Advertisement
ராஜபாளையத்தில் ஒரு உத்தம ராசா....
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2012,16:21 IST

ராஜபாளையம்

மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே


காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி

காவல் காப்பதற்கு ஏற்ற நாய்கள் வாங்கவேண்டுமானால் அனைவரது நினைவிற்கும் வருவது ராஜபாளையமே


தியாகிகளும், நாட்டிற்கு உழைத்த நல்லவர்களும், கொடைத்தன்மை மிக்கவர்களும் நிறைந்த புண்ணிய பூமியும் கூட

மதுரையில் இருந்து குற்றாலம் போகிறவர்களுக்கு சீசனுக்கான தூரலைத் தந்து ரம்மியமாக வரவேற்பது ராஜபாளையமே.


இப்படிப்பட்ட ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை இருப்பது நிறைய பேருக்கு தெரியாது, ராஜபாளையத்தில் இருந்து ஐயனார் கோயில் போனால் அங்குள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரை நம்பித்தான் ராஜபாளையம் உள்ளது. இந்த அணைக்கட்டோ ஐயனார் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் பெய்யும் மழையை நம்பியே உள்ளது.

ஆனால் மாறிவிட்ட இயற்கை சூழ்நிலையில் மழையை தற்போது முழுமையாக நம்ப முடியவில்லை.


இதன் காரணமாக வறண்டுவிட்ட அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பெறமுடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டுவிடும். அப்போது மக்கள் குடிநீரின்றி ரொம்பவே சிரமப்படுவார்கள்.

தண்ணீருக்காக இவர்கள் விடும் கண்ணீரை துடைப்பதற்காக, அணைக்கட்டை ஒட்டியுள்ள பகுதியில் பண்ணை வைத்துள்ளவர்கள், தாங்களே முன்வந்து தங்களது கிணற்று நீரை வழங்க முன்வந்தனர். அவர்களில் முதன்மையானவர்தான் ராமசுப்பிரமணிய ராஜா.


ராஜபாளையத்தில் இரண்டாவது தலைமுறையாக மின்சாதன பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் ராமசுப்பிரமணிய ராஜா, தனது தந்தை அழகர்ராஜாவின் சந்தோஷத்திற்காக, ஐயனார் கோயில் போகும் வழியில் பெரிய தோப்பு ஒன்றை வாங்கிப்போட்டார்.

அந்த தோப்பில் மோசமான நிலையில் இருந்த கிணற்றை பெரும் செலவு செய்து சீரமைத்தார், கிணற்றுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம், சீரமைப்பு என்று பலரும் கேட்டபோது கிடைக்காத பதில் சீரமைத்து முடிந்த பிறகு கிடைத்தது. ஆம் சுற்றுபக்கம் எதிலும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நன்றாக ஊற்றெடுத்தது.


கிணற்றில் நீர் நிரம்பி இருந்ததால் தோப்பில் வாழை, தென்னை, மா என நிறைய மரங்களை வைத்து மகசூல் பார்த்தார். இந்த நேரத்தில்தான் ராஜபாளையத்தை குடிநீர் பிரச்னை வாட்டி எடுத்தது.

கொஞ்சமும் யோசிக்காமல் தனது கிணற்று நீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலவசமாக வழங்கினார். ஒரு லாரியில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் ஒரு நாளைக்கு முப்பது லாரி தண்ணீர் வரை எடுத்துச் செல்கிறார்கள். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல அறுபது நாள் வரை எடுத்துச் சென்றார்கள். இதனால் ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை ஒரளவு குறைந்தது.


இது நடந்து பத்து வருடம் இருக்கும், அதன் பிறகு கடந்த பத்து வருடங்களாக எப்போதெல்லாம் ராஜபாளையத்திற்கு குடிநீர் பிரச்னை என்றாலும் உடனே இவரது கிணற்று நீருக்கு லாரிகள் படையெடுத்துவிடும்.

ஒரு வருடம் மோசமான குடிநீர் பிரச்னை, கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் எடுத்துச் சென்றார்கள், இப்படியே தண்ணீர் எடுத்தால் தோட்டத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிடும் ஆகவே எடுத்த வரை போதும் என்று சொல்லுங்கள் என்று பண்ணையாட்கள் ராமசுப்பிரமணிய ராஜாவிடம் கூறியபோது, குடிநீர் இல்லாமல் மனித உயிர்களே வாடும் போது பயிர்களா முக்கியம் என்று சொல்லி தடையின்றி தண்ணீர் கொடுத்தவர்.


