காந்திநகர் : குஜராத் மாநில சட்டசபை தேர்தலில், தனது தலைமையிலான அரசு மாபெரும் வெற்றி பெறும் என்றும், முடிவுகள் வெளிவரும் நாளான டிசம்பர் 20ம் தேதி தான் குஜராத்திற்கு மற்றொரு தீபாவளி என்று குஜராத் முதல்வர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி கூறியுள்ளார்.
தீபாவளித் திருநாளுக்கு மறுநாள், குஜராத் மாநில புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முதல்வர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, குஜராத் மக்கள், மாநிலத்தை இருளின் பாதைக்கு கொண்டு செல்ல ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். வளர்ச்சிப் பாதையில், கடந்த 11 ஆண்டுகாலமாக கொண்டு சென்றுள்ள தனது பணியை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தீபஒளித் திருநாளான தீபாவளியை தற்போது கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ள குஜராத் மாநில மக்கள், டிசம்பர் மாதம் 20ம் தேதி, மீண்டும் பிரமாண்ட தீபாவளியை கொண்டாட உள்ளனர். அது, ஜனநாயக தேர்தலின் வெற்றிக்கான திருவிழா ஆகும் என்று முதல்வர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில், வரும் டிசம்பர் மாதம் 13 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், டிசம்பர் 20ம் தேதி எண்ணப்பட உள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மாநில மக்களே, இந்தாண்டு தங்களுக்கு இரண்டு தீபாவளியை கொண்டாடப் போகிறீர்கள் என்று முதல்வர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் ஒன்றுபடுவோம் ; எல்லோரும் வளர்ச்சி பெறுவோம் மற்றும் நமது வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று அவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டிசம்பர் 21 ல உலகம் அழ்ஞ்சிடும்னு சொல்லுதாக. இவரு இருபதாம் தேதி தீபாவளி கொண்டாடப் போறேன்னு சொல்லுதாரு. காரியத்தை கன கச்சிதமா செய்துகிட்டு வராரு..இவருக்கு எதுக்கு இந்த உதார் பேச்செல்லாம்...அதெல்லாம் இல்லாமலே ஜெயிக்கத்தான் போறே செல்லம்...எதுக்கு சொல்லுதன்னா..இங்க தமிழ்ப் புத்தாண்டை மாத்தி வைத்தவர்களை அடுத்தப் புத்தாண்டன்னைக்கு தேடுனா காணோம்..நமக்கு எதுக்கு இரண்டாம் தீபாவளி அது இதுன்னெல்லாம்..
ஜெயிப்பது என்னவோ உறுதி... இது அனைவருக்கும் தெரிந்ததே... தீபாவளியை மக்கள் சந்தோஷமாக கொண்டாடி முடித்தாகி விட்டது... விரைவில் வர இருப்பது கிறிஸ்துமஸ் தினமும் ஆங்கில புத்தாண்டும்... சிறுபான்மையினரை இவர் ஆதரிப்பதாக இருந்தால் இவருடைய வாழ்த்து வேறு விதமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்...?.. இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.