சென்னை:"தலித் மக்கள் மோசமானவர்கள்' என, சித்தரித்து, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதே கட்சியின், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி, போலீஸ் கமிஷனரிடம், வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.வழக்கறிஞர் ரஜினிகாந்த் அளித்த புகார் விவரம்:
தர்மபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய், நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் பகுதிகளுக்குள், ஒரு தரப்பினர் நடத்திய வன்முறை சம்பவம் தொடர்பாக, கடந்த 17ம் தேதி, சென்னையில், பத்திரிகையாளர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., ஆகியோர் பேட்டி அளித்தனர்.தலித் மக்கள் வாழும் பகுதிகளில் செல்லும், பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், மாணவியருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. இதனால், பல மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என, தெரிவித்துள்ளனர்.
அதாவது, தலித்துக்களை மோசமானவர்கள் என, சித்தரித்து, இழிவுபடுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.இதில், மிகப்பெரிய விஷமத்தனம் அடங்கியிருக்கிறது. பிற சமூகத்தினரை தூண்டிவிட்டு, பகைமையை ஏற்படுத்தி, அதில் ராமதாஸ் குளிர்காய நினைக்கிறார்.தலித்கள் மோசமானவர்கள், சமூக விரோதிகள் என, பொது இடத்தில் இழிவு படுத்திய அவர்களது செயல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான் வன் கொடுமை தடுப்புச் சட்டப் படி, தண்டனைக்குரிய குற்றம். எனவே, ராமதாஸ் மற்றும் காடு வெட்டி குரு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சாதியின் பெயரை சொல்லி மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு , அவர்களுக்கு சாதிவெறியினை உண்டாக்கி வன்முறையை தூண்டி விட்டு அதன் மூலம் பலரது கவனத்தை திசை திருப்பி தேர்தலில் நினைத்ததை சாதித்து கொள்கின்றனர் இவர்கள் .... இவற்றின் ஆணிவேராக இருப்பது சாதியையும் அதற்கான இட ஒதுக்கீடும் தான் ... முதலில் வருமான சான்றிதலின் அடிப்படையில் பள்ளியில் சேர்ப்பும் , இடஒதுக்கீடும் கொண்டு வர வேண்டும் .... சாதி பெயரில் எந்த சலுகையும் தர கூடாது ... எல்லா சாதியிலும் பொருளாதரத்தில் பின்தங்கியவன் இருக்கிறார்கள் .... ஆகவே சட்டத்தை முதலில் மாற்றி அமைக்க வேண்டும் ... அப்படி என்றால் தான் 2050 லாவது இந்த மாதிரி சாதி சண்டைகள் ஒழிய வாய்ப்புள்ளது ... ராமதாஸ் தான் தருமபுரி கலவரத்துக்கு காரணம் என்பது அவரது முந்தைய பேச்சுகளே அதற்கு சான்று ... தவறு செய்தல் தண்டனை கட்டாயம் தரபடல் வேண்டும் ...
நீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியே. ஆனால் இது ஓட்டு வாங்கும் வழியில்லையே. MGR இதை மாற்ற நினைத்தபோது மற்ற எலா ஓட்டுப் பிச்சிகாரர்களும் ஒன்று கூடி அதை முறியடித்தனர். BE, ME மற்றும் MBBS படித்து நல்ல பதவியிலுள்ளவர்கள் தங்கள் BC, OBC, MBC SC ST சான்றிதழ்களை தாங்களாக முன் வந்து தூக்கி எறியாதவரையில் இந்த கூத்து நிற்காது....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.