சிவகாசி
இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது.
பென்ஷன், சேமிப்பு, வசதியான வீடு என்று பணத்திற்கு பஞ்சமில்லை, ஆனால் நேர, நேரத்திற்கு சாப்பாடு கொடுக்கத்தான் ஆள் இல்லை. தங்களாலும் சமைக்க முடியவில்லை, ஆள்வைத்து பார்க்கவும் முடிவதில்லை.
முதியோர் இல்லத்திற்கு போவதற்கும் மனமும், குடும்ப கவுரவமும் இடம் தரவில்லை.
சென்னையில் பெரிய உத்தியோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர், ஒரு முறை முடியாமல் போன தன் தாய்க்கு கொஞ்ச நாளைக்கு உணவு தரச் சொல்லி கேட்கும் போதுதான் மனிதர்களின் சுயரூபம் தெரியவர அதிர்ச்சியாகிப் போனார்.
அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு, அதிலும் நோயுடன் கூடியவர்களுக்கு என்ன மாதிரியான உணவு வழங்கலாம் என்று உணவு நிபுணரின் ஆலோசனைப்படி உணவு தயாரிக்கப்படுகிறது.
காலை ஏழு மணி மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணிக்கு அவரவர் வீட்டிற்கு கொண்டு போய் "ஹாட் பாக்சில்' சூடு குறையாமல் கொடுத்து விடுகிறார். எவ்வளவு மழை பெய்தாலும், புயல் அடித்தாலும் இதுவரை தடங்கலின்றி உணவு போய் சேர்த்துவிடுவேன் ஏன் எனில் இது கடவுளின் காரியம் என்கிறார்.
இந்த சாப்பாட்டிற்கு கட்டணம் உண்டு, ஆனால் கட்டணம் வாங்குகிறோமே என்பதற்காக எல்லாருக்கும் சாப்பாடு தருவதில்லை, உண்மையிலேயே அவர்களை கவனிக்க ஆள் இல்லையா என்று பலகட்ட விசாரணைக்கு பிறகே சாப்பாடு வழங்க சம்மதிக்கிறார்.
வயதான பெரியவர்கள் பலரின் வாழ்க்கையில் உணவு என்ற அடிப்படை தேவையை தீர்த்து வைக்கும் எட்வின்தான் இப்போது அந்த பெரியவர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துகள் திரு எட்வின். இந்த நேரத்தில் என் வாழ்வில் இரு தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். இந்த தீபாவளிக்கு ஏதாவது குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பாத்த பணம் கைக்கு வராததால் என்னால் திட்டமிட்டபடி செல்ல முடியவில்லை. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு தள்ளிபோட்டிருக்கிறேன். ஆனாலும் ஒரு இறைவன் என்னை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றார். தீபாவளிக்கு முன் தினம் இரவு நடுவழியில் தடுமாறிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரை எனது இரு சக்கர வாகனத்தில் அவர் தங்கியுள்ள முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தேன். முதியோர் அல்லது குழந்தைகள் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்ற எனது ஆசை சீக்கிரம் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.