திருச்சி: பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான திருச்சியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழியின் சகோதரர் ராஜேந்திரன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து திருச்சி கேகே நகர் அன்பழகன் நகரில் உள்ள ராஜேந்திரன் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் நிபந்தனை ஜாமினில் திருச்சி தனியார் ஓட்டலில் தங்கி கையெழுத்திட்டு வரும் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் கூறுகையில், மின்வெட்டு, ஜாதி கலவரம் காரணமாக அ.தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பார்லி., தேர்தலில் அ.தி.மு.க., வை மக்கள் தோற்கடிப்பார்கள். அத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.