மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை கோரிய வழக்கில், அவர் பதில் மனு தாக்கல் செய்ய, மதுரை கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை ஆதீனம் அருணகிரி தாக்கல் செய்த மனு: ஆதீன சொத்துகளை நிர்வகிக்க நானும், ஏற்கனவே இளைய ஆதீனமாக இருந்த நித்யானந்தாவும் அறக்கட்டளை துவக்கினோம். அவரை நீக்கிவிட்டதால், அறக்கட்டளை கலைக்கப்பட்டு விட்டது. இதை, மதுரை தெற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில், ஏற்கனவே பதிவு செய்தோம். அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனு குறிப்பிட்டு உள்ளார். மதுரை, சப்-கோர்ட் நீதிபதி குருவைய்யா முன், மனு விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கையும், ஏற்கனவே மடம் நிர்வாகத்தை, அரசே ஏற்க அறநிலையத் துறை தாக்கல் செய்த மனுவையும், நவ., 27க்கு ஒத்திவைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.