வாளையார்:தனியார் வங்கியின் மதுரை கிளையிலிருந்து, கொச்சி கிளைக்கு, போலி ஆவணங்களை பயன்படுத்தி, எடுத்துச் சென்ற, 30 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகளை, சோதனை சாவடி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தின் கோவை மற்றும் கேரளாவின் பாலக்காடு இடையே, எல்லை பகுதியில், வாளையார் சோதனை சாவடி உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் வாகனம் ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 100 கிராம் எடை கொண்ட, 500 தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது. அவற்றின் மதிப்பு, 30 கோடி ரூபாய்.இது குறித்து வாகனத்தில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தனியார் வங்கி ஒன்றின் மதுரை கிளையில் இருந்து, கொச்சி கிளைக்கு எடுத்துச் செல்வதாக கூறினர்.இதையடுத்து அவர்கள் அளித்த ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதித்த போது, அவற்றில் முறைகேடுகள் செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, வாகனத்தையும், தங்க கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.