இத்தனை வருடங்களாக இவர் தண்ணீர் கொடுத்து வந்தாலும், இவர்தான் தண்ணீர் கொடுக்கிறார் என்று பல அங்குள்ள பலருக்கே தெரியாது, காரணம் கொடுக்கும் இவரும் சொல்லிக் கொண்டது இல்லை, வாங்கும் நகராட்சியும் வெளியே சொன்னது இல்லை.

தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடாமல் தண்ணீரை எடுத்துச் சென்று சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, அங்கு இருக்கும் பணியாளர்களை உற்சாகப்படுத்துவார்.


நான் செய்யுறது சாதாரண காரியமுங்க எனக்கு எந்த நன்றியும் வேண்டியதில்லீங்க... நன்றியெல்லாம் இறைவனுக்கும், இயற்கைக்கும் செலுத்துனா போதுமுங்க என்று சொல்லும் ராமசுப்பிரமணிய ராஜாவை வாழ்த்த நினைப்பவர்களுக்கு அவரது எண்: 09842163864.

- எல்.முருகராஜ்






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (83)
thanjai devarajan - accra,கானா
19-பிப்-201317:03:16 IST Report Abuse
thanjai devarajan தங்களின் இந்த அறிய சேவை தொடர எனது நல்வாழ்த்துக்கள் அன்புடன் தஞ்சை தேவராஜ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
05-ஜன-201303:26:04 IST Report Abuse
Gilbert karunagaran "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" - என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப, தமக்கு நீரைக் கொடுக்கின்ற மேகங்களுக்கு உயிர்கள் என்ன கைம்மாறு செய்கின்றன ? அம்மேகங்களை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு கருதி செய்யப்படுவன அல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
selvam - tiruvannamalai  ( Posted via: Dinamalar Android App )
18-டிச-201218:33:04 IST Report Abuse
selvam உங்கள் செயல் ஒரு முன்னோடியா இருக்கணும் நன்றி ஐயா
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
14-டிச-201215:25:42 IST Report Abuse
p.manimaran உங்கள் செயலை நான் பாராட்டுகிறேன்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Balaji - rajapalayam,இந்தியா
24-நவ-201211:23:51 IST Report Abuse
Balaji உலகிற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்ட திகல்கீறீர்கள்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
பூவா ragavan - Chennai,இந்தியா
24-நவ-201210:58:24 IST Report Abuse
பூவா ragavan அய்யா நல்ல பணி நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன், அதே நேரம். மழை வரவர குறைந்துகொண்டே வருகிறது. மலையில் விழுகிற மழை சேர்ந்து கிணற்றுக்கு வந்து சேருகிறது. மழை நிறைய பெய்வதற்கு என்ன வாய்புகள் இருக்குமோ அவற்றை யோசியுங்கள். நீங்கள் ராஜா. நமெக்கெல்லாம் ராஜா மழைதான். மழை நிறைய பெய்வதற்கு மரங்களே ராஜா. மரங்களை வளர்ப்பதற்கு மனிதர்களே ராஜா. மனிதர்களே வாழ்நாளில் ஒரு மரத்தை வளர்த்துவிடுங்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மரம் என்று வளர்க்கவேண்டும். வளர்க்க ஏற்பாடு செய்யுங்கள் வளருங்கள். நிம்மதியாக வாழுங்கள். நன்றியுடன் மனிதன்....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Ambedkumar - Chennai,இந்தியா
24-நவ-201209:27:05 IST Report Abuse
Ambedkumar சென்னை அதன் சுட்ட்றுப் புறங்களில் தண்ணீரை விற்றே கோடீஸ்வரர் ஆனவர் பலர் உண்டு! நீங்கள் முற்றிலும் வித்தியாசமானவர். வாழ்த்துக்கள்!
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
ராமநாதன் ganesh - chennai,இந்தியா
24-நவ-201209:17:53 IST Report Abuse
ராமநாதன் ganesh This is Sanathana Dharmam. This is India. A great linving example insist on nothing and expect nothing. As he said we pray God that his well is always full like "Purnam idha, Purnam adha...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ராமநாதன் ganesh - chennai,இந்தியா
24-நவ-201209:08:09 IST Report Abuse
ராமநாதன் ganesh This is Sanadhana Dharmam. This is India. Living by example .. expect nothing and insist on nothing..just do your duty. Great example
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
karthikeyan - bangalore,இந்தியா
24-நவ-201205:54:39 IST Report Abuse
karthikeyan வாழ்த்தும் வயதில்லை வணங்குகிறோம்..... வாழ்க பல்லாண்டு... ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.