திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவராக ஜெயக்கொடி (அ.தி.மு.க.,) உள்ளார். இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க.,வில் சிலரும், தி.முக.,வினரும் முயற்சி எடுத்துள்ளனர். மொத்தம், அ.தி.மு.க., 12, தி.மு.க., ஆறு என, 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், ஏழு அ.தி.மு.க., கவுன்சிலர்களும், தி.மு.க,வைச் சேர்ந்த, ஆறு கவுன்சிலர்களும், தலைவர் ஜெயக்கொடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, டி.ஆர்.ஓ., மனோகரனிடம் மனு தந்தனர். பழனிச்சாமி தலைமையில்,
அ.தி.மு.க.,வினர் தந்த மனு: ஒன்றியத்தில் அரசு திட்டங்களில் முறைகேடு நடக்கிறது. எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
ராஜாமணி தலைமையில் தி.மு.க.,வினர் தந்த மனு: ஒன்றியத்திற்கு யார் தலைவர் என்று தெரியவில்லை. ஜெயக்கொடியின் கணவர், மகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ராஜ்மோகன் தலைவர்களாக செயல்படுகின்றனர். மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை எடுக்க, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.