Advertisement
பகத்சிங்குடன் கசாப்பை ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார் ராம்தேவ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2012,15:39 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 24,2012,17:29 IST

புதுடில்லி: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு, பகத் சிங் போல ஹீரோ மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள எரவாடா சிறையில் மிகவும் ரகசியமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யோகா குரு பாபா ராம்தேவ் கசாப் தூக்கிலிடப்பட்ட விதம் குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது தெரிகிறது. அஜ்மல் கசாப் ஒரு ஹீரோ போல் சித்தரிக்கப்பட்டுள்ளார். லாகூர் சிறையில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது போல, எரவாடா சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார். இதை விடுத்து கசாப் பொதுமக்கள் முன்னிலையில், பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.



கடந்த சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, சுவாமி விவேகானந்தரின் அறிவுத்திறனையும், தாவூத் இப்ராகிமின் அறிவுத்திறனையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ராம்தேவின் இந்த ஒப்பீடு அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் இது சிறந்த ஒப்பீடு இல்லை. இதை ராம்தேவ் தவிர்த்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-201217:37:52 IST Report Abuse
Swaminathan Nath இவர் ஒன்றும் பகத் சிங்கை ஒப்பிட வில்லை, இவனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது எனபது தான் இதன் கருது. வாழ்க பாரதம்.
Rate this:
8 members
0 members
50 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-நவ-201216:11:11 IST Report Abuse
villupuram jeevithan எப்படியோ பெயர் பத்திரிகையில் வரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருக்கு என்பது நன்றாக் புரிகிறது நமக்கு.
Rate this:
9 members
1 members
18 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.