சென்னை: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தி.மு.க., ஆதரவு அளிக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் மத்திய அரசு கவிழாமல் இருக்கவே இந்த கசப்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடர் இம்மாதம், 22ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கிய முதல்நாளில் இருந்தே, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பார்லிமென்டில் கடும் அமளி ஏற்பட்டது. பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இந்தக் கூட்டத்தொடரை, சுமுகமாக நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு, பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, விவாதத்துடன் கூடிய, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற நோட்டீசை, இடதுசாரி கட்சிகள் அளித்துள்ளன. ஏற்கனவே கருணாநிதி, "சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்காது' என, திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் காங்., தலைவர் தங்கபாலு ஆகியோர் அவருடன் சுமார் 1.20 மணி நேரம் பேசினர். அப்போது, ராஜ்யசபா எம்.பி., கனிமொழியும் உடனிருந்தார். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் கொண்டு வரப்பட்டால், மத்திய அரசுக்கு ஆதரவாக தி.மு.க., ஓட்டு அளிக்க வேண்டும் என, குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டார். அப்போது அதற்கு கருணாநிதி, எந்த உத்தரவாதமும், உறுதியும் அளிக்கவில்லை. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளில், தி.மு.க.,விடம் கலந்தாலோசிக்கவில்லை என்ற வருத்தத்தை, குலாம் நபி ஆசாத்திடம், கருணாநிதி வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை தி.மு.க., ஏற்கவில்லை. அதை எதிர்க்கிறது. இந்நிலையில், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோருவது போல, விதி எண் 184ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தால் அதன் காரணமாக மத்திய அரசு கவிழக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அதன் விளைவாக மத்தியில் பா.ஜ.,வோ அல்லது அதன் ஆதரவு பெற்ற கட்சியோ ஆட்சிக்கு வருமானால், இன்னும் எத்தனை ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்கள், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்கள் என மதவாத பயங்கரங்கள் ஏற்படும் என்பதை எண்ணிப்பார்த்து, அத்தகைய மதவாத அரசோ, ஊழல் பீதிகளை கிளப்பி வஞ்சக வலையில் மக்களை சிக்க வைக்கும் அரசோ வந்து விடக்கூடாது என்பதற்காக மத்தியில் தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக எடுத்த முடிவு கட்டாயப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் சில்லரை வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எத்தகைய இடையூறும் வராது என்ற நம்பிக்கையில் இவ்விஷயத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத்திய அரசுக்கு தி.மு.க., ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பி.ஜே.பி இரவோடு இரவாக, கலைஞரிடம் பேரம் பேசி,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மந்திரி பதவியும் உண்டு, கனிமொழியின் வழக்கும் நீர்த்துப்போகும் என்று வாக்குறுதி கொடுத்தால் போதும். கலைஞர் கட்சி மாறி வாக்களிப்பர். மதவாதம், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, ஸ்பெக்ட்ரம் போன்ற இப்பொழுது சுமத்தும் குற்றசாட்டுக்கள் அவரை பார்த்து சிரிக்கும்.
தான் மஞ்சள் துண்டு அணிந்ததற்கு பல காரணங்களை இதே போல அடுக்கினார் இவர். அதே போல முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கும் பல காரணங்களை அடுக்கினார். உண்மையான காரணம் என்றால் ஒரு காரணத்தைச் சொல்லிவிடலாமே உண்மையைப் பட்டென்று நேரிடையாகச் சொல்லவும் ஒரு தைரியம், ஒரு பவ்ருஷம் வேண்டும் அது இவர்களிடம் இல்லை அது சரி....அலைக்கற்றை வழக்கு புதைக்கப்படும் வரை என்று வெட்கம் கெட்டுச் சொல்லவா முடியும்? என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்
மதிய அரசு, இலங்கை அரசுக்கு துணை போகிறது என்ற குற்றச்சாட்டு, பேசப்படுகிறது. இலங்கை அதிபருக்கு
இங்கு இரத்தின கம்பளம் விரிக்கப்படுகிறது. இவர் மாநாடு நடத்தி, தனியாக, ஐக்கிய நாடு சபய்க்கு, மத்திய ஆட்சியில் பங்கு பெற்றும், மகஜர் கொடுக்கிறார் அதேபோல், பா.ஜ. கா.வுடன் கூட்டு மந்திரிசபையையும் அனுபவித்து விட்டு, இப்பொழுது கசக்கிறது, பின்னர் பா.ஜா.கா. ஜெயித்தால் அடுத்த தடவை திரும்ப சேருவார். அரசியிலில் நிரந்தர பகைவர், நண்பர் இல்லை என்பார் மக்கள் ....??வாழ்க ஜனநாயகம்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.