்பத்தி நிறுவனங்களை நிறுவ திட்டம் போடவில்லை. தி மு க போட்ட திட்டங்கள் வருகிற வருடங்களில் முடிந்து மின்சாரம் கிடைக்கும் என்று நீங்களே ஒத்து கொள்கிறீர்கள். இப்படியே நீங்கள் விட்ட எல்லா ரீல்களும் வெளிவரும். வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். எல்லா அரசியல்வாதிகளும் ஒரே ரகம் தான்.
மறுபடியும் பொய் JULY 2012 மின்சார பிரச்சனை தீர்க்கப்படும்னு சொன்னிங்க. அதுவும் முடியல. எதிர் கட்சி மேல பொய் கேசு போட்டா மின்சார பிரச்சனை தீர்நதிடுமா? முதல் அமைச்சர் பதவில இருக்கீங்க. நல்ல திட்டங்கள போட்டு நல்லது பண்ண பாருங்க. கருணாநிதி எப்ப பாரு நாலு பேரு வச்சு பாராட்ட சொல்லிக்கிட்டு இருப்பாரு. நீங்க அதுக்கு மேல இருக்கீங்க. தமிழ்நாடு இளைஞர் படை அமைக்கிறது சரி அதுக்கு செலக்ட் பண்றவங்களா நேரடிய வேலை வாயப்பு அலவலகத்தில் பதிஞ்சவங்கள் எடுத்தா நல்லா இருக்கும். அத விட்டு காவல் துறை அலுவலர் எடுப்பார் சொல்லிட்டு நீங்க போய்டிங்க. பாவம் அவர் உங்க கட்சி M L A தொல்லைங்க தாங்காம பல காவல் துறை அலுவலர்கள் போன் ஆப் பண்ணிட்டாங்க. நீங்க எடுக்கிற எந்த முடிவும் சரி இல்ல.
இதுல வேற D M D K M L A இழுக்குற வேலை உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை
அரசியல் தலைவர்களின் எல்லோருடைய வீட்டிலும் மின்வெட்டு அமுல்படுத்தினால் தான் அதன் அருமை தெரியும்.. இத்தனை நாள் பொறுத்தீர்கள். இனியும் கூட ஒரு வருடம் பொறுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று முதல்வர் நேற்று சட்டசபையில் சொன்னார்...அவருக்கு மின்வெட்டு என்றால் என்ன என்று தெரியாது. காரணம் வீட்டில் தடைஇல்லா மின்சாரம் கிடைக்கிறது... எனவே சுலபமாக ஒரு வருடம் பொறுங்கள் என்று சொல்கிறார்... தேர்தலின் வாக்குறுதி .. மூன்று மாதங்களில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும் என்று சொல்லி பதவிக்கு வந்தபின்பு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் மின்வெட்டு நீங்குமாம்.. எனவே தொடர்ந்து ஆதரியுங்கால்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.