Advertisement
குற்றாலத்தில் சூப்பர் சுற்றுச்சூழல் பூங்கா -எல்.முருகராஜ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2012,17:23 IST

குற்றாலத்தில் ஐந்தருவிக்கு அருகே உள்ள பழத்தோட்டம்.

இங்குள்ள பழத்தோட்ட அருவிக்கு ஒரு காலத்தில் சிபாரிசு கடிதம் வாங்கிப்போய் குளித்தவர்கள் உண்டு. ஆனால் திடீரென ஒரு நாள் பழத்தோட்ட அருவி மூடப்பட்டது.


சில ஆண்டுகளாக மூடியே கிடந்த பழத்தோட்ட அருவி பகுதியில் என்னதான் நடக்கிறது என்பதை பற்றி யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் திடீரென கடந்த மாத இறுதியில் குற்றாலம் பழத்தோட்ட பகுதியில் சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுழல் பூங்காவை முதல்வர் ஆன்லைனில் திறந்து வைத்தார் என்பதை பார்த்த உடனேயே மனதிற்குள் சந்தோஷம்.


குற்றால பிரியரான நான் உடனடியாக அங்கு ஆஜரானேன்.

பழத்தோட்ட அருவியினுள் உள்ள தோட்டக் கலைத்துறை அலுவலர் முத்துமாலை, இந்த சுற்றுச்சூழல் பூங்காவினை அங்குலம், அங்குலமாக நேசிக்கிறார் என்பது அவர் சுற்றிக் காட்டும்போதே தெரிந்தது.


அடர்ந்த காடாக கிடந்த அப்போதைய பழத்தோட்டம் அடியோடு மாறியுள்ளது. ஒவ்வொரு இடத்தையும் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். சுமார் 40 ஏக்கரில் மூங்கில் தோட்டம், வண்ணத்துபூச்சி பூங்கா, நீருற்று, மலர்த்தோட்டம், சிறுவர் பூங்கா, இளைஞர்களுக்கான சாகச பூங்கா, அருவியின் ஒசையைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட மரப்பலகை பாதை, கற்பாறை பூங்கா, பசுமை குடில், வியூ பாயின்ட் என்று ஓரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இயற்கை ஆர்வலர்கள் இந்த இடத்தை பார்த்தால் வெளியே வரவே மாட்டார்கள் அந்த அளவிற்கு இயற்கையின் அனைத்து விஷயங்களும் நிறைந்து கிடக்கிறது.


இவ்வளவு நாளும் குற்றாலத்தில் குளியலைவிட்டால் பொழுது போவதற்கு சரியான இடமில்லாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வந்ததனர், அவர்களது சுற்றுலா தாகத்தை இந்த சுற்றுச்சூழல் பூங்கா நிச்சயம் தீர்த்து வைக்கும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை வருடத்தில் 365 நாளும் விடுமுறையின்றி இந்த பூங்கா திறந்து இருக்கும்.

முக்கிய குறிப்பு: சுற்றுச்சூழல் பூங்கா பற்றிய படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியை கிளிக் செய்யவும்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
sivasankar - Chennai,இந்தியா
16-நவ-201205:34:47 IST Report Abuse
sivasankar மிகவும் அழகாக உள்ளது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
pokisham - chennai,இந்தியா
13-நவ-201210:25:38 IST Report Abuse
pokisham ஐயோ காடுதனே முக்கியம் காட்டை எங்கே போஒய் கொண்டுவருவது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
12-நவ-201223:24:44 IST Report Abuse
dori dori domakku dori அறிவார்ந்த, சுற்று சூழல் பாதுகாக்பட்ட உண்மை நிலை தகவல் . நன்றி நன்றி பல பல. வண்ணபடங்களுகும் நன்றிகள் பல உரித்தாகுக நண்பரே . படிக்கும்போதே இனிமையான மன நிலை அமைகின்றது . இப்பொது எனக்கு நினைவிற்கு வரும் ஒரே பழைய திரை பாடல்- குற்றால மலையிலே (சீர்காழியின் உன்னதமான குரல்) - உயிரா மானமா படம் - முத்துராமன் நடிப்பில் - இன்னொரு படம் - பூவா தலையா - பாடல் - போடா சொன்னா போட்டுக்கறேன் -ஸ்ரீகாந்த் , ஜெய்ஷங்கர் நடிப்பில் - superaana காலங்கள் அவை
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.