Advertisement
பறவைக்காய்ச்சலில் இறந்தாரா மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012,12:32 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 23,2012,13:00 IST

சென்னை: முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அவரது உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் (75) நுரையீரல் பிரச்னை காரணமாக சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் கடும் முயற்சி செய்தும், இன்று காலை 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.



பறவைக்காய்ச்சல் காரணமா?



இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக மரணடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.


3 நாள் துக்கம்:



வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சேலத்தில் கடையடைப்பு:





வீரபாண்டி ஆறுமுகம் காலமானதையடுத்து, சேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


ஸ்டாலின் இரங்கல்:


வீரபாண்டி ஆறுமுகம் மரணடைந்ததை தொடர்ந்து, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மரணம் தி.மு.க.,விற்கு இழப்பு என கூறியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (168)
Alagarasu Natesan - Chennai,இந்தியா
24-நவ-201214:14:13 IST Report Abuse
Alagarasu Natesan அவரது இழப்பு தி.மு.க-வுக்கு பெரிய இழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நல்ல மனதிடத்தை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-நவ-201213:02:29 IST Report Abuse
Nallavan Nallavan "பறவைக் காச்சலில் இறந்தாரா?" ஏன் இந்த ஆராய்ச்சி? மழை பெஞ்சு பயிர் செழிச்சா அதை ஆராய்வோமா? நோய் குணமாயி உடம்பு தேறினா அதை ஆராய்வோமா?
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
24-நவ-201210:57:14 IST Report Abuse
ஸ்ரீதர் சித்தையன் திருச்சிக்கு வருவதாக இருந்த சூப்பர் ச்பெசியாளிட்டி மருத்துவமனையை சேலம் மற்றும் அதனை சுற்றயுள்ள மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்காக போரடி வாங்கிவந்த மகத்தான தலைவர் என்பதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.சேலம் மற்றும் அதனை சுற்றயுள்ள மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
Rate this:
18 members
0 members
5 members
Share this comment
Sridhar - Salem,இந்தியா
24-நவ-201210:40:55 IST Report Abuse
Sridhar வீரப்பாண்டி ஆறுமுகம் அவர்களின் ஆத்மா சாந்திஅடைய வேண்டுகின்றேன்.ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி தேவை இல்லாத வதந்திகளை பரப்புவது நியாயம் இல்லை.....
Rate this:
5 members
0 members
3 members
Share this comment
saravanakumar - பொள்ளாச்சி,இந்தியா
24-நவ-201210:18:46 IST Report Abuse
saravanakumar நல்ல தலைவர்..அவரது ஆன்மா சாந்தி adaiyattum...
Rate this:
8 members
0 members
1 members
Share this comment
vayalum vazhvum-saravanakumar - doha,கத்தார்
24-நவ-201210:07:16 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar ஒருவர் இல்லாத போதுதான் அவரின் பெருமையை மக்கள் பேசுவார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் தான் அய்யா அவர்கள் இவரால் தான் எனக்கு படிக்க உணவு கிடைத்தது ( இவர் தான் ஸ்டாலின் அவர்களிடம் சொல்லி எனக்கு hostelil தங்கி படிக்க வழி செய்தார் ) இன்றைக்கு நான் இங்கு இருந்து எழுத எனக்கு வழி செய்ததது திமுகவில் உள்ள சில நல்ல இதயங்கள் தான் வாழ்க அவரது புகழ்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-நவ-201213:25:01 IST Report Abuse
Nallavan Nallavanஅப்படி அல்ல ஒருவர் இல்லாத பொழுதுதான் அவரைப்பற்றிய உண்மையான விமர்சனங்கள் வெளிவரும்...
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
கார்த்திகேயன் - chennai,இந்தியா
24-நவ-201208:47:49 IST Report Abuse
கார்த்திகேயன் சேலத்து சிங்கம் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றும் நம்முடன் நிற்கும். அவர் தம் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். எதற்கும் அஞ்சாத மன ஆற்றல் கொண்ட அன்னாரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
p.samy - dibba,இந்தியா
24-நவ-201208:45:16 IST Report Abuse
p.samy DMK is the big tree . the tree is loss the root.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
முகமது இம்ரான் - கோவை,இந்தியா
24-நவ-201207:57:11 IST Report Abuse
முகமது இம்ரான் அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
ப.கலைமணி - குட்டியண்டியூர்.,இந்தியா
24-நவ-201207:53:11 IST Report Abuse
ப.கலைமணி ஆன்மா சாந்தி அடைய இறைவனை ப்ராதிகேரன்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.